Thursday, August 7, 2008

அதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்

அண்ணாசாமி ஒரு சமயம் கர்ப்பிணி பெண் ஒருத்தியைப் பார்த்தார்.அவருடன் வந்த நண்பர்
அந்த பெண் pregnant ஆக இருக்கிறார் என்றார்.அண்ணாசாமிக்கு வழக்கமான சந்தேகம் வந்தது.
pregnant என்றால்..என்று நண்பரைக்கேட்க நண்பரும் pregnant என்றால்one who carries a child
என்றார். வேறு ஒரு சமயம்...அண்ணாசமியின் வீட்டுக்கு அருகில் ஒரு அடுக்ககம் தீப்பிடித்து எரிந்தது.
மேல் மாடியில் ஒரு குழந்தை மாட்டிக்கொண்டது.அதை ஒரு தீ அணைப்பு வீரர் கயிறு மூலமாக தன் வயிற்றில்
கட்டி இறங்கினார்.அதைப் பார்த்த அண்ணாசமி உடனே 'he is pregnant..he is pregnent' கத்தினார்.
2.ஒரு சமயம் அண்ணாசாமிக்கு துப்பறியும் நிறுனமொன்றில் வேலைக்கு interview வந்தது.ஒரு புகைப்படத்தை கொடுத்து 'இந்த புகைப்படத்தில் உள்ளவன் ஒரு கிரிமினல்..புகைப்படத்தைப் பார்த்து அவனைப்பற்றி நீங்கள்
அறிந்ததைக் கூறுங்கள்'என்றனர்.
அதைப்பார்த்த அண்ணாசாமி உடனே'இவன் ஒரு கண் உள்ளவன்..கண்ணாடி போடாதவன்'என்றார்.
அவரைப் பாராட்டிய அதிகாரிகள் 'எப்படி கண்டுபிடித்தீர்கள்'என வியப்புடன் கேட்டனர்.அண்ணாசாமி'நீங்கள் கொடுத்த புகைப்படத்திலேயே தெரிகிறதே'என்றார்.அவருக்கு கொடுத்திருந்த புகைப்படம் அந்த கிரிமினலின்
'side profile'புகைப்படம்.

10 comments:

சின்னப் பையன் said...

1. :-)))
2. அவ்வ்வ்வ்....

கோவி.கண்ணன் said...

//அவருக்கு கொடுத்திருந்த புகைப்படம் அந்த கிரிமினலின்
'side profile'புகைப்படம்.//

:)

Kanchana Radhakrishnan said...

ச்சின்னப்பையன் ம்ம்ம்ம்ம்ம்ம்...அழுதுடுவேன்

Kanchana Radhakrishnan said...

நன்றி கோவி சார்

மங்களூர் சிவா said...

இதை சர்தார் ஜோக்காக கேள்விப்பட்டிருக்கிறேன். இனிமை.

Kanchana Radhakrishnan said...

சர்தார் என்றால்..சர்தார்ஜிக்கள் கோபித்துக் கொள்ளப்போகிறார்களே என்றுதான்...அண்ணாசாமி ஆக்கிட்டேன்.

Anonymous said...

:-))))))

Kanchana Radhakrishnan said...

நன்றி வேலன்

Sridhar V said...

//உடனே'இவன் ஒரு கண் உள்ளவன்..கண்ணாடி போடாதவன்//

அப்படி சொல்லியிருக்க மாட்டாரே அண்ணாசாமி.

'இவன் கண்ணில் காண்டாக்ட் லென்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறான்' என்பார்.

உண்மையிலேயே அவன் காண்டாக்ட் லென்ஸ் போட்டுக் கொண்டிருப்பவனாக இருப்பதைப் பார்த்து போலிசாருக்கு ஆச்சர்யம். எப்படி கண்டுபிடித்தீர்கள்? என்று கேட்டால்...

'இவனுக்கு ஒரு காதுதான் இருக்கிறது. அதனால் கண்ணாடி போட முடியாது' என்பார் அண்ணாசாமி.

இப்ப ஜோக் சரியா இருக்கா? :-)

Kanchana Radhakrishnan said...

அப்பட்டமா..அப்படியே எழுதினா..எப்படி..அதனால கொஞ்சம் மாற்றம் அவ்வளவுதான் ஸ்ரீதர்