Saturday, August 9, 2008

ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே.....

என்று மனைவியைத்தவிர வேறு பெண்களைப்பார்த்து நாம் சொல்வோம்.(மனைவிக்கூட காதலியாய் இருந்த போது இப்படி புளுகி இருப்போம்) அந்தப் பெண்ணும்..தான் எப்படி இருக்கிறோம் என்பது தெரிந்தும்..நம் புகழ்ச்சியில் மனம்
மயங்கி கண்ணாடியில் தன்னை அடிக்கடி பார்த்துக்கொள்வாள்.ஆனால் இனிமேல் அப்படி முடியாது.
இஸ்ரேல் விஞ்ஞானிகள் ..கம்ப்யூட்டருக்கு எப்படிப்பட்ட பெண் அழகானவள் என சொல்லிக்கொடுத்து இருக்கிறார்களாம்.அதன்படி ஒரு பெண்ணின் மேக்கப்,நடை,உடை.பாவனை ஆகியவற்றை வைத்துஅழகை கம்ப்யூட்டர்
தீர்மானிக்குமாம்.அழகை தன் மொழியில் கிரகித்து முடிவை சொல்லுமாம்.
ஜாக்கிரதை...இனி நீங்கள் யாரையாவது, அழகாய் இருக்கிறாய் என சொல்லிவிட்டு.,அவளூம் ஆசையுடன் தன்
படத்தை கம்ப்யூட்டரில் போட்டுவிட்டு, மௌசை கிளிக்கினால் நம் பொய் வெட்ட வெளிச்சமாய் ஆகிவிடும்

7 comments:

சின்னப் பையன் said...

என்ன கொடுமை சார் இது???

சின்னப் பையன் said...

அப்போ இனிமே பொய் சொல்லவே முடியாதா????

Kanchana Radhakrishnan said...

//அப்போ இனிமே பொய் சொல்லவே முடியாதா????//





அரசியல்வாதிங்க பொய் சொல்றதயும் காட்ட ஒரு கணினி வருமா

goma said...

தமிழா தமிழா
அழகை ,அளவெடுக்கும் கணினி வந்ததில் தமிழாவுக்கு என்ன அப்படி ஒரு சந்தோஷம்?எல்லா உண்மைகளையும் கண்டு கொண்டால் உலகம் சுற்றுவதை நிறுத்திக் கொள்ளும்.வாழ்க்கையில் சில பொய்கள் தேவைதான்

goma said...

பார்த்தீர்களா, அதற்குள், சின்னப்பையனும் காஞ்சனாராதாகிரிஷ்ணனும் பட படக்க ஆரம்பித்து விட்டார்கள்

Kanchana Radhakrishnan said...

//goma said...
தமிழா தமிழா
அழகை ,அளவெடுக்கும் கணினி வந்ததில் தமிழாவுக்கு என்ன அப்படி ஒரு சந்தோஷம்?எல்லா உண்மைகளையும் கண்டு கொண்டால் உலகம் சுற்றுவதை நிறுத்திக் கொள்ளும்.வாழ்க்கையில் சில பொய்கள் தேவைதான்//
????!!!!

Kanchana Radhakrishnan said...

//பார்த்தீர்களா, அதற்குள், சின்னப்பையனும் காஞ்சனாராதாகிரிஷ்ணனும் பட படக்க ஆரம்பித்து விட்டார்கள்//


அழகைப் பற்றி உங்களுக்கு கவலை இல்லை..நாங்கள் கவலைப்படுகிறோமே