Thursday, December 11, 2008

அதி புத்திசாலி அண்ணாசாமியும்..ஊழலும்..

கொஞ்ச நாட்களாக மத்திய அரசை திட்டிக்கொண்டிருந்த அண்ணாசாமி திடீரென புகழ ஆரம்பித்து விட்டார்.

மும்பையிலே குண்டு வெடிச்சா தில்லி லே இருக்கிறவங்களுக்கு எப்படி காது கேட்கும்..அதனால் மத்திய அரசை இந்த விஷயத்தில் குறை சொல்லக்கூடாது.இதுவரை இருந்த பிரதமர்களிலேயே மன்மோகன் சிங் தான் பெஸ்ட்..சோனியா மாதிரி ஒரு ஒப்பற்ற தலைவர் 1885ல் காங்கிரஸ் ஆரம்பிச்சதிலிருந்து இப்போதான் கிடைச்சிருக்காங்க.இப்படிப்பட்ட காங்கிரஸ் அரசை தேர்ந்தெடுக்காத மத்திய பிரதேஷ்,சட்டீஸ்கர் மக்கள் கஷ்டப்படப்போகிறார்கள்.இப்படியெல்லாம் பார்த்தவர்களிடையே எல்லாம் பேத்த ஆரம்பித்து விட்டார்.

அதி புத்திசாலியின் நண்பர் ஒருவர்..இது பற்றி அவரிடம் கேட்க..

யாரிடமும் சொல்லக்கூடாது என்று அண்ணாசாமி சொன்ன விஷயம்.

'என் மீது வருவாய்க்கு அதிகமா சொத்து சேர்த்த வழக்கு இருக்கிறது.மத்திய அரசை ஆதரிச்சா வழக்கை வாபஸ் வாங்கிடுவாங்க' என்றார்.

(முலாயம்சிங் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு . உச்ச நீதி மன்றத்தில் இருந்தது..கம்யூனிஸ்ட்கள் மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் வாங்கியதால்..காங்கிரஸ் அரசு கவிழாமல் இருக்க முலாயம் தன் கட்சி ஆதரவை அளித்தார்.இப்போது அவர்மீது இருந்த வழக்கு வாபஸ் ஆனது..அதற்கும் நம் அண்ணாசாமியின் முடிவுக்கும்சம்பந்தம் ஏதுமில்லை)

6 comments:

ஷங்கர் Shankar said...

//** 'என் மீது வருவாய்க்கு அதிகமா சொத்து சேர்த்த வழக்கு இருக்கிறது.மத்திய அரசை ஆதரிச்சா வழக்கை வாபஸ் வாங்கிடுவாங்க' **//


கலக்கிட்டீங்க போங்க!

அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்!!!!!!

மணிகண்டன் said...

அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்!!!!!!

repeatuu

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// ஷங்கர் Shankar said...
//** 'என் மீது வருவாய்க்கு அதிகமா சொத்து சேர்த்த வழக்கு இருக்கிறது.மத்திய அரசை ஆதரிச்சா வழக்கை வாபஸ் வாங்கிடுவாங்க' **//


கலக்கிட்டீங்க போங்க!

அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்!!!!!!///

;-))))))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

///மணிகண்டன் said...
அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்!!!!!!

repeatuu///

repeatuu

ILA (a) இளா said...

:))

T.V.ராதாகிருஷ்ணன் said...

// ILA said...
:))///

nanri Ila