Friday, October 12, 2012

மாற்றான்..(ஒரு மாற்றான விமரிசனம்)




விமல்,அகில் என ஒட்டிப் பிறக்கும் குழந்தைகள் .இந்த இரட்டை குழந்தைகளுக்கு எல்லா உறுப்புகளும் வேறு வேறாக இருந்தாலும்..இதயம் மட்டும் ஒன்றுதான்.இதயம் விமலின் உடலில் உள்ளதாம்.விமல் வல்லவன், நல்லவன்.அகில் நேர்மாறானவன்.

இந்நிலையில் இவர்கள் தந்தையின் அலுவலகத்தில்..குழந்தைகள் பானத்தில் கலக்கப்படும் ..கெடுதலான ஊக்க மருந்து பற்றி விமல் கண்டுபிடிக்க..அவன் கொல்லப்படுகிறான்.விமலின் உடலில் இருந்த இதயம் அகிலுக்கு பொருத்தப்படுகிறது.

விமலின் இதயம் கிடைத்ததுமே அகில் குணம் மாறி நல்லவனாக ஆகிறான்.(மனிதர்களில் நல்லவன்..கெட்டவன் ஆகியவற்றை தீர்மானிப்பது இதயமோ..?!)

பின் அகில் தன் காதலியுடன் வெளிநாடு சென்று...ஊக்க மருந்து விஷயங்களை கண்டுபிடித்து...நடந்த தவறுகளை திருத்துகிறான்..

இப்படியாக போகிறது கதை.ரொம்பவும் மெனக்கட வேண்டாத கதை.

முழுக்க ,முழுக்க படத்தை சூர்யா தன் தோள்களில் சுமக்கிறார்.அதில் வெற்றியும் பெறுகிறார்.

கிராஃபிக்ஸ் வேலைகள் எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை.

காதலியாக வரும் காஜல் 'பளீச்" என அனைவரையும் வசீகரிக்கிறார்.

பாடல்கள் சுமார் ரகம் தான்.

மொத்ததில்..சாதாரணமாக படம் பார்க்கும் அனைவரும் ஒரு முறை பார்க்கலாம்.சூர்யா ரசிகர்கள் பலமுறை பார்ப்பர்.வசூலில் படம் வெற்றி பெறும்.

(டிஸ்கி- கண்ணதாசன் நடத்தி வந்த பத்திரிகையில் ராசிபலன் எழுதுபவர் அந்த வாரம் எழுதவில்லையாம்.உடனே கண்ணதாசன் முந்தைய வார இதழ்கள் சிலவற்றை எடுத்து..ராசி பலன்களை அதில் இருந்தபடி ராசிகளுக்கு மாற்றி மாற்றி எழுதி வெளியிட்டாராம்.
அப்படியே..நாமும்..படம் பார்க்காமல்..சில விமரிசனங்களைப் படித்து விமரிசனம் எழுதினால் என்ன? எனத் தோன்றியதன் விளைவே இவ்விமரிசனம்)

Thursday, October 11, 2012

கொடிது..கொடிது..ஃபேஸ்புக் கொடிது...




இளமையில் வறுமை கொடிது... என்பார்கள்..

ஆனால்..இப்போது எல்லாவற்றையும் விட ஃபேஸ்புக் பழக்கம் கொடிது என ஒரு ஆய்வு அறிக்கை சொல்கிறதாம்.
 
சிகாகோ பல்கலைக்கழகத்தின் பூத் பிசினஸ் பள்ளி இதுதொடர்பாக ஒரு ஆய்வை நடத்தியது. அதில் பேஸ்புக், டிவிட்டர், பிளாக்பெர்ரி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தும் நபர்களை வைத்து ஆய்வு நடத்தினர். 7 நாட்கள் இந்த ஆய்வு நடந்ததாம்.
.
ஆன்லைன் மூலமாக நடந்த இந்த சர்வேயில் 250 பேர் கலந்து கொண்டனராம்.. அதில் செக்ஸ், சிகரெட் பழக்கத்தை விட மிக மோசமான முறையில் பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு மக்கள் அடிமையாகிக் கிடப்பது தெரிய வந்ததாம்.

செக்ஸ், சிகரெட்டை விட பேஸ்புக்கும், டிவிட்டரும்தான் அனைவரையும் அதிகம் தூண்டுகிறதாம். ஒரு நாளைக்கு சராசரியாக 7 முறையாவது பேஸ்புக், டிவிட்டர் பக்கம் போய் விடுகின்றனராம் அதற்கு அடிமையானவர்கள். மேலும் ஒரு நாளைக்கு சராசரி 14 மணி நேரத்தை இதற்காக செலவிடுகிறார்களாம்.

இன்னும் படுக்கை அறையில்  கூட பேஸ்புக் அல்லது டிவிட்டர் பற்றி நினைக்கிறார்களாம்.

இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், செக்ஸ், சிகரெட், போதைப் பழக்கம், விளையாட்டு என அனைத்தையும் தகர்த்துத்
 தரைமட்டமாக்கும் அளவுக்கு இந்த பேஸ்புக், டிவிட்டர் பழக்கம் விஸ்வரூபம் எடுத்து நிற்பதாக கூறியுள்ளனர்.

Wednesday, October 10, 2012

புற்றுநோய்... பாலசந்தர் மற்றும் விகடன்..




தமிழ் சினிமாக்களில் ஒரு கட்டத்தில்..கதாநாயகன் மீதோ, நாயகி மீதோ இரக்கம் வரவேண்டுமெனில் அவர்களுக்கு கேன்சர் என்று சொல்லிவிட்டு..இறுதியில் அவர்களை சாகடித்துவிடுவதுண்டு.
அதிகம் இப்படி ஆரம்ப காலங்களில் பாலசந்தர் படங்கள் இருந்ததுண்டு.
அவர் கதை,வசனத்தில் வந்த நீலவானம் பட நாயகிக்கு கேன்சர்..அப்படத்திற்கு விளம்பரமும்..."ஆறில் சாகலாம்..அறியாத வயசு..அறுபதில் சாகலாம் அனுபவித்த வயசு..இருபதில் சாவது..?' என்று இருந்தது.
அடுத்து அவரது  நீர்க்குமிழி நாடகத்திலும்/படத்திலும் நாகேஷ் பாத்திரம்..கேன்சரில் மடியும்.
அதே போன்று சிவசங்கரியின் நண்டு படமும்..
அக்காலகட்டத்தில்..பாலசந்தர் படம் ஒன்றை விமரிசித்த குமுதம்..இனி இவர் 'பு.பாலசந்தர்' என்றது.
அதே போன்று..விகடனும் ..இனி கேன்சர் பற்றி  கதைகள் இனி விகடனில் வராது என அறிவித்திருந்தது.(இப்போது விகடன் டெலிவிஸ்டாசின் ஒரு மெகாசீரியலில் ஒரு பாத்திரம் புற்றுநோயால் தவிக்கிறது..தனி விஷயம்)
இப்படி புற்றுநோய் என்றாலே..மரணம்தான் என்பது எழுதப்படாத விதியாக உருவாக்கப்பட்டது.
ஏன்..சிறுநீரகம்..சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் இல்லையா?
ரத்த அழுத்தத்தால்..மாரடைப்பு ஏற்பட்டு இறப்பதில்லையா?
எந்த வியாதி மனிதர்களுக்கு வந்தாலும்..ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்பட்டால் குணமாகிவிடும்..புற்றுநோயும் இதற்கு விலக்கல்ல.
ஆகவே..இன்று பல விஷயங்கள் இணைய தளம் மூலமும், அனுபவத்திலும், படிப்பிலும் அறிந்துள்ள நாம்..நமக்கும்..நம்மை நெருங்கியவர்களுக்கும் வரும் நோயின் அறிகுறியை சில முன்னறிவிப்புகளிலேயே அறிந்து விடலாம்..உடனே சரியான சிகிச்சைக்கும் சென்றிடலாம்.எப்பேர்பட்ட நோய்க்கும் இது பொருந்தும்.
எல்லோரும் மனதில்  வைக்க வேண்டிய ஒன்று..
சிறிய காயம் வந்து மரித்தவர்களும் உண்டு..
தீராத வியாதி வந்து பிழைத்தவர்களும் உண்டு...
என்பதைத்தான்.
 மனோதைரியம், நம்பிக்கை, முயற்சி இவை மூன்றும் இருந்தால் எதுவும் நம்மை ஒன்றும்செய்யாது.

Tuesday, October 9, 2012

மத்திய அமைச்சர் செய்தது தவறு - கலைஞர்





 தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விடுவதை உடனே நிறுத்த வேண்டுமென்று மத்திய அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக உள்ள எஸ்.எம். கிருஷ்ணா பிரதமருக்கு கடிதம் எழுதியது மிகப்பெரிய தவறாகும் என்று கருணாநிதி அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

 மத்திய அமைச்சரவையில் அமைச்சராக இருக்கும் ஒருவர் இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவாக இருக்க வேண்டுமே தவிர, அரசியல் காரணங்களுக்காக மாநில உணர்வோடு நடந்து கொள்வது தவறாகும்.

ஒருவேளை இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் வருவதை மனதிலே கொண்டு வாக்கு வாங்கவேண்டுமென்பதற்காக கிருஷ்ணா மாநில மக்களைக் கவருகின்ற வகையில் அந்தக் கடிதத்தை எழுதியிருப்பார்.

காவிரிப் பிரச்சினையில் கர்நாடக மக்களும், தலைவர்களும் கட்சி உணர்வுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமையோடு செயல்படுகிறார்கள். அந்த மாநில அரசும் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி அதிலே முடிவெடுத்து, அதன்படி செயல்படுகிறார்கள். அதன் விளைவாகத்தான் கர்நாடக மாநிலத் தலைவர்கள் எல்லாம் பிரதமரைச் சந்தித்துப் பேசுகிறார்கள்.

ஆனால் தமிழ்நாட்டிலோ தனக்கே எல்லாம் தெரியும், யாருடைய ஆலோசனையும் தயவும் தேவையில்லை என்று கருதுகின்ற அரசு நடக்கின்றது. எப்படியிருந்தாலும், காவிரிப் பிரச்சினையில் பிரதமர் தலைமையில் உள்ள காவிரி நதி நீர் ஆணையத்தின் கூட்டத்தில் பிரதமர் அறிவித்த முடிவுக்கு மாறாக நண்பர் கிருஷ்ணா பிரதமருக்கு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று கடிதம் எழுதியது தவறு, கண்டிக்கத்தக்கது.

நல்லவேளையாக காவிரி நதிநீர் ஆணையத் தலைவரான பிரதமரும், உச்ச நீதிமன்றமும் தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீர் கொடுத்தே ஆக வேண்டுமென்று சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Monday, October 8, 2012

பேசும் போது ஜாக்கிரதை ..எச்சரிக்கை பதிவு


தவளை தன் வாயாலேயே கெடும் என்பார்கள்..

தவளை கெடுமோ இல்லையோ...சாமன்யர்களாகிய நாம் கெடுவதுண்டு...

உதாரணத்திற்கு என் கேசையே எடுத்துக் கொள்ளுங்கள்...

வழக்கமாக கடன் கேட்டுக்கொண்டிருக்கும் நண்பனின் செய்கை ஒரு வழிப் பாதையாய் இருந்ததால்..இனி அவன் கேட்கும்போது நாமும் ;'இல்லை' பாட்டு பாட வேண்டுமென தீர்மானித்து..ஒரு முறை அவனிடம்..'நானே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்..இதில் உனக்கு வேறு எப்படி கடன் கொடுப்பது' என்று கூறப்போக அவன் கண்ணில் பட்ட நண்பர்களிடம் எல்லாம், என் பெயரைச் சொல்லி..'பாவம் அவன் கஷ்டத்தில் இருக்கிறான்' என்று சொல்லப் போக..என்னைப் பின்னர் பார்த்தவர்கள்..'பாவம் உனக்கே கஷ்டம்' என வருத்தப்பட..'போதுமடா சாமி..அவன் கேட்ட போது கடன் கொடுத்திருக்கலாமே!' என்று தோன்றிவிட்டது.

அடுத்து இப்படித்தான்...ஒரு நண்பர் வீட்டில் சாப்பிடக் கூப்பிட்டிருந்தார்.சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது..'சமையல் எப்படி?' என்றார்.அவர் மனைவி மனம் நோகக்கூடாது என...ரொம்பவும் சுமாராய் இருந்த கத்திரிக்காய் கூட்டை..'பிரமாதமாக இருக்கிறது''தனி கைவண்ணம்' என புகழப் போக..இப்போதெல்லாம்..என்று அந்த நண்பன் வீட்டில் கத்திரிக்காய் கூட்டு என்றாலும்'அவருக்குப் பிடிக்கும்..கொண்டு போய் கொடுங்கள்..என அவர் மனைவி சொல்லப் போக,எனக்கு பார்சல் வந்துக் கொண்டிருக்கிறது.இனி அடுத்தமுறை அவர் வீட்டுக்கு சாப்பிடச் சென்றால்..தவறி ஏதும் நன்றாய் இருக்கிறது எனச் சொல்லக் கூடாது என தீர்மானித்து விட்டேன்.

அடுத்து ஒரு நாள் நான் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து நடத்துநரிடம்..சில்லறை 50 காசு இல்லாததால் 'அதனால் பரவாயில்லை' என நான் கூறப்போக, இப்போதெல்லாம் சில்லறை இருந்தாலும் 50 காசுகளை அவர் எனக்குத் திரும்பத் தருவதில்லை.

இப்படித்தான் ஒரு சமயம்..வீட்டு பொறுப்பிலிருந்து அன்று தப்பிக்க, 'சற்று தலை சுற்றுகிறாப்போல இருக்கு' என மனைவியிடம் கூறப்போக,'இந்த நிமிஷமே டாக்டரைப் பார்க்க வேண்டும்' என பிடிவாதம் பிடித்து, (நானும் கூறிய பொய்யை மெய்யென நிரூபிக்க வேண்டி இருந்ததால், நானும் வாளாயிருக்க) அன்று..தேவையில்லா டெஸ்டுகள் என 1500 ரூபாய்வரை வீணடிக்கப்பட்டது.

முடிவெட்டுக் கடையில் முடிவெட்ட 80 ரூபாயும், முடிவெட்டும் ஊழியருக்கு தனியாக 10 ரூபாயும் கொடுப்பேன்.இது அறிந்த கடை முதலாளி, கடந்த சில மாதங்களாக அவரே முடி வெட்டிவிட்டு 90 ரூபாய் எடுத்துக் கொண்டு விடுகிறார்.

இப்போது என்னதான் சொல்ல வருகிறாய்? என்கிறீர்களா?

வேண்டாம்..நான் ஏதாவது சொல்லப்போக..நீங்கள் ஏதாவது புரிந்துக் கொள்ளப்போக,,,,,ம்ஹூம்..வேண்டாம்.நான் சொல்ல வருவது..என்னுடனே இருந்துவிட்டு போகட்டும்.


Sunday, October 7, 2012

சினிமாவிற்கு கதை எழுதுவது எப்படி..


சினிமாவிற்கு எழுதப்படும் கதைக்கு மூன்று வடிவம் நிலைகள் இருக்கின்றன..

முதலாவது அந்தக் கதையின் சுயவடிவம்.இரண்டாவது அக்கதையைச் சினிமாவிற்காக பண்படுத்துதல் அல்லது மாற்றி அமைத்தல்.இதைத்தான் 'டிரீட்மென்ட்' என்கிறார்கள்.மூன்றாவது படங்களாகவே கதையை எழுதுவது.இதை 'சினாரியோ' என்றும் 'ஸ்கிரிப்ட்' என்றும் சொல்கிறோம்.

ஒவ்வொரு கதையிலும்..ஒரு முக்கிய சம்பவம் இருக்கிறது.அதேபோல ஒவ்வொரு கதையிலுமொரு தனித் தத்துவம் அல்லது அடிப்படையான கருத்து அடங்கி இருக்கிறது.ராமாயணத்தில் 'ஆதர்ஷ புருஷனின் லட்சணங்கள்' ஒரு அடிப்படைத் தத்துவம்.மார்க்கண்டேயன் கதை 'விதியை மதியால்' வெல்லலாம்..என்னும் அடிப்படைக் கருத்தின் மேல் கட்டப்பட்டது.கண்ணகி கதை 'ஒரு கற்புக்கரசியின் கோபம் உலகையே எரித்துவிடும்' என்ற கருத்தின் மேல் எழுந்தது.

எனவே, சினிமாவிற்குக் கதை எழுதுகிறவர் முதலில் அந்தக் கதையின் அடிப்படைக் கருத்து என்ன என்பதை முதலில் நிச்சயம் செய்துக் கொள்ள வேண்டும்.அந்தக் கருத்தை விளக்கிச் சொல்வதற்காகத்தான் கதை எழுதப் படுகிறது.ஆகையால் கதையின் ஆரம்பம், வளர்ச்சி,முடிவு எல்லாம் அதை விளக்குவதற்காகவே அமைக்கப் பட வேண்டும்.

அதே போல.. கதை தங்குத் தடையின்றி மட மட என நகர வேண்டும்.அனாவசியமாக நிற்கக் கூடாது.ஒரு சம்பவத்திற்குப் பிறகு அடுத்தது...அதற்கடுத்தது என்று, நிற்காமல் மேலே மேலே போய்க்கொண்டே இருக்க வேண்டும்.படத்தில், கதையை நேருக்கு நேர் நடப்பது போலவே பார்ப்பதால் அது வேகமாக நகராவிட்டால் சலிப்புத் தட்டிவிடும்.ருசி குறைந்துவிடும்

(சிறுகதை எழுத்தாளர்,நாடக ஆசிரியர், சினிமா கதை,வசனகர்த்தா ஆகிய பி.எஸ்.ராமையா எழுதிய சினிமா என்னும் நூலிலிருந்து...
இப்புத்தகம் இப்போது கிடைக்குமா எனத் தெரியவில்லை.யாரிடமாவது இருந்தால் வாங்கிக் கொள்கிறேன்.தெரிவிக்கவும்.
பி.எஸ்.ராமையா நாலு வேலி நிலம், போலீஸ்காரன் மகள்..ஆகிய திரைப்படங்களின் கதைக்கு சொந்தக்காரர் ஆவார்)

Saturday, October 6, 2012

பாக்டீரியா உருவாக்கும் சுத்தத் தங்கம்!




 


தங்கம் என்ற மஞ்சள் உலோகம் இன்றைக்கு அனைவராலும் விரும்பப்படும் ஒன்றாக உள்ளது. மண்ணில் சுரங்கம் அமைத்து தோண்டி பின்னர் சுத்திகரிக்கப்பட்டுதான் தங்கம் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் மிகத் தூய்மையான தங்கமான 24 கேரட் தங்கத்தை பாக்டீரியா ஒன்று உருவாக்குகிறது என்ற ஆச்சரியமான தகவலை கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர்கள்.
அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகலத்தின் மைக்ரோ பயாலஜி மற்றும் மாலிக்யூலர் ஜெனடிக்ஸ் துறை ஆராய்ச்சியாளர்கள் இணைந்து சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் ஆய்வில் பாக்டீரியா ஒன்று சுத்தமான தங்கம் உருவாக்குவதை கண்டறிந்தனர். இந்த பாக்டீரியாவுக்கு ‘குப்ரியாவிடஸ் மெட்டாலிடியுரன்ஸ்' என பெயரிட்டுள்ளனர்.
தங்களின் கண்டுபிடிப்பை ஆஸ்திரியா நாட்டில் நடைபெற்ற ‘பிரிக்ஸ் ஆர்ஸ் எலக்ட்ரானிக்கா' என்ற கண்காட்சியில் காட்சிக்கு வைத்தனர். ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட தங்கத்தைக் கொண்டு தங்க முலாம் பூசப்பட்ட ஒரு பொருளையும் காட்சிக்கு வைத்திருந்தனர். ‘த கிரேட் ஒர்க் ஆஃப் மெட்டல் லவ்வர்' என்ற பெயரில் பாக்டீரியா உருவாக்கிய தங்கம் காட்சிக்கு வைக்கப்பட்டது. உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த மைக்ரோ பயாலஜி விஞ்ஞானிகள் இதை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
ஆய்வு முடிவு பற்றி பல்கலைக்கழக மைக்ரோபயாலஜி பேராசிரியர் கசம் கஷேபி கூறியதாவது: பொதுவாக பாக்டீரியாக்கள் நச்சுத்தன்மையுள்ள பொருட்களில் வளர்வதில்லை. ஆனால் இந்த பாக்டீரியா இயற்கையில் காணப்படும் நச்சுத்தன்மையுள்ள தங்க குளோரைடு என்ற வேதிப்பொருளில் வளர்கிறது. இந்த தங்க குளோரைடு நீர்ம தங்கம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பாக்டீரியாவை தங்க குளோரைடில் வளர்த்தபோது ஒரே வாரத்தில் தங்க குளோரைடு நீர்மமானது தங்கக்கட்டியாக மாற்றமடைந்தது. இயற்கையில் தங்கம் எப்படி உருவாகிறதோ, அதேபோன்ற ரசாயன வினை இங்கும் நடந்திருக்கிறது என்று கூறினார்.
24 கேரட் பரிசுத்தமான தங்கத்தை பாக்டீரியா உருவாக்குகிறது என்ற கண்டுபிடிப்பு மிக மிக முக்கியமானது. அதே நேரம், இந்த தொழில்நுட்பத்தில் தங்கத்தை உருவாக்குவது சவாலானது, அதிக செலவு ஏற்படுத்தக்கூடியது. பெரிய அளவில் உற்பத்தி செய்யும்போது செலவு கட்டுப்படுத்தப்படலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
தொழில் ரீதியான உற்பத்திக்கு பாக்டீரியா என்ற உயிரை பயன்படுத்தலாமா?. சுரங்கம் அமைத்து வெட்டி எடுக்கப்படும் தங்கத்தை பாக்டீரியாவை கொண்டு உருவாக்கினால் உலக அளவில் பொருளாதாரத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுமா.. என பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது இந்த ஆராய்ச்சி

(தட்ஸ்தமிழ்)

Friday, October 5, 2012

ஆனாலும் பா.ம.க.,விற்கு ரொம்பத் தாங்க.....


கடலூர் மாவட்டத்தில் கிராமம், ஊராட்சி, நகரம், ஒன்றியம் வாரியாக பாமக கட்சிக் கொடிக் கம்பங்களை ஏற்றி வைத்துச் செல்லும் வழியில் நெய்வேலி வந்த அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்தப் பேட்டி:

அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பாமக இனி தனித்துப் போட்டியிடும் என நெய்வேலியில் வெள்ளிக்கிழமை முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

தமிழகத்தில் இன்று மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதற்குக் காரணம், தமிழகத்தை முன்னர் ஆண்ட கட்சியும், தற்போது ஆளுகிற கட்சியும்தான். இதில் கருணாநிதியின் பங்கு மிக அதிகம்.

÷காவிரி நீர்ப் பிரச்னைக்காக அன்றாடம் அறிக்கை மேல் அறிக்கை விட்டுக் கொண்டிருப்பதால் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படாது.

÷காவிரி நீரைப் பெற்றுத் தருவதில் இரு கட்சிகளும் மெத்தனமாகவே செயல்படுகின்றன. அதற்கு தீர்வு காணும் வழியை ஆய்வுசெய்து அதற்கான வேலைகளில் இறங்க வேண்டும்.

÷பாமக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு. மேலும் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் ராமதாஸ் மட்டுமே.

÷எனவே திமுக, அதிமுக போன்ற திராவிடக் கட்சிகளைப் புறந்தள்ளிவிட்டு தற்போது இளைஞர்கள் பாமகவில் தங்களை இணைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றார் அன்புமணி ராமதாஸ்.


Thursday, October 4, 2012

அன்னிய மோகம்! (தினமணி தலையங்கம்-கண்டிப்பாக படிக்கவும்)


அன்னிய மோகம்!


இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் இரண்டு "எழில் நகரம்' (ஸ்மார்ட் சிட்டி) உருவாக்கும் திட்டத்தில் இந்தியாவும் ஆஸ்திரியாவும் இணைந்து செயல்படவுள்ளன.
இதுகுறித்து மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் கமல்நாத் குறிப்பிடுகையில், ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புறப் புனரமைப்புத் திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.
இந்தத் திட்டத்தின்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் சுமார் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையில் மக்கள்தொகை கொண்ட நகரங்கள் எடுத்துக்கொள்ளப்படும். இந்த நகரங்களில் போக்குவரத்து, சாலை வசதி, தகவல் தொழில்நுட்பம், கரியமில வாயு கட்டுப்பாடு, இயற்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மின்தேவை இல்லாமல் வீடுகள் தற்சார்புடன் கதிரொளி ஆற்றல் பெறுதல், வீடுகளுக்கு பகலில் மின்விளக்கு எரியாமலேயே வெளிச்சம் பெறும் வகையில் வடிவமைப்பு என எல்லாவற்றுக்கும் முக்கியத்துவம் தரப்படும். முதல்கட்டமாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைனி, ஜபல்பூர் ஆகிய இரு நகரங்களில் இதைச் செயல்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
ஆஸ்திரியா நாட்டின் அமைச்சர் டோரீஸ் பர்ஸ் குறிப்பிடும்போது, இத்தகைய பசுமை நகரம், எழில் நகரம் அமைக்கப்படும் பணியில் ஆஸ்ட்ரியன் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜியின் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
ஆஸ்திரியாவும் நகர்ப்புற அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நகர்ப்புற மேம்பாட்டுக் கழகமும் இணைந்து இத்திட்டத்தை மேற்கொள்ளும் என்கிறார் அமைச்சர் கமல்நாத். எல்லாம் சரிதான். ஏன் இதற்குப்போய் ஆஸ்திரியாவுடன் ஒப்பந்தம்போட வேண்டும் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.
இந்தியாவில் இல்லாத தொழில்நுட்பமா? இந்தியாவில் இல்லாத முன்மாதிரி நகரங்களா? இதையெல்லாம்விட, இந்தியாவில் உள்ள ஐஐடி நிறுவனங்களில் மிகத்திறமையான இந்திய மாணவர்கள் வெளிநாடுகளின் நகர் வளர்ச்சிக்குப் பங்காற்றிக்கொண்டிருக்கையில் நாம் ஏன், ஆஸ்திரியா நாட்டின் தொழில்நுட்ப நிறுவனத்தின் தயவைப் பெற வேண்டும்?
ஆஸ்ட்ரியன் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி என்பது அரசு நிறுவனம் அல்ல. இது ஒரு கூட்டு நிறுவனம். ஆஸ்திரிய குடியரசு 50.46%, தொழில் கூட்டமைப்புகள் 49.54% எனும் விகிதத்தில் அரசு - தனியார் பங்கேற்பில் செயல்படும் நிறுவனம். இது ஒரு ஆய்வு மற்றும் ஆய்வைச் செயல்படுத்தும் நிறுவனம். இவர்கள் யாருக்கான ஆய்வைச் செய்வார்கள் என்பதை நாம் சொல்லியா தெரிய வேண்டும்?
இவர்கள் ஆஸ்திரியா நாட்டின் பல்வேறு தொழில்நிறுவனங்களுக்காக ஆய்வுசெய்து தயாரிக்கப்படும் உற்பத்திப் பொருள்களை இந்தியாவில் விற்பனை செய்வதற்கு அதிக முக்கியத்துவம் தருவதாக இருக்குமே தவிர, இவர்களது நோக்கம் இந்தியாவில் எழில் நகரங்களை உருவாக்குவதுதான் என்பதை நம்ப இயலவில்லை.
இவர்கள் உருவாக்க இருக்கும் எழில் நகரத்தின் சாலைகள் அவர்கள் பொருள்களை விற்பனை செய்வதற்கு ஏற்ப தீர்மானிக்கப்படும். வீட்டின் கட்டுமானம் மற்றும் வடிவமைப்பு, மெட்ரோ ரயில், அதிவிரைவு போக்குவரத்துப் பாதை, வீடுகளுக்கான மின்ஆற்றல் சுயச்சார்பு எல்லாமும் அவர்கள் தீர்மானிப்பார்கள். அவர்களது பொருள்களை விற்பனை செய்யும் வாய்ப்புகளையே இங்கே உருவாக்குவார்கள். இந்த ஒத்துழைப்புக்கு எத்தனை கோடி ரூபாய் பணம் பெறுவார்கள் என்பது குறித்து அமைச்சர் கமல்நாத் குறிப்பிடவில்லை.
இன்றைய இந்திய நகரங்கள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் விரிவடைந்ததற்கு யார் காரணம்? அந்தந்த மாநகராட்சி, நகராட்சிகள் முறையாகச் செயல்பட்டு, விதிகளை மீறிக் கட்டப்படும் கட்டுமானங்களை தயக்கமின்றி இடிக்கத் தொடங்கியிருந்தால், இன்று இந்திய நகரங்கள் இத்தகைய நெரிசலாக அமைந்திருக்குமா?
பாதசாரிகள் நடக்க முடியாத அளவுக்கு சிறு நடைமேடை அமைத்து, அதில் கடைகள் ஆக்கிரமிக்கும்போதே தடுத்து நிறுத்தவும் செய்யாமல் வளரவிட்டு, போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்தவர்கள் யார்?
வீடுகளுக்கு சூரிய ஆற்றல் மூலம்தான் வென்னீர் பெற வேண்டும் என்பதைக் கட்டாயமாக்காமல், வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பைக் கட்டாயமாக்காமல் இருந்ததற்கு யார் காரணம்?
முறையின்றி கட்டப்பட்ட வீடுகளையும் பணம் செலுத்தி முறைப்படுத்திக்கொள்ள சட்டம் தீட்டியதற்கு அரசியல்வாதிகள்தானே காரணம்?
இந்தியாவில், அந்தந்தப் பகுதியில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு மிகக் குறைந்த செலவில் தரமான வீடுகளை, குடியிருப்புகளை அமைக்க முடியும் என்று லாரி பேக்கர் போன்றோர் நிரூபித்துக் காட்டியுள்ளனர். அத்தகைய தொழில்நுட்பங்களுக்கு ஆதரவு தர மத்திய அரசு முன்வரவில்லை. தமிழ்நாட்டில் அத்தகைய தொழில்நுட்பத்தை மக்களிடம் கொண்டுசேர்க்கவும், உதவிகள் வழங்கவும் கட்டட மையம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால், அதன் நோக்கம் நிறைவேறவில்லை.
ஆஸ்திரியாவிலிருந்து ஒரு நிறுவனம் தரும் ஆலோசனைப்படி எழில் நகரம் அமைக்கப்போகிறோம் என்று அமைச்சர் கமல்நாத் சொல்லும்போது, "கேப்பையிலே நெய் வழிகிறது என்று சொன்னால் கேட்பவனுக்கு அறிவு எங்கே போயிற்று?' என்கிற கேள்விதான் நினைவுக்கு வருகிறது.
நமக்கான எழில் நகரை நாம் அமைத்துக்கொள்ள முடியாதா? அதற்கான தொழில்நுட்பமும், அறிவும் இந்தியர்களிடம் இல்லையா என்பதுதான் பதில் வராத கேள்வியாக இருக்கிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் திட்டமிட்டு மதுரை மாநகரம் அமைக்கப்பட்டபோது, ஆஸ்திரியா என்கிற நாடு எப்படி இருந்தது என்பது நமக்குத் தெரியாது. ஹரப்பாவும், மொகஞ்சதாரோவும் நகர வடிவமைப்பில் நமது மேலாண்மைக்குச் சான்றாக இருக்கும் சரித்திரச் சுவடுகள். நகரக் கட்டமைப்பைப் பற்றி நமக்குக் கற்றுத் தருவதற்கு அன்னிய நாட்டை நாடுவானேன்? இதற்குப் பின்னால் என்ன ஊழலோ, என்ன திட்டமோ யார் கண்டது?
இந்தியாவின் எந்த நகரத்தையும் சட்டத்தைச் சரியாகச் செயல்படுத்துவதன் மூலம் எழில் நகரமாக மாற்றிவிட முடியும். இதற்கு ஆஸ்திரியா நாட்டிலிருந்து ஒரு நிறுவனம் வந்துதான் நமக்குச் சொல்லித்தர வேண்டும் என்பதில்லை.

Wednesday, October 3, 2012

உணவகம் - ஆரோக்கிய பவன்




அடையாறு சிக்னலில் இறங்கி, சற்று கிழக்கு நோக்கி நடந்தால்..ஒரு பழைய கட்டிடம் இருக்கும்.அக்கட்டிடத்தின் வாசலில் சென்னை மாநகராட்சியின் குப்பைத்தொட்டியைப் பார்க்கலாம்.கட்டிடத்தில் ஒரு அழுக்கேறிய..வாசகங்கள் மறைந்து போன போர்ட் ஒன்று இருக்கும்.அதை சற்று எக்ஸ்ரே கண்ணுடன் பார்த்தால்..ஆரோக்கிய பவன் என்பதை கண்டுபிடித்து விடலாம்.உள்ளே நுழைந்தால்..கல்லாவில் ஒரு மெலிந்த உருவம் அமர்ந்திருக்கும், அவ்வப்போது இருமலுடன்.இருமும் போதே தொண்டையில் சளி இருப்பதைக் காணலாம்.அவருக்கு டிபி யாய் இருக்கலாம்.அதனாலென்ன..

நாம் உள்ளே போய் அமர்ந்தால்..எல்லா மேசையிலும் ஈக்கள் குவிந்து இருக்கும்.அதனால் என்ன நாம ஈக்களையா சாப்பிடப் போறோம்.என்ன ஒன்று..அவை பக்கத்து தட்டில் அமர்ந்து, நம் தட்டில் அமராவண்ணம் இடது கையால் நாம் வீசிக்கொண்டிருக்கலாம்.காற்றுக்கு காற்று ஆச்சு...ஈக்களும் நம் தட்டை அண்டாது.சர்வர்..அவனது விரல்கள் அனைத்தையும் உள்ளே விட்டு..தண்ணீர் கொணர்ந்து வைப்பான்.

இரண்டு இட்லி ஆர்டெர் செய்தால்...அத்துடன் மஞ்சள் கலரில் ஒரு திரவம் (சாம்பார்?)..சற்று வெண்மையும் ,பச்சையும் சேர்ந்த கலரில் ஒரு சட்னி வைக்கப் படும்.இட்லியை சற்று கஷ்டப்பட்டுதான் விள்ள வேண்டும்.கல் போல இருக்கும்.இட்லி மலிவாய் இருப்பதால், வீடு கட்டும்சிலர்..செங்கல்லுக்கு பதிலாக இவற்றை வாங்கி உபயோகிப்பதும் உண்டு..என செவி வழிச் செய்தி.

கஷ்டப்பட்டு..இட்லி சாப்பிட்டுவிட்டு தோசை ஆர்டர் செய்தால்...நாயின் தொங்கவிட்ட நாக்கு போல் தட்டில் கொண்டுவந்து வைப்பார்கள்.கடையில் ஃபேனோ, ஏசியோ இல்லை எனினும், தோசை மட்டும் ஏசியில் வைத்திருந்தாற் போல சில்லென்றிருக்கும்.

கடைசியில் காஃபி சாப்பிடலாம் என்றால்..காஃபி என்னும் வெந்நீர் வரும் டபராவில் உள்ள அழுக்கை, கையினாலேயே அகற்றலாம்.அந்த அளவு சுத்தம்.

ஆரோக்கிய பவனில் உணவருந்துவோர் தேவைக்கென...கடையை ஒட்டி..சில மருத்துவர்கள் கிளீனிக் வைத்திருக்கிறார்கள்.அவர்கள் இந்த கிளீனிக்கில் சம்பாதித்து தலைக்கு இரு வீடு வாங்கிவிட்டார்களாம்.

டெங்கு,சிக்கன்குன்யா போன்றவை வருபவர்கள்..உடலில் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள இந்த ஓட்டலுக்கு செல்லலாம் என சிபாரிசு செய்கிறேன்.


இரு நிலவுகள் (கவிதை)






பௌர்ணமி இரவு

தெளிந்த நீரோடை

கரையில் அவள்

நீரில் நிலவுகள்

களங்கத்துடன் ஒன்று

களங்கமின்றி ஒன்று

Tuesday, October 2, 2012

விகடன் சொன்னது உண்மையா?




ஆனந்த விகடன் 3-10-12 இதழில் விகடன் டீமின் விகடன் ஜன்னல் பகுதியில் இச் செய்தி வெளியாகியுள்ளது..

"தமிழர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்..

'தமிழர்கள் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள்.அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்/ -ராஜபக்க்ஷேவின் இந்திய வருகையின் போது பாதுகாப்புக்காக இருந்த இந்திய படை வீரர்களுக்கு மத்திய அரசு கூறிய எச்சரிக்கை வார்த்தைகள் இவை'

இது உண்மையா?

யாரேனும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அறிய இயலுமா?

இது உண்மையாயின்..தமிழக அரசியல் தலைவர்கள் ஏன் மன்மோகன் சிங் காய் மாறிவிட்டார்கள் இவ்விஷயத்தில்.

தமிழில் எழுத-படிக்க திணறும் அரசு பள்ளி மாணவர்கள்:



தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 9ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியர் தமிழில் எழுதுதல் மற்றும் படிக்கும் திறன் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான மாணவ, மாணவியர் தமிழில் எழுத, படிக்க திணறுவது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 9, 10ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியரின் கற்றல் திறனை மேம்படுத்த அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 96 அரசு பள்ளிகளில் 9ம் வகுப்பு மாணவர்களிடையே ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் 9ம் வகுப்பு மாணவ, மாணவிகளில் பலரும், தமிழை பிழையின்றி எழுதவும், தடையின்றி வாசிக்கவும் சிரமப்படுவது தெரியவந்துள்ளது. இதையடுத்து கூடுதல் திட்ட இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் 9ம் வகுப்பு மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க உத்தரவு பிறப்பி்த்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் உள்ள 96 பள்ளிகளில் 9ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு திறனறி தேர்வு நடத்தப்பட்டது. அதில் மாணவர்கள் தமிழில் பிழையி்ன்றி எழுதவும், தடையின்றி வாசிக்கவும் சிரமப்படுவது கண்டறியப்பட்டது. தமிழ் மொழியை வாசிக்க திணறும், இந்த மாணவர்கள் மற்ற பாடங்களை படிப்பது கடினமாகும். எனவே தனி கவனம் எடுத்து தமிழில் தவறின்றி வாசிக்கவும், பிழையின்றி எழுதவும் கற்று கொடுக்க வேண்டியது அவசியமாகும்.
ஒவ்வொரு அரசு பள்ளிகளும் 9ம் வகுப்பு மாணவர்களை தனித்தனியே தமிழில் வாசிக்க செய்து சரியாக வாசிக்க தெரியாத மாணவர்களையும், பிழையோடு எழுதும் மாணவர்களையும் தரம் பிரித்து பட்டியல் தயாரிக்க வேண்டும்.

தமிழை படிக்க திணறும் மாணவர்களிடம் தனி கவனம் செலுத்தி அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்த வேண்டும். இதற்காக தினமும் 1 மணி நேரம் தனி பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(தகவல் - தட்ஸ்தமிழ்)

Monday, October 1, 2012

பட்டுக்கோட்டை பிரபாகரும், சரித்திரக் கதையும்..




ஆனந்த விகடனில்..நட்சத்திர எழுத்தாளர்களின் அணிவகுப்பு என்ற வரிசையில் பல சிறந்த எழுத்தாளர்கள் கதைகள் வெளிவந்துக் கொண்டிருக்கிறது.

பத்திரிகைகள் சிறுகதைகளையே பிரசுரிக்க மறந்துள்ள நிலையில்..தரம் வாய்ந்த ஒரு கதையாவது விகடனில் படிக்கமுடிகிறதே என வாசகர்கள் மகிழ்கின்றனர்.

இந்நிலையில் சென்ற வாரம் விகடனில் பட்டுக்கோட்டை பிரபாகரனின் சரித்திரக்கதை 'ஆனந்தவல்லியின் காதல்' பிரசுரமானது.

அதைப் படித்ததும்..எனக்குத் தோன்றிய முதல் கருத்து..இக்கதையில் என்ன இருக்கிறது என நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை என அறிவிக்கப்பட்டுள்ளது என்பதே..

மிகவும் அமெச்சூர்த்தனமான கதை.

பல தவறுகள்..

அநிருத்தன் என்னும் மன்னன் வலுவான சேனையைக் கொண்டு ராஜ்ஜியத்தின் எல்லைகளை விரிவுபடுத்துபவனாம்.அவன் விஜயநந்தன் என்னும் குறுநில மன்னனிடம் கப்பம் கட்டுகிறானா...அல்லது போரைச் சந்திக்க வேணுமா? என்கிறானாம்.அந்த வருத்தத்தில் அவன் இருக்கையில் 'அவனது மகளை தனக்கு கேட்கிறானாம்' அநிருத்தன்.அதற்கு விஜயநந்தன் சம்மதிக்கிறானாம் மகிழ்ச்சியுடனும்..போரிலிருந்தும் தப்பிக்கலாம் என.

ஆனால் இளவரசியோ நந்தகுமாரன் என்னும் கட்டியக்காரனை விரும்புகிறாளாம்.அவளும், நந்த குமாரனும் ஒரு சிறு நாடக மாடி தப்பித்து இலங்கை சென்று மணமுடித்து வாழ நினைக்கிறார்களாம்.

அதற்காக அவன் விஜயநந்தனிடம் மாட்டிக்கொண்டு, இளவரசியை காதலிப்பதாகக் கூற, இளவரசி இல்லை என மறுக்க, மன்னன் அவனுக்கு உயிருடன் கல்லறைக் கட்ட அவன் கல்லறைக் கட்டும் நபர்களில் ஒருவனான அவன் நண்பனிடம்...ஒரு கல்லுக்கு பதில் அங்கு வெறும் சுண்ணாம்பு வைத்து கட்டிவிடு என்கிறானாம்.அவன் நண்பனோ, அவனுக்கும் இளவரசி மீது ஆசைவர அப்படிச் செய்யவில்லையாம்.ஆனால் நந்தகுமாரனின் தங்கை பொன்னி , கல்லறையை முடிக்கும் முன் கோழிக்கறி ஊட்டுகிறாளாம் நந்தகுமாருக்கு.

அன்று பௌர்ணமி ஆனதால்..இளவரசி தோழியுடன் கடலில் குளிக்க..கடல் அவளை இழித்துச் செல்கிறதாம்.அவள் உடன் வந்த வீரர்கள் அவளை காப்பாற்ற முடியவில்லையாம்.அவள் உடலும் கிடைக்கவில்லையாம்.

ஆனால் நந்தகுமாரன் நண்பன் துரோகமிழைத்தாலும், பொன்னி ஊட்டிய கோழியின் எலும்பில்மஜ்ஜை நீக்கி அதில் சிறு கத்தி வைத்து அனுப்ப, அதன் மூலம் நந்தகுமார் தப்பித்து, நண்பனின் படகில் மறைந்து கொள்கிறானாம்.இதற்கிடையே, கடலில் மூழ்கியது போல நடித்த இளவரசி , நந்தகுமாரின் மற்றொரு நண்பனின் படகில் ஏறி காத்திருக்க.நந்தகுமாரை ஏமாற்றும் நண்பன் அங்கு வந்து..இளவரசி மீதான காதலைச் சொல்லி தன் துரோகச் செயலை கூற, அந்த படகில் மறைந்திருந்து வந்த நந்தகுமார் அவனைக் கொன்று இளவரசியுடன் இலங்கை பயணிக்கிறானாம்.

மெகாசீரியலுக்கு ப.பி., வசனம் எழுதுவதால்..இதிலும் அங்கங்கே சின்னச்சின்னத் திருப்பங்களை வைத்துள்ளார்... மனதில் அவை எதிர்பாரா திருப்பங்கள் என எண்ணி.

இந்தக் கதையை வேறு சாதாரணமான எழுத்தாளன் எழுதியிருந்தால்..'பிரசுரிக்க தகுதியில்லை' என விகடன் திருப்பி அனுப்பியிருக்கும்.

 இந்தப் பதிவிற்கு பல மைனஸ் ஓட்டுகள் விழலாம்..ஆனால் என் மனதில் இக்கதைப் பற்றி தோன்றியது.

அமெரிக்காவில் வினாயகர் சிலை கரைப்பு




டல்லாஸில் உள்ள இந்து கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஊர்வலம் நடந்தது. முதல் முறையாக விநாயகர் சிலைக் கரைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மும்பையிலிருந்து வரவழைக்கப் பட்ட 5 அடி விநாயகர் சிலைக்கு பதினோரு நாட்கள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. சனிக்கிழமை, கோவிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, தற்காலிகமாக அமைக்கப்பட்ட நீச்சல்குளத்தில் கரைக்கப்பட்டது.


மும்பையில் விநாயகர் ஊர்வலம் நிறைவடையும் நாளில், பருவ மழையும் முடிவுக்கு வரும் என்பது ஐதீகம். பெரும்பாலும் அவ்வாறே நடந்து வருகிறது. டெக்சாஸ் மாகாணம் முழுவதும் ஒரு மாத காலத்திற்கும் மேலாக மழையை காணாமல் வறட்சியில் இருந்த நிலையில், சனிக்கிழமை டல்லாஸ் மட்டுமல்லாமல், மாகாணம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மும்பையில் முடிவடையும் பருவமழை, டெக்சாஸில் ஆரம்ப மாகிவிட்டதோ என்று நினைக்கும் அளவுக்கு இருந்தது. அந்த மழையிலும் ஐநூறுக்கும் மேலான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

மும்பை ஊர்வலத்தில் பாட்டுகளுடன், ஆட்டம் பாட்டம் என ஆண்களும் பெண்களும் கடற்கரை வரை சென்று சிலையை கரைப்பது வழக்கம். அதே போல் இங்கும் ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தின் இறுதியில், ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக நீச்சல் குளத்தில் சிலை கரைக்கப் பட்டது.
களிமண் சிலை போலில்லாமல், தானாகவே நீரோடு நீராக கரையக்கூடிய சிறப்பு அம்சத்துடன் மும்பையிலிருந்து தருவிக்கப் பட்டிருந்த்து. சித்தி விநாயக் கணேஷ் மண்டல் என்ற அமைப்பை சார்ந்தவர்கள் இந்து கோவில் நிர்வாகிகளுடன் இணைந்து இந்த விழாவிற்கான ஏற்பாட்டை செய்திருந்தார்கள். தமிழர்கள் உட்பட, இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் சார்ந்த வம்சாவளியினர் கலந்து கொண்டனர்.
டெக்சாஸில் இதுதான் முதல் முறையாக நடந்த விநாயகர் ஊர்வலம், சிலை கரைப்பு என்பது குறிப்பிடத்தக்கது

டிஸ்கி- இறைவன் எதிர்ப்புக்குக்கு இணையாக இறைவனை வேண்டுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துத்தான் வௌகிறது.என்றும் மக்களிடையே டிபாசிட் இழக்காத ஒரே தலைவன் இறைவன்தான் போல் இருக்கிறது.


Saturday, September 29, 2012

பாவம்...கார்ப்பரேட் கம்பெனி ஊழியர்கள்...



ஆபிஸ் ஃபுல்லா ஏசி, தூசி படாத வாழ்க்கை, கை நிறைய சம்பளம், அவனுக்கு என்னப்பா ராஜ வாழ்க்கை என்று கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்பவர்களைப் பார்த்து பொறாமைப்படுபவரா நீங்கள். அவசரப்படவேண்டாம். கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்க்கும் 72 சதவிகித ஊழியர்களுக்கு இதயநோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வு முடிவு ஒன்று எச்சரிக்கின்றது.
உலக இதயதினத்தை ஒட்டி அபாயகரமான வேலைகள் பற்றியும் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு ஏற்படும் நோய்கள் பற்றியும் ASSOCHAM கணக்கெடுப்பு ஒன்று நடத்தியது. அதில் பகல்நேர வேலை பார்ப்பவர்களை விட இரவு நேர வேலை பார்ப்பவர்களுக்கு 52 சதவிகிதம் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களுக்கு ஏற்படும் மாறுபாடான தூக்கம், ஜங்க் ஃபுட் சாப்பிடுவதுவது, சரியான உடற்பயிற்சியின்மை போன்றவையே என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, சென்னை, அகமதாபாத், ஹைதராபாத், சண்டிகர், டெக்ராடூன் உள்ளி நகரங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். இதில் டெல்லியில் பணிபுரிபவர்கள் இதயநோய் அதிகம் தாக்குவது தெரியவந்தது. அதில பெங்களூரு இரண்டாவது இடத்திலும் மும்பை 3 வது இடத்திலும் அகமதாபாத், சண்டிகர், ஹைதராபாத், பூனே போன்ற நகரங்கள் அடுத்தடுத்த இடத்தையும் பிடித்துள்ளன.
இன்றைக்கு இந்தியாவின் நகர்புறங்களில் வசிக்கும் இளையதலைமுறையினர், இதயநோய், பக்கவாதம் போன்றவைகளினால் பாதிக்கப்படுகின்றனர் அதற்குக் காரணம் அவர்களின் பணிப்பளுதான். சரியான உணவின்மையும், உடற்பயிற்சியின்மையும் அவர்களுக்கு நோய் தாக்க காரணமாகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். இரவு நேர ஷிப்ட் வேலை மனிதர்களின் வாழ்க்கைத் திறனையே மாற்றிப்பட்போட்டு விடுகிறது. அவர்களுக்கு உயர்ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு, நீரிழிவு போன்றவை ஏற்பட காரணமாகிறது என்கிறார் ஆய்வுக்குழுவின் தலைவரான டாக்டர் பி.கே. ராய்.
கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஐடி, பிபிஒ, கட்டுமானத்துறை, எரிசக்தி, மனிதவளம் உள்ளிட்ட 18 நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பங்கேற்றனர். ஆய்வின் முடிவில் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கைநிறைய சம்பளம் மட்டும் வாங்கவில்லை மனதில் அழுத்தத்தையும், போனசாக நோயையும் வாங்கிக்கொள்கின்றனர் என்று தெரியவந்தது. இதில் முதலிடத்தை இதயநோயும், பக்கவாதமும் பிடித்துள்ளது, இரண்டாவது இடத்தை உடல்பருமனும், மனஅழுத்தம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு முறையே நான்காவது, ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இனிமேல் யாராவது அவனுக்கென்னப்பா கார்ப்பரேட் கம்பெனியில வேலை என்று மட்டும் அசால்டாக சொல்லி விடாதீர்கள்.

(நன்றி- தட்ஸ்தமிழ்

Friday, September 28, 2012

சாப்பாட்டுக்கடை - நெல்லை டீ ஸ்டால்




(நன்றி -மணிஜி)

சைதாபேட்டையில் ஒரு சந்து முனையில் இருக்கிறது நெல்லை டீ ஸ்டால்.. டோக்கன் சிஸ்டம் கிடையாது.. உங்கள் விருப்பப்படி லைட்டாகவோ, ஸ்ட்ராங்காகவோ . மீடியமாகவோ டீ கொடுப்பார்கள்.. நான் அவுன்ஸ் டீதான் குடிப்பேன். டீ மாஸ்டர் ஆரம்ப காலங்களில் லுங்கி கட்டிக்கொண்டிருப்பார்.. இப்போது ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டிக்கிருக்கிறார். சௌகரியமாக இருக்கிறது என்கிறார்.. என்ன...மூக்கு சிந்தினால் துடைக்கத்தான் கொஞ்சம் கஷ்டம் என்றார் . அவருக்கு சொந்த ஊர் கோயில்பட்டி.. அவருடன் கூடப்பிறந்தவர்கள் 6 பேர்.. அனவரும் டீக்கடைகளில்தான் வேலை செய்கிறார்கள்.. அவர்களும் ஷார்ட்ஸ்தானா என்ற என் நகைச்சுவையை ரசிக்க வில்லை.. 80:20 என்ற விகிதத்தில் டீ த்தூளுடன் புளியங்கொட்டையை கலக்கும் ரகசியத்தையும் என்னிடம் சொன்னார்..கடையின் மைனஸ் என்று பார்த்தால் டீ குடித்தால் காசு கேட்கிறார்கள்.. அதை தவிர வேறு எதுவும் குறிப்பாக இல்லை..

தாம்பரத்தில் இருந்து வருகிறவர்கள் ..சைதை பஸ் நிலையத்தில் இறங்கி போகலாம்.. மின்சார வண்டியிலும் போகலாம்.. பைக்கில் வருபவர்கள்.. கலைஞர் ஆர்ச் தாண்டி இடது புறம் திரும்பி போகலாம்.

Thursday, September 27, 2012

டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ்:


டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ்: அமெரிக்காவில் 'பெஞ்சில்' இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ் நிறுவனங்களில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பெஞ்சில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த நாடுகளில் நிலவி வரும் பொருளாதாரப் பிரச்சனைகளால் பல்வேறு நிறுவனங்கள் புதிய திட்டங்கள், விரிவாக்கத்தை நிறுத்தி வைத்துள்ளன.

ஆனால், இந்த நிறுவனங்களின் திட்டங்களுக்காக அந்த நாடுகளில் ஏராளமான உள்ளூர் நபர்களை வேலைக்கு எடுத்த டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ் ஆகியவை, அதில் பலருக்கு எந்தப் பணியும் தர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

இதனால் இவர்கள் காத்திருக்கும் நிலையில் ('bench') உள்ளனர். இதன் காரணமாக இந்த நிறுவனங்களின் லாபத்தில் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
காண்ட்ராக்ட்களை எளிதாகப் பெறவும், வேலைவாய்ப்புகளை இந்தியா சுருட்டுகிறது என்ற பிரச்சாரத்தை எதிர்கொள்ளவும், அமெரிக்கர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவது போல காட்டிக் கொள்ளவும் பல இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களும் அந் நாடுகளைச் சேர்ந்தவர்களை ஏராளமான பணியில் சேர்த்தன.
முன்பு இவர்களில் கிட்டத்தட்ட 97 சதவீதம் பேர் முழு அளவில் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், இப்போது 90 சதவீதத்தினருக்கே உண்மையில் வேலை உள்ளது. இன்னும் சில சாப்ட்வேர் நிறுவனங்களில் 18 சதவீத வெளிநாட்டு ஊழியர்கள் பெஞ்சில் உள்ளனர்.

இந்தியாவில் என்றால் ஏதாவது காரணத்தைச் சொல்லி வெளியே அனுப்புவது எளிது. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பாவில் ஆட்களை வேலையை விட்டு நீக்கும்போது ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. மேலும் இந்தியாவை விட பல மடங்கு பணத்தை இழப்பீடாகத் தர வேண்டும்.

வழக்கமாக இந்த நாடுகளில் பணியின் அளவு குறையும்போது சில ஊழியர்களை நீக்கிவிட்டு, மற்றவர்களை செலவு குறைந்த நாடுகளுக்கு (குறிப்பாக இந்தியா) அனுப்புவது சாப்ட்வேர் நிறுவனங்களின் வாடிக்கை.

ஆனால், இப்போது அமெரிக்கத் தேர்தல் பிரச்சாரம் உச்சத்தில் இருப்பதால் அமெரிக்க ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவது, உள்ளூர் பணியாளர்களை வேறு நாடுகளுக்கு இடம் மாற்றுவது போன்ற வேலைகளை செய்ய முடியாத நிலைக்கு சாப்ட்வேர் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.
இதைச் செய்யும் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்காவின் ஆளும் தரப்பும், எதிர்க் கட்சிகளும் பிரச்சாரத்தில் இறங்கி ஓட்டு வேட்டைக்கு முயலக் கூடும். இதனால் இந்த நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை கூட எதிர்காலத்தில் பாயலாம்
.
மேலும் ஒரு அப்ளிகேஷனில் திறமையாக இருந்தார் என்பதற்காக ஒரு புராஜெக்டுக்காக எடுக்கப்பட்ட ஊழியரை வெறொரு அப்ளிகேஷன் பயன்படுத்தும் இன்னொரு திட்டத்தில் ஈடுபடுத்த முடியாத நிலையும் உள்ளது. குறிப்பாக கோடிங், மெயின்டெனென்ஸ் என்று இருந்த நிலை மாறி இப்போது enterprise mobility, cloud computing and data analytics ஆகிய பிரிவுகளுக்கே அதிக தேவைகள் உருவாகியுள்ளன.

ஆனால், இந்தத் திறமைகள் கொண்ட அமெரிக்க-ஐரோப்பிய ஊழியர்கள் மிக மிகக் குறைவு.
இந்தக் காரணங்களால் இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை பெஞ்சில் சும்மா காத்திருக்க வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவின் பெரிய சாப்ட்வேர் நிறுவனங்களைப் பொறுத்தவரை மொத்த ஊழியர்களில் 10 முதல் 15 சதவீதம் பேர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ளனர்.
இன்போசிஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை 13,000 பேர் அமெரிக்காவில் மட்டும் பணியாற்றுகின்றனர். விப்ரோவில் 10,000 பேரும், எச்சிஎல் நிறுவனத்தில் 8,000 பேரும், டிசிஎஸ்சில் 6,000 பேரும் அந்த நாட்டில் பணியாற்றி வருகின்றனர்.

இந் நிலையில் அமெரிக்கா, ஐரோப்பாவில் நிலைமை சீராகாத வரை, அதிக செலவு வைக்கும் அமெரிக்க, ஐரோப்பிய நாட்டு உள்ளூர் ஊழியர்கள் பெஞ்சிலிருந்து உண்மையான பணிக்குத் திரும்பாத வரை, இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களின் லாபம் அதிகரிப்பது சிரமமே.

(couetesy - That's thamizh

Tuesday, September 25, 2012

சிரித்துச் சிரித்து... (கவிதை)







நெற்றி சுருக்கி

புருவம் உயர்த்தி

கண்கள் விரித்து

பற்கள் தெரியாது

உதடுகள் மடித்து

சிரிப்பது தெரியாது

சிரிக்கிறாய்

நான் குழந்தையாய்

தவழ்ந்த போது

எடுத்தெதென

புகைப்படம் ஒன்றைக்

காட்டியதும்

Sunday, September 23, 2012

பதிவர்கள் வாழ்க்கை- அறிந்த தகவல்கள்- ஒரு நேர்காணல்




நான் பார்த்த அந்த பதிவர் , மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டார்.அதுவே அவரை நேர்காணல் எடுக்கத்தூண்டியது.

உங்கள் பெயர்..ஊர் பற்றி சொல்ல முடியுமா? எத்தனை வருஷங்களாக பதிவிடுகிறீர்கள்?

என் பெயர் வேண்டாமே! சொன்னால்..நான் பிரபல பதிவரா..இல்லையா..என பல பதிவுகள் வந்து படிப்பவர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும்.நான் கடந்த் சில மாதங்களாக பதிவிடுகிறேன்.சொந்த ஊர் எது எனில் 'யாதும் ஊரே" என்பேன்.நான் ஆணி பிடுங்குவேன்.

எப்படி பதிவுலகில் நுழைந்தீர்..

ஒரு நண்பர் என்னை இழுத்து விட்டு விட்டார்.பழையன பல கழிந்ததால்..புதியன ஆன என்னைப் போன்றோர் ஆர்வமுடன் நுழைந்துள்ளோம்.

ஆணி பிடுங்கி என்கிறீர்கள்..பதிவு இடும் முன் அனுபவம்..

நல்லா மொக்கை போடுவேன்.என் நண்பர்கள் நான் பேசினாலே 'பிளேடு' என்பார்கள்.இந்த் ஒரு தகுதி பதிவராக போதும் என்பதால்..இதுவே என் முன் அனுபவமானது

எப்போ பதிவு போடுவீங்க...என்னிக்கு லீவு

லீவுன்னு கிடையாது.பதிவு போட்டுக் கொண்டே இருப்பேன்.முக்கிய குறிக்கோள்..தமிழ் மணத்தில்..முதல் இருபது பதிவுக்குள் வார வாரம் வரவேண்டும் என்பதுதான்.தவிர்த்து ஏழு பதிவர்களுக்கு தவறாது வாக்களித்து..அதனால் அவர்களையும் என் பதிவிற்கு வாக்களிக்க வைத்து..ஒவ்வொரு பதிவையும் வாசகர் பரிந்துரையில் வரவழைப்பதுதான்.


கரெண்ட் பில்...

அது பற்றி எனக்கென்ன கவலை.ஆஃபீசில் தானே டைப் அடிக்கிறேன்

வாசகர் உங்க வலைப்பூவிற்கு வர ஏதேனும் யுக்தி கையாள்கிறீர்களா/

 ஆம்..பிரபல பதிவர்களைத் திட்டி பதிவிடுவேன்..சினிமா விமரிசனம் செய்வேன்..சில சமயம் படங்களைப் பார்க்காமலேயே!


எதிர்கால திட்டம்..

சில மாதங்கள் பதிவு இட்டுவிட்டு..ஒரு பதிவர் சந்திப்பில் கலந்துக் கொண்டுவிட்டு..பின் ..கூகுள் பிளஸ்சிற்கு தாவி விடுவேன்.

Saturday, September 22, 2012

மரத்தில் காய்க்கிறதா பணம்...




பிரதமர் யாருக்குமே தெரியாத ஒரு உண்மையை மக்களுக்கு சொல்லியுள்ளார்..

'பணம் மரத்திலா காய்க்கிறது" என்று..

சாமான்யனுக்குத் தெரியும்..காலையில் எழுந்து அவசர அவசரமாக கிடைத்ததை அள்ளிப் போட்டுக் கொண்டு..பேருந்தைப் பிடித்து...ஓடி..ஓடி..வேலைக்குப் போய் நாள் முழுதும் பணியாற்றிவிட்டு இல்லம் திரும்பி..அடுத்த நாள் திரும்ப இதையே பின்பற்றி..இப்படி 30 நாட்கள் உழைத்தால்..அந்த மாத சம்பளம் வரும்..பணம் உழைப்பில் காய்க்கிறது என அவனுக்குத் தெரியும்.

தினசரி ஊழியர்கள் கல்லையும், மண்ணையும், சரக்கு மூட்டைகளையும் தூக்கி வேர்த்து பெருக்கெடுக்க நாள் முழுதும் உழைத்தால் தான் அன்றைய கூலி கிடைக்கும்...அவன் சிந்தும் வேர்வையில்தான் பணம் காய்க்கிறது என அவனுக்குத் தெரியும்.

பணம் மரத்தில்தான் ஒரு விதத்தில் காய்க்கிறது..

மரத்திலிருந்து தயாரிக்கப்படும் காகிதம்தான் பணமாகவும் உருவாகிறது..

பணம் மரத்தில் காய்ப்பதில்லை என அவர் யாருக்குச் சொன்னார்...ஒரு வேளை..

..நிலக்கரி, ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் கேம் போன்றவை மட்டுமல்ல..அரசியல்வாதிகளே மரத்திலும் ஊழல் செய்து பணம் சம்பாதிக்கலாம்..கோடிக்கணக்கில்..தேக்கு, செம்மரம் என கண்முன் கொட்டிக் கிடக்கிறது..அதைப்பாருங்கள்..என தன் அமைச்சர்களுக்கு மறைமுகமாக சொல்கிறாரோ என்னவோ பிரதமர்.

Friday, September 21, 2012

இந்துமதத்திற்கு சகிப்புத் தன்மை அதிகமா..?!




நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது..இன்றைய நிகழ்ச்சிகள் குறித்துச் சொல்கையில்..இந்து மதத்தில் சகிப்புத் தன்மை அதிகம் என்றார்.

அவர் சொன்னது உண்மையா? என யோசித்தேன்..

இந்துக்கள் என்பவர்கள் பற்றி நான் ஆழமாக உள்ளே செல்ல விரும்பவில்லை.ஆனால் பெரும்பாலும் அவர்கள் இந்தியாவில்தான் உள்ளனர்.ஆனால் மற்ற இரு பெரு மதங்கள் உலகளவில் பரவியுள்ளன.ஆகவே எந்த நாட்டில் அவர்களுக்கு அநீதியோ, அச்சமோ ஏற்பட்டால் மற்ற நாட்டில் உள்ள அம்மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பை வெளியிடுகின்றனர்.

ஆனால்...இந்துக்களோ..அப்படியில்லை..

இங்கு என்ன பிரச்னை என்றாலும்..அதற்கு அரசியல், ஜாதி, இனம்,பகுத்தறிவு , என வண்ணம் பூசப்படுகிறது.ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களும்..ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒரு நிலைப்பாட்டை எடுக்கின்றனர்.

ஆயிரம் உண்டு இங்கு சாதி..இதில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி..என்று பாடினாலும்..நம்மை நாமே ஒருவருக்கு ஒருவர்..அந்நியராய் பார்க்க ஆரம்பித்துவிட்டோம்.என்று சொன்னால் அதில் தப்பில்லை.

மேலும்...

மத்திய பிரதேசத்தில்..ராஜபக்சே வருவதைக் கண்டித்து மறியல் செய்யும் வைகோ விற்கு..நம் நாட்டு கட்சியினர் எத்தனை பேர் உடன் சேர்ந்தார்கள்.வாளாய் இருந்தார்கள்..
இதன் பெயர் சகிப்புத் தன்மையா?

இலங்கை தமிழர், தமிழக மீனவர்கள்..என நம் நாட்டினரைக்கூட பிரித்து சொல்பவர்கள் தானே நாம்.

பெயருக்கும், புகழுக்கும் ,பதவிக்கும் ஆசைப்பட்டு..அதை மற்றவன் அடைந்து விடுவானோ என்ற எண்ணம் நம்மில் இருக்கும் வரை நமக்கு விடிவு ஏது?




Thursday, September 20, 2012

பிரதமர் கூட்டத்தில் வெளிநடப்பு செய்த முதல்வர்.




காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட்ட வேண்டும்..என்றும் அதில் பேசி முடிவெடுக்க வேண்டும் என்றும் அதுவரை 2டிஎம்சி நீர் தினசரி தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் சொல்லியதால் கூட்டப்பட்டது ஆணைய கூட்டம்.

ஆணைய கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். கேரளா சார்பில், முதல்வர்உம்மன் சாண்டிக்குப் பதில், நீர்ப்பாசன அமைச்சர் கலந்து கொண்டார். இரண்டரை மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, "சம்பா சாகுபடியை காப்பாற்ற, வறட்சி காலத்தில் தண்ணீரை பகிர்ந்து கொள்வது குறித்து, நடுவர் மன்றம் கூறிய முறையை பின்பற்ற கர்நாடகா முன்வர வேண்டும், கர்நாடக அரசின் செயல்களை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. தமிழகத்திற்கு 24 நாட்களுக்கு தினசரி இரண்டு டி.எம்.சி., வீதம் 48 டி.எம்.சி., நீரை கர்நாடகா தரவேண்டும்' என்று வலியுறுத்தினார்.

ஆனால், கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால், தொடர்ந்து வறட்சி நிலவி வருவதாகவும், பெங்களூரு நகரத்தில் குடிநீருக்கே தண்ணீர் வினியோகிக்க முடியாத நிலையில் இருப்பதாக கூறி, தமிழகத்திற்கு தண்ணீர் தரமுடியாது என்று கர்நாடக முதல்வர் மறுத்தார்.தவிர்த்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பும் செய்தார்.

இதில் பிரதமர் குறைந்த பட்ச தண்ணீரை அளிக்கும்படி கூறியும்..கர்நாடகா மறுத்துவிட்டது.இதையடுத்து, இந்த கூட்டம் தோல்வியில் முடிந்தது.தொடர்ந்து, இந்த விஷயத்தில் தமிழகம் இனி சுப்ரீம் கோர்ட்டை அணுகலாம் என்று பிரதமர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழகம், சுப்ரீம் கோர்ட்டை அணுகும் என்று கூறப்படுகிறது.

நம் பிரதமரைப் பார்த்தால் யாருக்குத்தான் பயம் வரும்.

Wednesday, September 19, 2012

காங்கிரஸ் ஆளாத மாநில அரசுகளிடம் மத்ய அரசு பாராபட்சம்





காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வருடத்திற்கு 9 சிலிண்டர்களை மானிய விலைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கட்சி பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி கூறியுள்ளார்.
வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் புதிய கட்டுப்பாட்டை விதித்தது. அதன்படி வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே இனி மானிய விலைக்கு தரப்படும். அதற்கு மேல் வாங்கும்போது முழு விலையையும் கொடுத்து வாங்க வேண்டும் என்று மக்கள் தலையில் சிலிண்டரைத் தூக்கிப் போட்டது மத்திய அரசு.
நாடு முழுவதும் இந்த அறிவிப்பைக் கேட்டு மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.
ஆனால் மத்திய அரசு தனது நிலையை மாற்றிக் கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தது. இதையடுத்து திரினமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளது. கூட்டணியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், தனது மாநிலத்தில் வருடத்திற்கு 9 சிலிண்டர்கள் மானிய விலைக்குத் தரப்படும் என்று சமீ்பத்தில் அறிவித்தார். தற்போது இந்த திட்டத்தை காங்கிரஸ் ஆளும் அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்த காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கட்சி பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி கூறுகையில், டெல்லியில் வருடத்திற்கு 9 சிலிண்டர்களை மானிய விலைக்கு வழங்க அந்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதேபோல காங்கிரஸ் ஆளும் பிற மாநிலங்களிலும் வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.
இவ்வளவு நாட்கள் வேறு கட்சிகள் ஆளும் மாநில அரசுகள்..மத்திய அரசு பாராபட்சமாக நடந்துவருகிறது என்று கூறிவருவது..உண்மை என தெரிகிறது.
இப்படி சொல்வதால் அடுத்த தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என கனவு காணுகிறதோ??!!

Tuesday, September 18, 2012

கர்நாடகாவும்..தமிழ்நாடும்




 காவிரி நதிநீர் விவகாரத்தில் எப்பொழுதும் கர்நாடக அரசியல் கட்சிகள், வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடனேயே கைகோர்ப்பது வழக்கம். இந்த முறையும் அப்படித்தான் நிகழ்ந்துள்ளது. காவிரி நதிநீர் ஆணையம் நாளை டெல்லியில் நடைபெற உள்ள நிலையில் மத்திய அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுடன் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் இன்று ஆலோசனை நடத்தினார்.
மத்திய அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுடனான ஆலோசனையின் போது ஷெட்டருடன் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையும் உடனிருந்தார். 9 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் தலைமையில் காவிரி நதிநீர் ஆணையம் நாளை கூடுகிறது. இதில் கர்நாடகம் மேற்கொள்ள வேண்டிய வியூகங்களை ஷெட்டரிடம் கிருஷ்ணா கூறியதாகத் தெரிகிறது.
ஏற்கனவே கிருஷ்ணா முதல்வராய் இருந்த போது நீதிமன்ற உத்தரவை புறக்கணித்து தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்தது நினைவிருக்கலாம்.

ஆனால் தமிழகத்திலோ...

20ஆம் தேதி  எதிர்க்கட்சிகள் மத்ய அரசுக்கு எதிராக நடத்தப்படும் பந்த் அன்று பள்ளிகளுக்கு முதலில் விடுமுறை அறிவிக்கப்பட்டது.ஆனால்..பந்திற்கு தி.மு.க. ஆதரவு என்றதும், அறிவிக்கப்பட்ட விடுமுறையை அரசு ரத்து செய்து விட்டது.அந்த அளவு ஒற்றுமை.

Saturday, September 15, 2012

அறிமுகம்..(அரை பக்கக் கதை)


காலை அலுவலகம் கிளம்பும் வரை குழந்தை அனு எழுந்திருக்கவில்லை .
குழந்தைக்குத் தேவையான பால்,டயப்பர்,மாற்று உடை எல்லாம் எடுத்து வைத்தாள் கீதா.
சேகர்..அவளையையும், தூங்கும் அனுவையும் காரில் அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.
கிரச் சில் குழந்தையை விட்டு விட்டு..வந்த கீதாவை அவள் அலுவலகத்தில் இறக்கிவிட்டு தன் அலுவலகம் சென்றான் சேகர்
மாலை தான் அலுவலகத்திலிருந்து திரும்ப நேரம் ஆகும் என்ப
தால்..கீதாவை மாலை ஒரு ஆட்டோ பிடித்து கிரச் சிற்குப் போய் அனுவையும் தூக்கிக் கொண்டு வீடு செல்லச் சொல்லிவிட்டான்.
அனுவும்..மாலை கிரச் சில் ஆட்டோவை நிறுத்திவிட்டு..குழந்தையை அழைத்துவரச் சென்றாள்.
குழந்தை ஆயாவின் மடியில் படுத்து விளையாடிக் கொண்டிருந்தது.இவள் கூப்பிட்ட போது வர மறுத்து அழுதது.
"அனுகுட்டி..இது உன் அம்மாடா..சமர்த்தா அம்மா கிட்ட போ' என கொஞ்சினாள் ஆயா..
கீதாவிற்கு விழியோரம் நீர்..
'அப்பாவையே..அம்மாதான் குழந்தைக்கு அறிமுகம் செய்கிறாள்..என்பார்கள்..ஆனால்..இன்று கிரச் ஆயா குழந்தைக்கு அதன் அம்மாவை அறிமுகப் படுத்துகிறாளே'என்று மனதிற்குள் விம்மினாள்

Friday, September 14, 2012

டீசல் விலை உயர்வு...தலைவர்கள் கருத்து...(நகைச்சுவை)




மன்மோகன் சிங்- இது குறித்து நான் மௌனமாய் இருப்பதற்குக் காரணம்..என் மௌனம் ஆயிரம் பதிலுக்கு சமம் என்பதால் தான்.

சிதம்பரம் - மக்கள் ஐஸ்கிரீம் விலை உயர்ந்தால் மௌனமாய் உள்ளனர்.பிஸ்ஸா விலை உயர்ந்தால் மௌனமாய் ஏற்றுக் கொள்கின்றனர்.டீசல் உயர்ந்தால் ஏன் கத்துகிறார்கள்? என்றே புரியவில்லை.

கலைஞர்- தி.மு.க., இந்த உயர்வை வன்மையாகக் கண்டிக்கிறது.ஆனால் இது விஷயமாக மைய அரசைக் கண்டிக்காது

ஜெயலலிதா- டீசல் விலை உயர்வை நான் முதலிலேயே கண்டித்தேன்.கருணாநிதி இப்போது கண்டிப்பது போல கபட நாடகம் ஆடுகிறார்.

ராமதாஸ்- இந்த விலை உயர்வுக்கு திராவிடக் கட்சிகளே காரணம்.அடுத்தத் தேர்தலில் யாருடனும் கூட்டணியின்றி பா.ம.க., ஆட்சியைப் பிடிக்கும்

விஜய்காந்த்- ஜெ வும் கலைஞரும் தமிழகத்தைக் கெடுத்ததோடு இல்லாமல்..இப்போது பாரதத்தையே கெடுக்க சூழ்ச்சி செய்கிறார்கள்.இதை நான் முறியெடுப்பேன்.திமுக, அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை தேமுதிக புறக்கணிக்கும்

அத்வானி - இந்த விலை உயர்வால் பாராளுமன்றத்திற்கு முன்னதாக தேர்தல் வர வாய்ப்பிருக்கு.

சுப்ரமணியசுவாமி- இந்த உயர்வுக்கு காரணம் சோனியாவும் சிதம்பரமும் தான்.அதற்கான ஆதாரங்களைத் திரட்டிவருகிறேன்.கூடிய விரைவில் இவர்கள் மீது வழக்குத் தொடர்வேன்.

வைகோ- கன்யாகுமரியிலிருந்து..தூத்துக்குடி வரை இந்த உயர்வைக் கண்டித்து மதிமுக போராட்டம் நடத்தும்.

கம்யூனிஸ்ட்கள்- இந்த உயர்வை கண்டிக்கிறோம்.முதல்வரை மரியாதை நிமித்தம் சந்திக்க உள்ளோம்.


Thursday, September 13, 2012

வாக்குகள் என்று வந்தாலே கள்ளம் வந்துவிடுகிறேதே??!!




தேர்தலில் வெற்றி தோல்விகளை வேட்பாளர்கள் பெறும்வாக்குகளை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.

வேட்பாளர்களின் திறமையையோ..தகுதியையோ யாரும் கணக்கெடுத்து வாக்களிப்பதில்லை.அப்படி அளித்தாலும் அந்த வேட்பாளர் டிபாசிட் இழக்கும் அளவே வாக்குகள் பெற முடியும்.

பல தேர்தல்கள் முடிவகளை கள்ள ஓட்டுகளும்..ஏற்கனவே அடக்கமானவர்கள் மீண்டு வந்து போடும் வாக்குகளும் தீர்மானித்துவிடும்.

இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்..வாக்குகள்...என்ற பெயர் எங்கு வந்தாலும்..அங்கு ஊழல், கள்ள வாக்கு  ஆகியவற்றை தவிர்க்க முடியாது.

அதே தான் தமிழ்மணத்திலும் நடைபெறுகிறது..

இங்கு தரமான பதிவுகள் ..குறைந்த பட்ச வாக்குகளைக் கூட பெறாது..பரிந்துரையில் வரமுடியாது டிபாசிட் இழக்கின்றன.

சில பதிவுகள் குறைந்த பட்ச வாக்குகளை..நண்பர்கள் மூலம் பெற்று..பதிவரின்..டிபாசிட்டை தக்க வைத்துக் கொள்கின்றன.

சில கள்ள வாக்குகள் ..இங்கு..ராங்க் ஐடி கள் மூலம் விழுகின்றன.இதற்கு குறிப்பிட்ட பதிவரை குற்றம் சாட்டி பயனில்லை.

முடிந்தால்..குற்றம் சாட்டுபவரும்..தன் பதிவிற்கு இதே போல் வாக்குகள் அளித்து மகுடம் சூட்டிக் கொள்ளட்டும்.

இதற்கு..இம்முறையை ஒழிக்க வழியே இல்லையா??

இருக்கிறது..வாசகர் பரிந்துரையை ஒருமுறை..இதே போன்ற நிலை வந்ததால்..தமிழ்மணம் சில காலம் நிறுத்தி வைத்தது.அது போல மீண்டும் செய்ய வேண்டும்..அல்லது..அதிக வாக்குகள் பெறும் பதிவுகள் என்பதை மாற்றி வேறு முறை ஏதேனும் கொண்டுவர வேண்டும்..

ஏனெனில்..வாக்குகள் என்றாலே..மக்களுக்கு..கூடவே கள்ளத்தனமும் கூடுவது இந்திய ஜனநாயகத்தின் வாடிக்கைதானே!

Wednesday, September 12, 2012

அப்பா........(சிறுகதை)






'செல்வம்...நீ அலுவலகத்திற்கு கிளம்பறதுக்கு முன்னால ஐநூறு ரூபாய் கொடுத்துட்டுப்போ...மருத்துவர் கிட்டே போகணும்..இராத்திரி ஆரம்பித்த நெஞ்சுவலி இன்னமும் இருக்கு' என்றார் சுந்தரேசன் மகனிடம்.

'மாதக்கடைசி..பணத்துக்கு நான் எங்கப்பா போவேன்?'சட்டைபையைத் தடவிப்பார்த்துக் கொண்டே சொன்னான் செல்வம்.

நாளைக்கு அவனது திருமணநாள்..திருமணமாகி பத்து ஆண்டுகள் முடிந்திருந்தன.

'புடவை ஒன்று வாங்கிக்கொடுத்து மனைவியை நாளைக்கு இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கவேண்டும்'என்று எண்ணி இரண்டாயிரம் ரூபாயை சட்டைப்பையில் பத்திரமாய் வைத்திருந்தான்.

'என்னடா..செல்வம் இப்படிச்சொல்றே..இனிமே நெஞ்சுவலின்னா..தாமதிக்காம உடனே எங்கிட்டே வரணும்னு..மருத்துவர் போன முறையே சொல்லியிருக்காரே..மறந்துட்டியா?'

'மருத்துவருக்கு என்னப்பா..அப்படித்தான் சொல்வார்.இப்ப எல்லாம் தலைவலின்னு போனால் கூட ..எக்ஸ்ரே எடுன்னு..ஸ்கேன் எடுன்னு நம்பகிட்டே இருக்கிற பணத்தையெல்லாம் கறந்துடுவார்..கொஞ்சம்
பெருங்காயத்தூளை வாயில் போட்டு..கொஞ்சம் மோர் குடிங்க சரியாகிவிடும்...'என்று கூறியபடியே அலுவலகம் கிளம்பினான் செல்வம்.

மாலை மணி மூணு இருக்கும்.

அலுவலகத்திற்கு செல்வத்தின் மனைவி தொலைபேசினாள்'அப்பா..மூச்சு பேச்சு இல்லாம கிடக்கிறார்..உடனே வாங்க..'

அவன் வீடு போய் சேர்வதற்குள்..சுந்தரேசன் கதை முடிந்து விட்டது.

இறுதிக் காரியங்கள் எல்லாம் முடிந்ததும்..அப்பாவுடையது என்று சொல்லிக்கொள்ள இருந்த மரப்பெட்டி ஒன்றைத்திறந்தான்.

அதில் சில தேவையில்லாத பழுப்பேறிய காகிதங்கள்..அம்மா போட்டிருந்த சில கண்ணாடி வளையல்கள்..அப்புறம்..அவன் குழந்தையாய் இருந்தபோது போட்டிருந்த சில சட்டைகள்..பிறகு..அது என்ன நீல நிறத்தில் .. சிறு புத்தகம் போல்...

எடுத்தவன் அதிர்ந்தான் ...வீட்டின் அருகாமையில் இருந்த ஒரு வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகம்.

சுந்தரேசன்..சிறிது சிறிதாக அறுபதாயிரம் ரூபாய் வரை..தன் மகனை வாரிசுதாரராகப் போட்டு பணம் சேர்த்திருந்ததை அது காட்டியது.

Tuesday, September 11, 2012

மெகா சீரியல்களும்..பதிவர்களும்..




மெகா சீரியல்கள் ஒரே மாதிரி..பெண்களை அழ வைக்க வேண்டும் என்னும் நோக்கிலேயே எடுக்கப்படுகின்றன என்பது ஒரு பக்கம் இருந்தாலும்..

அந்தத் தொடர்களில்..பெண்ணே பெண்ணுக்கு எதிரியாய் ..கதாநாயகியை கொடுமைப் படுத்துவதும்..அடியாட்களை வைத்து கொலை செய்வதும் போன்ற அநியாயத்திற்கு லாஜிக்குடன் காட்சிகள் அமைந்திருக்கும்.

இதற்கிடையே, தொடர்களை எப்படி வளர்ப்பது எனத் தெரியாமல்...

வேறு ஒரு தொடரில்..யாருக்கேனும் பக்கவாதம் வருவதாய் இருந்தால்..அதேபோன்று அடுத்தவாரம் வேறு ஒரு தொடரில் ஒரு கதாபாத்திரத்திற்கு அந்த நோய் வந்திருக்கும்..

கணவன் மனைவிக்குத் தெரியாமல்..வேறொரு பெண்ணுடன் வாழ்வது போல வந்தால்....வேறு தொடர்களிலும் அதே போன்ற காட்சிகளை எதிர்பார்க்கலாம்..

இதெல்லாம் கற்பனை வளம் குறைவதால் என்று கூற முடியாது..சீரியலை சேனல்கள் வளர்க்கச் சொன்னால் ..கதாசிரியர்தான் என்ன செய்வார்..இயக்குநர்தான் என்ன செய்வார்..தயாரிப்பாளர்தான் என்ன செய்வார்.நடிகர்களும் மீட்டர் விழுந்தால் போதும் என்பவர்கள்..

அது போகட்டும்..பதிவர்களுக்கும்..இதற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா..?

இங்கும் கிட்டத்தட்ட அதுதான் நடைபெறுகிறது..

ஒரு பதிவரின்..பதிவு அதிக கமெண்டுகளையும், ஓட்டுகளையும், வருவோர் எண்ணிக்கையையும் அதிகரித்தால்..

அந்த பதிவை முன்மாதிரியாகக் கொண்டே..பல பதிவர்களின் பதிவுகள்...

உதாரணத்திற்கு..பதிவர் சந்திப்பு பற்றிய அநேக பதிவுகள்..

பிறகு....

இன்னும் சொல்லுவேன்..ஆனால்..

நான் யாரைப்பார்த்தாவது..பொறாமைக் கொண்டு..இப்பதிவை எழுதியுள்ளதாக சிலர் நினைத்துவிடக் கூடும்.ஆகவே இத்துடன் நிறுத்துக் கொள்கிறேன்.


Sunday, September 9, 2012

நான் அறிந்த மணிஜி...





மணிஜி...

அனைத்து பதிவர்களும் அறிந்துள்ள பதிவர்..இல்லை..இல்லை..இனிய நண்பர்..

ஆம்..இவர் பதிவராக நமக்கு அறிமுகமானாலும்...சிறந்த நண்பர் என்பதே சிறந்தது.

இவர் தன்னைத்தானே..ஒரு குடிகாரராய்..சித்தரித்துக் கொண்டாலும்..

மது அருந்துவதால்..அவரது தொழில் பாதிக்கப்படாமல் இருக்கிறது.அவர் வேலையில் ஈடுபடும் போது அவரது உழைப்பையும், திறமையையும் நேரில் பார்த்தவன் என்ற முறையில் இதை சொல்கிறேன்.

நட்பு பெரிதென நினைப்பவர்..எல்லா விஷயங்களையும் ஈசியாக எடுத்துக் கொள்பவர்.ஆகவெதான்..மற்றவர்களும் அப்படியே இருப்பார்கள் என எண்ணி அவர்களை கலாய்ப்பதும்..அவர்களை கிண்டலடிப்பதையும் செய்பவர்.

இவரைப் புரிந்து கொண்டவர்கள் இதை சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள்..

புரிந்துக் கொள்ளாதவர்கள்..புரிந்துக் கொண்டதும்தான்..நான் சொன்னதில் உள்ள உண்மை தெரியும்..

மணிஜியும்...தனக்கு அதிகம் பழக்கம் இல்லாதவர்களை கலாய்க்க வேண்டாம் என்றே தோன்றுகிறது.என் கூற்றில் உள்ள உண்மையை மணிஜி புரிந்துக் கொள்வார் என்றே எண்ணுகிறேன்.



Wednesday, September 5, 2012

சாய்பாபாவின் 40,000 கோடி சொத்துக்கள் யாருக்கு?



மறைந்த சத்ய சாய்பாபாவின் உயில் இப்போது வெளியாகியுள்ளது.
ரூ. 40,000 கோடி சொத்துக்கள் கொண்டது சத்ய சாய்பாபாவின் அறக்கட்டளை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் மறைந்ததையடுத்து அவரது சொத்துக்களை யார் பராமரிப்பது என்பது குறித்த பிரச்சனைகள் எழுந்தன.

இந் நிலையில் 1967ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதி சாய் பாபா எழுதி வைத்த உயில் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. சாய் பாபாவின் உதவியாளரான சத்யஜித் சாலியன் அதை நேற்று ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் இயக்குனர் குழுவிடம் சமர்பித்தார்.

எனது பக்தர்களால் தரப்பட்ட எல்லா நன்கொடைகளும் மக்கள் நலப் பணிகளுக்கே செலவிடப்பட வேண்டும். சொத்துக்களில் எந்தப் பகுதியும் வேறு எந்த தனிப்பட்ட நபருக்கும் இல்லை. எனக்கு என்று எந்த தனிப்பட்ட சொத்தும் இல்லை. எனது குடும்பத்தினரின் சொத்துக்களிலும் கூட எனக்கு பங்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்று கூறப்பட்டுள்ளது.

தனது அறக்கட்டளையின் உறுப்பினரும் சார்ட்டர்ட் அக்கெளண்டன்டுமான இந்துலால் ஷா, மும்பை உயர் நீதிமன்ற சொலிசிட்டராக இருந்த டிஐ சுக்லா ஆகியோரை சாட்சிகளாக வைத்துக் கொண்டு இந்த உயிலை எழுதியுள்ளார் பாபா. இதில் இந்துலால் மட்டுமே இப்போது உயிரோடு உள்ளார்.
இந்த உயில் வெளியானதன் மூலம் பாபாவின் அறக்கட்டளையின் சொத்துக்களில் அவரது குடும்பத்தினருக்கு எந்த பங்கும் இல்லை என்பது தெளிவாகிவிட்டது.
சாய்பாபாவின் அறக்கட்டளை புட்டபர்த்தியில் பல்கலைக்கழகம், மருத்துவமனை, மியூசியம், கோளரங்கம், ரயில் நிலையம், விமான நிலையம், விளையாட்டு அரங்கம், பெங்களூரில் மருத்துவமனை, ஆசிரமம், தமிழகம் மற்றும் ஆந்திராவில் பல குடிநீர்த் திட்டங்கள், நாடு முழுவதும் பல கல்வி நிலையங்கள், சுகாதார மையங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் 165 நாடுகளில் இந்த அறக்கட்டளைக்கு ஆசிரமங்கள் உள்ளன. இன்னும் அதற்கு உலகம் முழுவதும் இருந்தும் நன்கொடைகள் வங்கிகள் மூலமாக வந்து கொண்டு தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 (தட்ஸ்தமிழ்)

Sunday, September 2, 2012

விகடனும்..ராஜுமுருகனும்...




ஆனந்தவிகடனில்..சுஜாதா (கற்றதும் பெற்றதும்), வண்ணதாசன் (அகமும் புறமும்),நாஞ்சில் நாடன் (தீதும் நன்றும்), எஸ்.ராமகிருஷ்ணன் (துணையெழுத்து) வரிசையில் ராஜூமுருகனின் வட்டியும் முதலும்..பெரும்பான்மையினர் படித்து வருவது தெரியும்.ஆயினும்..ஏதேனும் பரவச நிகழ்ச்சி நடந்தால்..அதை அனைவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என எண்ணுவதில்லையா?  அப்படி ஒரு எண்ணமே..இப்பதிவு..

ஒவ்வொரு வாரமும் அருமையாக எழுதி வரும்..ராஜூமுருகன்..இவ்வாரம் பயணத்தைப் பற்ரி எழுதியுள்ளார்.கரும்பின் சுவை.இருப்பினும் அடிக்கரும்பாய் சுவையைத் தரும் பகுதி கீழே..

"என் வாழ்க்கையில் சரிபாதிப் பொழுதுகள் பயணங்களுடந்தான் கழிந்திருக்கின்றன.வித விதமான பஸ்களும் ரயில்களும் ஒலிகளும், ஒளிகளும் வார்த்தைகளைக் கடந்த காட்சிப் படிமங்களாக மனதில் படிந்துகிடக்கின்றன.மூணாறு மலையில் போய் பஸ் திரும்புகிற நொடியில் ஒரு பெரிய அன்னாசி தோட்டமும் நடுவில் நிற்கிற ஒற்ரை மனுஷியும் பொசுக்கென்று எல்லாவற்றையும் வெளித்தள்ளி மனதில் நிரம்பிவிடுகிறார்கள்.தடதடத்துப் போகும் பெரும் தேயிலைக்காடு, திருச்சியைத் தொடும்போது வரும் ரசாயனத் தொழிற்சாலையின் துர்நாற்றம், வேலூர் மண்ணுக்குள் நுழையும் போது அடிக்கும் தோல் பதனிடும் நாற்றம், நீடாமங்கலத்தைத் தாண்டியதும் ஒரு பாழ் மண்டபச் சுவரில் கடக்கும் 'கோல்ட் ஸ்பாட்" விளம்பரம்,கரிசல் அறுந்து சடாரெனச் செம்மண் விரியும் ஒரு புள்ளி, பளையங்கோட்டையை கடக்கும் போதெல்லாம் பாதி உதிர்ந்த பைபிள் வாசகங்களோடு கடக்கும் மேரி மாதா, கோயம்பத்தூர் எல்லை வந்ததுமே பாஜாஜ் எம் 80யில்  பஞ்சு மூட்டை கட்டிக் கொண்டு கடக்கும் ஒருவர், ராத்திரி எப்போது கடக்கும் போதும் இட்லிப் பானை மூடியைத் தூக்கிக் கொண்டு ஒரு ஆத்தா பேசிக் கொண்டிருக்கிற மதுரை டவுன் ஹால் ரோடு, அதிகாலையில் 'சரவணப் பொய்கையில்' பாடல் ஒலிக்கும் மினி பஸ்சில் பச்சைப் பசேலெனக் கறிவேப்பிலை வாசம் தூக்க வாழை இலைக்கட்டுகளுக்கு நடுவே உட்கார்ந்து இருக்கும் நாஞ்சிக் கோட்டை ரோடு, 'சூடா சமோசே..சூடா சமோசே..' என ஒருவர் ராகம் பாட ஒவ்வொருமுறை மின்சார ரயில் கடக்கும்போதும் புதிதாக வரும் செங்கல்பட்டு ஏரி, மூட்டைப் பூச்சிகள் மண்டிய மரப்படுக்கையும் காரை உதிர்ந்த சுவர்களும்.."ஆந்திரா மால் சார்..நருவுசு சார்..போலீஸ் பிராப்ளம்லாம் இல்ல..வேணுமா?' என்கிற சித்தூர் லாட்ஜ், கொல்லை முற்றத்தில் குளமும் பேரழகு இருளில் பொசுக்கென்று விளக்கெரியும் கோயில் கொண்ட திருச்சூர் என வெயிலும் மழையும் ஒளியும் இருளும் ஒவ்வொரு பயணத்துக்கும் புதிது புதிதாக இருக்கின்றன"

அடடா...என்ன ஒரு ரசனை..

நான் தொடர்ந்து இவரை படித்து வியந்து வருகிறேன்..ஆனால் இந்த வாரம்..என் வியப்பு எல்லை மீறியதால்..உடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..

படிக்காதவர்கள் கண்டிப்பாய் படிக்கவும்...

Tuesday, August 28, 2012

வீணாகும் உணவுகள்....




இன்று பல திருமணங்களில் தங்கள் வசதியைக் காட்ட 30 வகை உணவுகள்..40 வகை உணவுகள் என பரிமாறப்படுகின்றன.ஆனால் இவர்கள் மறந்துவிட்டது..உண்பவர்க்கு இருப்பது ஒரு வயிறு என்பதை.

ஆகவே..பலர்..பல உணவுவகைகளை வீணடிக்கின்றனர்.இனிப்பு வகைகள் உண்ணக்கூடாது என்பவர்கள் அவற்றை அப்படியே ஒதுக்கி விடுகின்றனர்.ஆனால் இவற்றையெல்லாம் பார்த்து ரத்தக் கண்ணீர் விடுவது மத்தியத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண்வீட்டார்..போலி  கௌரவம்..பல லட்சக்கணக்கான பணத்தை வீணடிக்கிறது.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நியோ20 என்ற பெயரில் ஜி20 நாடுகளின் மாநாடு நடந்தது.அதில் வெளியிடப்பட்ட ஐ.நா., அறிக்கையில்..

'உலகம் முழுதும் ஆண்டொன்றுக்கு 130 கோடி டன் உணவு வீணாகிறதாம்.உணவுப் பொருட்கள் அவை உற்பத்தியாகும் விளை நிலத்தில் தொடங்கி போக்குவரத்து, சேமிப்புக் கிடங்கு சந்தை எனத் தொடர்ந்து வீட்டின் உணவு மேசைவரை வீணடிக்கப்படுகிறது.

இதில் அமெரிக்கா மட்டும் உணவில் 25 விழுக்காடுகளை குப்பையில் எறிகின்றதாம்.ஐரோப்பாவில் சராசரியாக ஒருவர் ஆண்டுக்கு 300 கிலோ உணவை வீணடிக்கிறார் என்றால்..இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளில் இது 170கிலோவாக உள்ளதாம்.இந்தப் புள்ளி விவரங்கள் ஸ்வீடனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவால் திரட்டப்பட்டவை.

டிஸ்கி - நாட்டில் ஒரு வேளை உணவிற்குக் கூட வழியில்லாமல் வாடும் மக்களும் கோடிக் கணக்கில் உள்ளனர்..
 உணவுப் பொருட்கள் வீணானாலும் பரவாயில்லை மக்களுக்கு இலவசமாகக் கொடுக்கக் கூடாது என்னும் பிரதமர்களும் உள்ளனர்.

Friday, August 24, 2012

பதிவர் சந்திப்பும்..நானும்..




வலைப்பதிவர்களுக்கு ஒரு சங்கம் வேண்டும் என எண்ணிய முதல் பதிவர் கேபிள் ஆவார்.பின்னர் அவர் பல பிரபல பதிவர்களுடன் சேர்ந்து குழுமத்தை ஆரம்பித்தார்.கோவை, ஈரோடு,திருப்பூர் என அனைத்து ஊர்களிலிருந்தும் பல பதிவர்கள் வந்திருந்தனர்., டிஸ்கவரி பேலஸில் கூட்டம் நடந்தது.

ஆர்வமுள்ள பதிவர்கள் அனைவரும்...கலந்து கொண்டு கூட்டம் சிறப்பாய் நடந்தும்..சில பதிவர்களின் ஈகோ வால்...ஆரம்பித்த நிலையிலே சங்கம் நிலைகொண்டு  மேலே நகரவில்லை.

பின்..இப்போதுதான் மீண்டும் புதியதாக பதிவர் சந்திப்பு மாநாடு நடைபெற உள்ளது.

அன்று தொடங்கிய சங்கத்தையும்..அன்றைய நிர்வாகிகளையும் ஆலோசித்து..அதன் தொடர்ச்சியாக இந்த மாநாடு நடத்தப் பட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது.ஏனெனில்..அன்று இச் சங்கத்தை வளர்க்க பல கனவு கண்டவர்கள் அன்று கூட்டத்திற்கு பொறுப்புவகித்த  பல மூத்த பதிவர்கள்.

உடனே..நான் குறை கூறுவதாக எண்ண வேண்டாம்..

மாநாடு சிறப்புற அமைய என் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை..

சென்ற ஆண்டு நான் மேடையேற்றிய 'கருப்பு ஆடுகள்' நாடகத்திற்காக எனக்கு சிறந்த ஆல்ரவுண்டர் என்னும் விருதை மைலாப்பூர் அகடெமி நாளை வழங்க இருக்கிறது.

தவிர்த்து மாலை ஏழு மணி அளவில்..எனது புதிய திரில்லர் நாடகம் 'மழையுதிர் காலம்' நாரத கான சபாவில் நடைபெறுகிறது.

இக்காரணங்களால் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள இயலாது என எண்ணுகிறேன்..

மீறி, நேரம் கிடைக்குமாயின்..வந்து தலை காட்டலாம்  என்ற எண்ணமும் உள்ளது.

மீண்டும் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்து வரும் அனைத்து பதிவர்களுக்கும்..என் வாழ்த்துகள்.

Thursday, August 23, 2012

தீக்குளித்ததைப் பார்த்து தீக்குளித்த 4ம் வகுப்பு மாணவன்



மேலூர் அருகே டிவியில் ஆட்டோ டிரைவர் ஒருவர் தீ்க்குளிப்பதைப் பார்த்த 4ம் வகுப்பு மாணவன் தன் உடலில் மண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கோட்டநத்தம்பட்டியை சேர்ந்த முத்துபோஸ் என்பவரின் மகன் சக்திவேல்(10). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறான். இந்த கால சிறுவர், சிறுமியர் வெளியே சென்று ஓடியாடி விளையாடாமல் டிவி, கம்ப்யூட்டரே கதி என்று இருக்கிறார்கள். அதில் பார்க்கும் பலவற்றை தானும் செய்ய முயற்சிக்கிறார்கள்.
அப்படித் தான் வீட்டில் இருந்த சக்திவேல் டிவி பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவகாசியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதை எதிர்த்து ஆட்டோ டிரைவர் கணேசன் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து தனது வீட்டின் மொட்டைமாடியில் இருந்து கீழே குதித்த காட்சி வந்தது. அதைப் பார்த்த சக்திவேலுக்கு நாமும் தீக்குளித்துப் பார்த்தால் என்ன என்று தோன்றியது.
நினைத்ததை செயலாக்க நினைத்த அவன் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்தான். உடலில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததும் சிறுவன் அலறத் துவங்கினான். அவனது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவனை சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரது மருத்துவமனைக்கு சிறுவன் அனுப்பி வைக்கப்ப்டடான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளித்துவரும் போதிலும் அவனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

(நன்றி -தட்ஸ்தமிழ்)

Sunday, August 19, 2012

காதலும்..திருமணமும்...




ஓரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும், திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்..

அதற்கு அந்த ஞானி, 'அது இருக்கட்டும்..முதலில் நீ ரோஜா தோட்டத்திற்குப் போ..அங்கு உயரமான ரோஜாச் செடி எது என எண்ணுகிறாயோ, அதை எடுத்துக்கொண்டு வா..ஆனால் இரு நிபந்தனை, நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக்கூடாது' என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான்.

ஞானி, 'எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி?' என்றார்.

சீடான் சொன்னான். 'குருவே..வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னை கவர்ந்தது.அதைவிட உயரமான செடி இருக்கக் கூடும் என தொடர்ந்து நடந்தேன்.ஆனால்..பின் தென்பட்டவை அனைத்தும் குட்டையான செடிகளே..வந்த வழியே திரும்பிவரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியை கொண்டுவர முடியாமல் போய் விட்டது'

இப்போது ஞானி சொன்னார், 'இதுதான் காதல்'..பின்னர் ஞானி சொன்னார், 'சரி போகட்டும்.அதோ அந்த வயலில் சென்று உனக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரியகாந்திச் செடியை பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலான ஒரு நிபந்தனை.ஒரு செடியைப் பிடுங்கிய பின் ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது'

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரியகாந்திச் செடியுடன் வந்தான்.

ஞானி கேட்டார், 'இதுதான் அந்த தோட்டத்தில் அழகான சூரியகாந்திச் செடியா?'

சீடன் சொன்னான், 'இல்லை.இதைவிட அழகான செடிகள் இருக்கின்றன.ஆனால் இம்முறை முதல்முறை கோட்டை விட்டதுபோல இந்த முறையும் விட்டுவிடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியை பிடுங்கி வந்து விட்டேன்.நிபந்தனைப் படி ஒரு செடியை பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன்பிறகு இதைவிட அழகான செடிகளை நான் பார்த்த போதும் பறிக்கவில்லை'

இப்போது ஞானி சொன்னார், 'இதுதான் திருமணம்'

(ஓஷோ)  

Friday, August 17, 2012

ராமனும்..மன்மோகனும்




ராமாயணத்தில் ஒரு கதை உண்டு..
ராமன் ஒரு சமயம் தாகம் எடுக்க தன்னிடம் இருந்த தனுசை கரையில் ஊன்றிவிட்டு சுனையில் தண்ணீர் பருகிவிட்டு..பின் ஊன்றிய தனுசை எடுக்கையில்..அதனடியில் ஒரு தவளை தனுசு தன் மீது ஊன்றியதால் மரணப்போராட்டத்தில் இருந்தது.அதைக்கண்டு வருந்திய ராமன்.."ஏ..தவளையே..நான் தனுசை ஊன்றும் போது நீ குரல் கொடுத்திருக்கலாமே' என்றார்.

அதற்கு..தவளை''ராமா..எனக்கு யாரேனும் தீங்கிழைத்தால்..'ராமா எனைக்காப்பாற்று' எனக் குரல் கொடுக்கலாம்..ஆனால் செய்வது ராமனே என்னும் போது நான் யாருக்கு குரல் கொடுக்கமுடியும்?' என்றதாம்.

காமன்வெல்த் ஊழல், 2ஜி 176000 கோடி ஊழல் என்றெல்லாம் சேதி வந்தபோது சம்பந்தப்பட்ட நபர்/அமைச்சர்களை பதவி விலகச்சொன்ன பிரதமர்..நிலக்கரி சுரங்க உழல் 186000 கோடி என்றபோது அச்சமயம் அத்துறையை தன்னிடம் வைத்திருந்ததால் பதவி விலக வேண்டாமா?

உனக்கொரு நீதி..மற்றவனுக்கு ஒரு நீதியா?


Wednesday, August 15, 2012

தீக்குள் விரல்..



வாழ்த்துச் சொல்லி

பூங்கொத்து கொடுக்கையில்

விரல்கள் தீண்டின

பூவினும் மெல்லிய

மலர் ஒன்றை


2) உனக்கு என்ன வேண்டும்

என்றேன்

கூலிங் கிளாஸ் என்றாய்

ஏறிட்ட என்னிடம்

என்னை நீ பார்க்கையில்

நீ அறியாது

உன்னை நான் பார்க்கலாமே

என்றன உன் கண்கள்


3)பிரியும் நாள்

கண்களின் நீர் துடைத்த

கைக்குட்டையை யாசித்தேன்

வரும் நாட்களில்

என் கண்ணீர் துடைக்க


4)தினமும் ஒருமுறை

உன்னை தழுவிட

அனுமதித்தாய்

அப்போது உணரவில்லை

சாவையும் ஒருநாள்

தழுவிட வேண்டுமென

Tuesday, August 14, 2012

விண்வெளியில் இந்தியாவின் தேசியக் கொடி






 அமெரிக்க விண்வெளி வீராங்கனையும், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவருமான சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றி இந்தியர்களை பெருமைப்படுத்தியுள்ளார்.
இந்தியா முழுவதும் இன்று 66வது சுதந்திர தினம் கோலாகலமாகவும், உற்சாகத்துடனும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி சர்வதேச விண்வெளி நிலையத்தில் தற்போது முகாமிட்டுள்ள இந்திய-அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், தேசியக் கொடியை ஏற்றி இந்தியர்களைப் பெருமைப்படுத்தியுள்ளார்.
இதன் மூலம் விண்வெளியில் இந்தியாவின் தேசியக் கொடி பறந்து புதிய வரலாறு படைத்துள்ளது. இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் தனது சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக அப்போது சுனிதா குறிப்பிட்டார். சுனிதாவின் தந்தை குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார். அவரது தாயார் ஸ்லோவேனியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்கு மாத கால ஆய்வுப் பயணமாக தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளார் சுனிதா என்பது நினைவிருக்கலாம். இது அவரது 2வது விண்வெளி பயணமாகும்.
தேசியக் கொடியை ஏற்றி வைத்த பின்னர் சுனிதா வில்லியம்ஸ் பேசுகையில், ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்தி தினத்தைக் கொண்டாடும் இந்தியாவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா ஒரு அருமையான நாடு. அந்த நாட்டின் ஒரு அங்கமாக நானும் இருப்பதை பெருமையாக உணர்கிறேன்.
நான் ஒரு அரை இந்தியர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். எனது தந்தை குஜராத்தைச் சேர்ந்தவர். எனவே இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம் எனக்குத் தெரியும். இந்த நாட்டின் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் நானும் என்னை இணைத்துக் கொள்வதில் பெருமைப்படுகிறேன் என்றார் சுனிதா.

உபரி தகவல்
இந்திய தேசியக் கொடி 22-7-1947 அன்று. தற்போதைய வடிவில் ஏற்கப்பட்டது.நீள் சதுர அளவில் உள்ள கொடியில் காவி,வெள்ளை,பச்சை ஆகிய மூவண்ணங்கள் உள்ளன.கொடியின் நடுவில் நீல வண்ணத்தில் அசோக சக்கரம் 24 ஆரத்துடன் உள்ளது.இக்கொடியை உருவாக்கியவர் பிங்கிலி வெங்கையா என்பவர் ஆவார்.கொடியை கையால் நெய்த காதி துணியில் செய்ய வேண்டும்

Monday, August 13, 2012

ஊழல் ஒழிப்பு போராட்டங்களால் பயன் ஏதுமில்லை




 ஊழலுக்கு எதிரான ராம்தேவ், அன்னா ஹசாரே போராட்டங்களால் ஒரு பலனும் கிடைக்காது என்று பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தலைவர் மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஊழலுக்கு எதிரான அண்ணா ஹசாரே, யோகா குரு ராம்தேவ் ஆகியோரின் உண்ணாவிரதம் உள்ளிட்ட அறவழிப் போராட்டத்தால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. இந்த போராட்டம் காற்று நிரப்பப்படாத ஒன்று. இன்னும் 15 ஆண்டுகளுக்கு நாட்டில் ஊழல் நிறைந்திருக்கும். இந்தக் காலமாற்றத்தில் எந்தவிதமான நன்னெறியையும் எதிர்பார்க்க முடியாது.
இத்தகைய காலமாற்றத்தைக் கடந்து நாடு முன்னேறிச் செல்ல அறிவியல் சார்ந்த, நவீன கருத்துகளை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும். மேலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை நாட்டின் அனைத்து இடங்களிலும் பரவச் செய்ய வேண்டும். இதில் ஊடகங்கள் ஒன்றுக்கொன்று சமநிலையிலும், நவீனமயத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்றார் கட்ஜு.

டிஸ்கி - இதைத்தான் பட்டுக்கோட்டையார் அன்றே சொல்லிவிட்டார்..'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது' என.

Saturday, August 11, 2012

இ‌ந்‌தியாவு‌க்கு ‌நிதான‌ம் தேவை - அறிவுரை சொல்கிறார் ராஜபக்க்ஷே



''அயல் நாடுகளின் விவகாரங்கள் தொடர்பாக இந்தியா எடுக்கும் தீர்மானங்கள் நிதானத்துடன் எடுக்கப்பட வேண்டும்'' எ‌ன்று இல‌ங்கை அ‌திப‌ர் மஹிந்த ராஜபக்சே கூ‌றியு‌ள்ளா‌ர்.

இந்திய ஊடகமொன்றுக்கு  அளித்த பே‌ட்டி‌‌யி‌ல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது வேறும் அரசியல் கட்சிகளுடன் தனித் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினாலும் இறுதித் தீர்மானம் நாடாளுமன்றின் ஊடாகவே எட்டப்படும். இதன் காரணமாகவே அனைத்து தரப்பினரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.

ஜனநாயக ரீதியில் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை அமுல்படுத்தப்படவில்லை என சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை. ஆணைக்குழுவின் பரிந்துரைகள் உரிய முறையில் ஆராயப்பட்டு அதன் பின்னர் அமுல்படுத்தப்படும்.

70 வீதமான இராணுவத்தினர் வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக விடுதலைப் புலி ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்கின்றனர்.எனினும், இந்தப் பிரச்சாரத்தில் உண்மையில்லை. 2009ம் ஆண்டு டிசம்பரில் 27000 படையினர் யாழ்ப்பாணத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 15000 மாக குறைக்கப்பட்டுள்ளது. மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் தொடர்ந்தும் வடக்கிலிருந்து மீட்கப்பட்டு வருகின்றன.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நீண்ட காலமாக நெருங்கி உறவு பேணப்பட்டு வருகின்றது. அயல் நாடுகளின் விவகாரங்கள் தொடர்பில் இந்தியா எடுக்கும் தீர்மானங்கள் நிதானத்துடன் எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்தமை தொடர்பில் அவர் இத்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இது செய்தி....

இனி நாம்...

இந்த விஷயத்தில் அறிவுரைக் கூற இவர் யார் என்ற கோபம் நமக்கு எழுந்தாலும்...

அடப்பாவிகளா..ஆமையைவிட நிதானமாய் செயல்படும் மைய அரசைப் பார்த்து..இன்னும் நிதானம் தேவை என்கிறாரே..இதற்குமேல் எப்படி...என்று அதிசயிக்கிறோம்.

இது சம்பந்தமாக மைய அரசு பேச்சுவார்த்தைக்கு ஒரு நாயரையோ..மேனனையோ அனுப்பும் என பட்சி சொல்கிறது.

Tuesday, August 7, 2012

படிக்க வேண்டிய தினமணி தலையங்கம்




ஏனிந்தபோலித்தனம்

லாட்டரிச் சீட்டு வாங்காமலேயே தனக்குக் கோடி ரூபாய் பரிசு விழ வேண்டும் என்று நினைப்பவரை எள்ளிநகையாடும் நாம், விளையாட்டில் எந்தவித ஆர்வமும் காட்டாமல், ஒலிம்பிக் போட்டியில் மட்டும் பதக்கங்களை இந்தியா அள்ளி வர வேண்டும் என்று பேராசைப்பட்டால் எப்படி?
ஒலிம்பிக் தடகளப் போட்டிக்குத் தகுதிபெற்றுப் பங்கேற்ற இந்தியர்களின் எண்ணிக்கை 14-ஐத் தாண்டாதபோது, நிறையப் பதக்கங்களைக் கனவுதான் காண முடியுமே தவிர, நடைமுறையில் அது எப்படிச் சாத்தியம்?
இன்றைய தேதிவரை நாம் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் ககன் நரங், விஜயகுமார் இருவரது வெற்றியால் ஒரு வெண்கலம், ஒரு வெள்ளி பெற்றோம். சாய்னா மூலம் ஒரு வெண்கலம் கிடைத்தது. மேரி கோம் அரையிறுதியில் நுழைந்துள்ளதால் வெண்கலம் உறுதி, தங்கம், வெள்ளி கிடைப்பது போட்டியைப் பொறுத்தது. ஆக, 13 விளையாட்டுகளில் பங்கேற்கச் சென்ற 83 பேர் கொண்ட இந்திய அணி இதுவரை பெற்றிருப்பது நான்கே நான்கு பதக்கங்கள்!
பாட்மிண்டன் போட்டியில் சாய்னா தங்கம் வெல்வார் என்று அவரது தரவரிசையைக் கருத்தில்கொண்டு நம்பிக்கை வைத்தோம். அவர் வெண்கலம்தான் பெற முடிந்தது. அடுத்த நம்பிக்கை கிருஷ்ணா பூனியா வட்டெறிந்து சாதனை நிகழ்த்துவார் என்று நம்பினோம். அவரால் ஏழாவது இடத்துக்குத்தான் வர முடிந்தது. இது இவர்களின் தவறு அல்ல. இவர்களது திறமையை மேலும் பட்டைதீட்டத் தவறிய இந்திய அரசின் தவறு. ஒலிம்பிக் நேரத்தில் மட்டும் இவர்களைத் திரும்பிப் பார்ப்பதும் மற்ற நேரங்களில் மறந்துவிடுவதும் இந்திய விளையாட்டுத் துறையின் தவறு.
ஒலிம்பிக்கில் மற்றவர்களோடு போட்டியிட்டு விளையாடி, தகுதித்தேர்வு நிலையிலேயே, அல்லது காலிறுதி, அரையிறுதியில் வெளியேறும் நம் இந்திய வீரர்களை, ஏதோ அவர்கள் தேசத் துரோகம் செய்துவிட்டதைப்போன்று கூனிக் குறுகிப் போகச் செய்கிறது நமது எதிர்பார்ப்புகள்.
அவர்கள் விளையாடத் தேவையான எதையும் செய்து கொடுக்காத இந்திய அரசை நாம் குற்றஉணர்ச்சிக்கு உள்ளாக்காமல், உலகத் தரத்துக்கு இணையாக ஆட இயலாமல் பின்தங்கிப் போன இந்திய வீரர்களின் குற்றஉணர்ச்சியைத் தூண்டி, கண்ணீர் சிந்த வைப்பதால் என்ன பயன்?
ஒலிம்பிக் சென்ற இந்திய வீரர்கள் விருதுகள் பெறாமல் திரும்பினால் அது அவர்கள் குற்றமல்ல. உலகத் தரத்துக்கு இணையான வீரர்களை உருவாக்கத் தவறிய இந்திய அரசின் குற்றம். விளையாட்டுப் போட்டியில் ஆர்வம் செலுத்தாமல், ஆனால், விளையாட்டுக்கான நிதிஒதுக்கீட்டில் முறைகேடு செய்வதில் மட்டும் ஆர்வம் காட்டும் அரசியல்வாதிகளின் குற்றம்.
தற்போது நான்கு விருதுகள் பெற்றவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டுக்கொண்டு ரொக்கப் பரிசை அள்ளி வழங்கும். இதே ஆர்வத்தை விளையாட்டு மேம்பாட்டுக்காக, பயிற்சிக்காக அரசுகள் செலவிடுவதில்லை. இந்த நான்குபேரில் துப்பாக்கி சுடுதல், பாட்மிண்டன் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் சொந்தத் திறமையால் அதைச் சாதித்தனர். அந்த ஏகலைவர்களுக்கு அர்ஜுனா விருது நிச்சயம்.
ஒலிம்பிக் தடகளத்தில் இதுவரை இறுதிச்சுற்றில் பங்கேற்றவர்கள் மில்கா சிங், பி.டி.உஷா, எஸ்.ஸ்ரீராம், குர்பஜன் சிங், அஞ்சு பாபி ஜார்ஜ். இப்போது ஆறாவது நபராக பூனியா. ஆறே ஆறு பேர் மட்டுமே!
இந்த நிலைமைக்காக வருத்தப்படவும், வேதனைப்படவும் செய்யாத இந்தியர்கள், பதக்கங்களை நாம் வென்றெடுக்கவில்லை என்று வருத்தப்படுவதில் அர்த்தம் இல்லை.
ஒவ்வொரு விளையாட்டுக்கும் நல்ல பயிற்சிக்களம், பயிற்சியாளர், விளையாட்டுக் கருவிகள் ஊக்கத்தொகை போன்ற எதையுமே வழங்காமல், அதிலும்கூட ஊழல் செய்தால், நாம் விருதுகளை எப்படிப் பெறமுடியும்? பொறியியல் கல்லூரியிலும் மருத்துவக் கல்லூரியிலும் இடம் பெறுவதற்காக மட்டுமே விளையாட்டைப் பயன்படுத்தும் ஊழல்களால் எப்படி சர்வதேச விருது கிடைக்கும்?
பொருளாதார ரீதியில் 9-வது இடத்திலும் மக்கள் தொகையில் இரண்டாம் இடத்திலும் உள்ள இந்தியாவினால் 4 பதக்கங்கள் மட்டுமே வெல்ல முடிந்ததை எண்ணி வருந்தும் இந்தியர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகிறார்கள்; இத்தகைய நிலைமைக்கு அரசுக்கு எந்த அளவுக்குப் பொறுப்போ அதே அளவு மக்களுக்கும் உள்ளது.
இந்தியாவில் எந்த நாளிலும் தொலைக்காட்சியில் காண நேர்ந்த விளையாட்டு, இந்தியர்களுக்கு எல்லா வீரர்களின் பெயரும் அத்துப்படியான விளையாட்டு கிரிக்கெட். நம் துரதிருஷ்டம், அந்த விளையாட்டு ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறவில்லை. கிரிக்கெட் ஒன்றைத் தவிர, எந்த விளையாட்டைப் பற்றியும் என்றைக்கும் கவலைப்படாமல், ஒலிம்பிக் நேரத்தில் மட்டும் நமது வீரர்கள் தங்கப் பதக்கமும், வெள்ளிப் பதக்கமும் பெறவில்லையே என்று நாம் ஆதங்கப்படுவது போலித்தனம் அல்லாமல் வேறென்ன?
ஒவ்வொரு விளையாட்டிலும் பயிற்சிபெறத் தேவையான விளையாட்டுக் களம், சூழல், சிறந்த பயிற்சியாளர்கள் போன்ற அனைத்தையும் உறுதி செய்து, அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு இப்போதே வீரர்களைத் தயார்படுத்திட அரசாங்கத்தை வலியுறுத்துவது எப்படி நமது கடமையோ, அதேபோன்று தங்கள் குழந்தைகளை விளையாட அனுப்பி வைப்பதும் மக்களின் கடமை. குழந்தைகளுக்கு பல விளையாட்டுகளைக் காட்டி, அவர்களுக்கான விளையாட்டைத் தேர்வு செய்ய சுதந்திரம் தர வேண்டும். கிரிக்கெட்டும், செஸ்ஸýம் மட்டுமே விளையாட்டு என்கிற மனோபாவம் ஏற்பட்டிருப்பதில் பெற்றோருக்கும் பங்கு இருக்கிறது.
தங்கள் வீட்டுக் குழந்தைகளைப் பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செய்யாத எந்த ஒரு இந்தியனுக்கும், லண்டன் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் விருதுகளை அள்ளி வரவில்லையே எனக் குற்றம் சொல்லும் தார்மிக உரிமை இல்லை!

Monday, August 6, 2012

தொடர்கதை.. (சிறுகதை)


நுனி இலையில் சாதம் மலைபோல வெடித்து கொட்டப்பட்டிருந்தது. அதைச்சுற்றி விதவிதமான பதார்த்தங்கள்.ஆனால் எதிலும் உப்பில்லை.

லேமினேட் செய்யப்பட்டிருந்த..படத்தில்..மாலையுடன்..அந்த இலையையும்,அதனருகே ஏற்றிவைத்திருந்த குத்துவிளக்கையும் பார்த்துக் கொண்டிருந்தார் சபேசன்..

'சபேசனின் ஆவி வந்து..இந்த படையலை சாப்பிட்டுவிட்டு..போங்கடா..நீங்களும்..உங்க சாப்பாடும் என வெறுத்து பூஉலகை விட்டு ஒடிவிடும்..'என்று சாஸ்திரிகள் சொல்லியபடியே..'அம்மா..நீங்கக் கூட வந்து பரிமாறலாம்' என்றார் மதுரத்திடம்.

மாட்டேன்..என்று தலையை ஆட்டி..மறுப்பு சொன்ன மதுரம்..'என்னங்க..நான் எப்படி சமைச்சுப் போட்டாலும்..நல்லாயிருக்குன்னு..நாக்கை சப்புக் கொட்டிக்கொண்டு சாப்பிடுவீங்களே.. ..இப்படிப்பட்ட சாப்பாட்டை நான் போடமாட்டேன்'..ஆறடி சபேசனாக உலா வந்தவரான சபேஸனின்..ஓரடி படத்திடம் புலம்பினாள்.

சபேசனின்..காரியங்கள் நடந்துக் கொண்டிருக்கின்றன.சாஸ்திரிகள் யாருக்கும் புரியாத..சமஸ்கிருதத்தில்..மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருக்க..மகன்கள் இருவரும்..அரைகுறையாக அவற்றை முணுமுணுத்துக் கொண்டிருந்தனர்.அதற்குள்..சபேசன் பற்றி நாமும் சற்று தெரிந்துக் கொள்வோம்.

சபேசன்....ஒரு தனியார் நிறுவனத்தில்..எழுத்தராக வேலை செய்து வந்தார்.ஆண் குழந்தை ஒன்று..பெண் குழந்தை ஒன்று.போனால் போகிறது..வேண்டாம் என நினைத்தும்..கொசுறாக இன்னொரு மகனும் பிறந்தான்.

ஆக..மூன்று குழந்தைகளுடன்..அவருக்கு வரும் சொற்ப சம்பளத்தில்..வாய்க்கும்..வயிற்றுக்குமான சண்டையுடன் அவர்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.ஆனாலும்..தம்மால் குழந்தைகளுக்கு எந்த சொத்தும் வைக்க முடியாது..என்பதால்..கல்வி சொத்தையாவது கொடுக்கலாம்..என தன் தகுதிக்கு மீறி மூத்தவனை..இஞ்சினீரிங்க படிக்க வைத்தார்.

பி.ஈ., மூன்றாம் ஆண்டின் போதே..காம்பஸ் இண்டெர்வியூவில்..பெங்களுருவில் உள்ள மென்பொருள்துறை கம்பெனி ஒன்று..இவனைத் தேர்ந்தெடுத்தது.

கை நிறைய சம்பளம்..இனி வாழ்வில் சற்று வசதியாய் இருக்கலாம்..என அவர் எண்ணியபோது...அவனிடமிருந்து ஒரு பெரிய கடிதம் வந்தது.

அதில்..அவனுடன் வேலை செய்யும்..சுதாவை திருமணம் செய்துக் கொண்டதாகவும்..அவனை மன்னிக்கும் படியும் எழுதி இருந்தான்.மேலும்..இருவருக்கும் கிடைக்கும் சம்பளத்தை கணக்கிட்டு...அலுவலகம் அருகிலேயே..ஒரு ஃப்ளாட் வாங்கிவிட்டதாகவும்..அதன் மாதாந்திர தவணைத்தொகையே 30000க்கு மேல் ஆவதால்..குடும்பம் நடத்தவே சிரமப்படுவதாக எழுதி இருந்தான்.

கடிதம் கண்ட மதுரம்..நிலைகுலைந்து விட்டாள்...சபேசனோ..'மதுரம் கவலைப்படாதே!..ஆண்டவன்..நமக்கு சோதனையைக் கொடுத்தாலும்...இரு கைகளையும் கொடுத்திருக்கிறான்..கடைசிவரை உழைக்க" என்றார்...மேலும்..'நம் கையிலேயே ஐந்து விரல்களும்..ஒன்றாகவா இருக்கின்றன..நம்ம கடமையைச் செய்தோம்..அதற்கு பலனை எதிர்ப்பார்த்தது தவறு'என ஆறுதல் கூறினார்.தன் மனவருத்தத்தை வெளிக்காட்டாது.

இப்போது..அவர் கவனம்..அடுத்த பையன் மீது சென்றது...அவனையும்..நன்கு படிக்கவைத்தார்.அவனும் ஐ.ஏ.எஸ்.,தேறினான்.தில்லியில் வேலை.ஆனால் அவன் நடத்தையும்..முதல் மகனே பரவாயில்லை என்பதாய் இருந்தது.

முதல் மகனாவது..கல்யாணத்திற்கு முன் தந்தைக்கு தெரிவித்தான்.ஆனால்..இவனோ..திடீரென ஒரு நாள்..ஒரு பஞ்சாபி பெண்ணுடன் வந்தான்.அவளைத் திருமணம் செய்துவிட்டதாகக் கூறி..அலுவலக வேலை நிமித்தம் சென்னை வந்துள்ளதாகவும்..உடனே கிளம்ப வேண்டும் என்றும் கூறிவிட்டு , கிளம்பிவிட்டான்.

இந்நிலையில் சபேசன்..வேலையிலிருந்து ஓய்வு பெற்றார்.தனது முடிவுக்கு முன்னால்..தன் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைக்கவேண்டிய அவசியத்தை உணர்ந்து..தனக்கு வந்த ஓய்வு ஊதியத்தில்..தன் மகளின் திருமணத்தை முடித்தார். 

பின்..தங்களில் எஞ்சிய வாழ்நாளை எப்படித் தள்ளுவது..என்ற கவலை ஏற்பட..ஒரு வக்கீல் இடத்தில் டைபிஸ்ட் வேலை கிடைத்தது.அதில் வரும் வருமானம்...இருவர் வாழ்க்கையை ஓட்டவே சரியாய் இருந்தது.

சிலநாட்களாக..சபேசனுக்கு..கண் மார்வை மங்க ஆரம்பிக்க..கண் மருத்துவர் ஒருவரிடம் சென்றார்.இவர் கண்களை பரிசோதித்துவிட்டு..கேடராட் இருப்பதாகவும்...உட்னே அறுவைசிகிச்சை செய்யவேண்டும் என்றும் கூறினார்..அதற்கு சில ஆயிரங்கள் ஆகும் என்றும் கூறினார்.

கணவருக்குத் தெரியாமல்..இரு மகன்களுக்கும் கடிதம் எழுதினாள் மதுரம்..அதில்..உங்களுக்கு கல்வி ஒளி வழங்கியவருக்கு..கண்ணொளி வழங்குங்கள் என வேண்டினாள்.

வழக்கம் போல..இருவரும் ஏதேதோ சாக்கு கூறி..தங்களால் தற்போது இயலாது..என கூறிவிட்டனர்.

ஒருநாள் கண் சரியே தெரியாது..கத்திரி வெயிலில்..கால்கள் கொப்பளிக்க, வேக வேகமாக சாலையைக் கடக்கும் போது..வேகமாக வந்த பேருந்தில் அடிபட்டார்..மருத்துவ மனைக்கு எடுத்து செல்லும் வழியிலேயே மரணம் அவரைத் தழுவியது.

அப்பா...உயிருடன் இருந்த போது..அவரை நல்லபடியாக..வைத்து காப்பாற்றத் தெரியாத..மக்கள்..அவர் இறந்ததும்..காரியங்களில் எந்த குறையும் வைக்கக் கூடாது என்று தீர்மானித்தனர்.

சபேசன் ஆவி போகும் வழியில்...தாகத்தால் தவிக்கக்கூடாது என கோ தானம் செய்யப்பட்டது..

வெயில் காலங்களிலும் வெறும் கால்களோடு நடந்தவரின் பாதங்களை கற்கள்..முற்களிடம் இருந்து காப்பாற்ற செருப்பு தானம் செய்யப்பட்டது.

உயிருடன் இருந்த போது கண்ணொளிக்கு உதவாதவர்கள்..போகும் வழியில் அவர் ஆவி தடுமாறக் கூடாது என விளக்குகள் தானம் செய்தனர்.

போகும் வழியில்..மழை ,வெயிலிலிருந்து காக்க..குடை தானம் செய்யப்படுகிறது..

போங்கடா..நீங்களும் உங்க தானங்களும்..எனக்கு ஏதும் தேவையில்லை..என படத்திலிருந்த அவர் சொல்வது மதுரத்திற்கு மட்டுமே கேட்டது.

இது போன்ற சபேசன் கதைகள்..என்றுமே தொடர்கதைகள்தான்.

Wednesday, August 1, 2012

மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டுசெல்லுங்கள்: எஸ்.எம்.கிருஷ்ணா





கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க, மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டுசெல்லுங்கள் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, கட்சியினருக்கு அறிவுரை கூறினார்.

 பெங்களூர் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில், தொடர்ந்து 4-வது முறையாக காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட கே.ரகுமான்கான் மற்றும் நேரு யுவகேந்திராவின் இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ள சலீம் அஹமது ஆகியோருக்கு பாராட்டு விழா பெங்களூர் டவுன் ஹாலில் புதன்கிழமை நடந்தது. இதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கலந்துகொண்டு, இருவரையும் பாராட்டி, கௌரவித்துப் பேசியது: கர்நாடக மக்கள் எதையும் எளிதில் மறக்கும் குணம் கொண்டவர்கள். அதனால் கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க, மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும்.

 காங்கிரஸ் கட்சிக்கு மக்களை ஏமாற்றும் வேலைகளைச் செய்யத் தெரியாது. மத்திய அமைச்சரவையில் 6 முஸ்லிம்களுக்கு அமைச்சர் பதவி வழங்கியிருக்கிறோம். ஆனால் மஜத ஒரு முஸ்லிமுக்கு எம்எல்சி பதவி அளித்துவிட்டு, தங்கள் கட்சி முஸ்லிம் மக்கள் மீது மிகுந்த அக்கறை உள்ள கட்சி என்று பறைசாற்றிக்கொள்கிறது. கர்நாடகத்தில முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 4.4 சவீதம் இடஒதுக்கீடு, நான் முதல்வராக இருந்தபோது தான் அமல்படு்த்தப்பட்டது.

 மஜத, பாஜகவை ஆட்சி அமைக்க அழைக்கும். தொடர்ந்து பாஜகவை குறைகூறும். பின்னர் இவர்களை ஆட்சியில் அமர்த்தியதற்கு எங்களை மன்னித்துவிடுங்கள் என்று மக்களிடம் நாடகமாடுவார்கள். முஸ்லிம் மக்களை யாராலும் ஏமாற்ற முடியாது. அமீது ஹன்சாரி திறமையானவர். அவருக்கு துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு மீண்டும் நிறுத்தியிருக்கிறோம். காங்கிரஸ் என்றும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருக்கும். காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்கு பல்வேறு பதவிகளை அளித்து மகிழ்ந்துள்ளது. அதை மற்றக் கட்சிகளைப்போன்று வெளிப்படுத்திக்கொள்வதில்லை என்றார்.

மேலே சொன்னவை அமைச்சர் கிருஷ்ணா சொன்னது..

அவர் சொல்ல மறந்த அவரது சாதனை..

நான் கர்நாடக முதல்வராயிருந்த போது உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காது தமிழகத்திற்கு காவிரி நீர் கொடுக்க மறுத்தவன்.அந்த அளவு இந்திய மக்கள் மீது அக்கறை கொண்டவன்.இதையும் மக்களிடம் எடுத்து செல்லுங்கள்.