Monday, December 1, 2008

மிதக்கும் சென்னை..ஜெ தான் காரணம்..

சமீபத்தில் 4 நாட்களாக பெய்த மழையால்..சென்னை நகரமே வெள்ளத்தில் மூழ்கியது.

அதற்கான காரணம் யார் என சன் டீ.வி.நிபுணர் குழு ஆராய்ந்து, ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.அவ்வறிக்கையில் ஜெ ஆட்சியில் இருந்த காலங்களில்தான் சென்னை குடிநீருக்கு ஆதாரமாக இருந்த ஏரிகள் எல்லாம் ஆக்கிரப்பு செய்யப்பட்டு அங்கு கான்கிரீட் கட்டிடங்கள் முளைத்தன என்றும்,வடிகால்கள் பல அடைக்கப்பட்டு விட்டன என்றும் தெரிந்துள்ளது.மேலும் அம்மையார் ஒருமுறை தனக்கு தண்ணீர் ராசி உள்ளது என்று சொன்னதையும் நிருபர் குழு ஆராய்ந்து,கலைஞர் ஆட்சிக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்றே லாரிகணக்கில் தண்ணீரை வாங்கி கொட்டிவிட்டு ஜெ நீலிக்கண்ணீர் வடிப்பதாக கூறியுள்ளது.

(கலைஞர் குடும்பமும்,சன் டி.வி.சகோதரர்களும் சுமுகமானப்பின் சன் நியூஸ் செய்தியில் இப்படி சொன்னால் ஆச்சர்யப் படத் தேவையில்லை)

11 comments:

ஜெகதீசன் said...

:)

சென்னை பித்தன் said...

விரைவில் எதிர்பார்க்கலாம்!

நசரேயன் said...

அப்போ மழை காரணம் இல்லையா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஜெகதீசன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சென்னை பித்தன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நசரேயன்

குடுகுடுப்பை said...

ப்ரெசெண்ட் சார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி குடுகுடுப்பை

கோவி.கண்ணன் said...

சன்னுக்கும் ஜெயாவிக்கு செய்தி எழுதி தர ஆசிரியர் தேவைப்பட்டால் நீங்கள் இண்டர்வியூ இல்லாமலேயே செலக்ட் ஆகிடுவிங்க

T.V.ராதாகிருஷ்ணன் said...

அப்போ..நமக்கும் ஓரளவு திறமை இருக்குன்னு சொல்லுங்க (ரீல் விடும் திறமை) கோவி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சிவா