Tuesday, July 24, 2018

நாடகப்பணியில் நான் - 12

முந்தைய பதிவில் எம் ஆர் ராதா பற்றி குறிப்பிட்டு இருந்தேன்.
இனி சோ அவர்களுடன் எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்கள்.
என்னுடன் ஸ்டேட் பேங்கில் ஜெயசந்திரன் என்னும் நண்பர் பணி புரிந்து வந்தார்.அவரிடம் என் சபா குறித்து நான் அவ்வப்போது பேசுவேன்.
அப்படி ஒருநாள் பேசிக்கொண்டிருக்கையில், சோ வின் அப்போதைய நாடகம் "யாருக்கும் வெட்கமில்லை" பரபரப்பாய் பேசப்பட்டுக் கொண்டிருந்தது.அவர் நாடகம் நடக்கையில் வேண்டுமென்றே அன்றைய அரசால் மின் வெட்டு எற்படும்.கலாட்டா நடக்கும்
நான் ஜெயச்ந்திரனிடம், "என் சபாவில் சோ வின் நாடகம் நடத்த வேண்டும்.இந்த சமயத்தில் தெரிந்தவர் யாரேனும் சொன்னால்தான் சோ அம்பத்தூரில் தேதி தருவார்" என்றேன்.
உடனே அவர், உணவு இடவேளையில் "வா..கொஞ்சம் வெளியே போயிட்டு வருவோம்" என்றார்.
நானும் அவருடன் கிளம்பினேன். நேராக பீச் ஸ்டேஷன் எதிரே இருந்த ஹாங்காங் வங்கிக்குச் சென்றார்.அங்கு ஒரு நண்பருடன் பேசினார்.பின் என்னைக் கூப்பிட்டு அந்த நண்பருக்கு அறிமுகம் செய்தார்.
அந்த நண்பர் "ஓகே! மாலை மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் நாடகம் இருக்கிறது .அங்கே வாருங்கள்.தேதி ஃபைனலைஸ் பண்ணிடலாம் " என்றார்.
அன்று அறிமுகமான அந்த நண்பருடன், இறுதிகாலம் வரை என் நட்பு தொடர்ந்தது
அவர் "ரங்காச்சாரி" .சோ வின் நெருங்கிய நண்பர்.விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் தேதிகள் அவரே கொடுத்து வந்தார்.
மிகவும் எளிமையானவர்.ஒருவரிடம் நட்பு பாராட்டி விட்டால் கடைசிவரை அந்நட்பைப் பேணிக் காப்பவர்.
அன்று மாலை நான் மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் சென்றேனா? சோ வை சந்தித்தேனா? அம்பத்தூரில் சபாவிற்கு தேதி கிடைத்ததா? 
அடுத்த பதிவில்.

(தொடரும்)


'சோ' வும்..அவரது கோபமும்

நான் அம்பத்தூரில் சபா நடத்திக் கொண்டிருந்த நேரம்.சமீபத்தில் 1974ல்(டோண்டு சார்..தாக்கம்)எனது சபாவின்
ஆண்டுவிழா நிகழ்ச்சிக்கு..மேஜர் சுந்தரராஜனின் 'டைகர் தாத்தாச்சாரி'நாடகம் சென்னை பார்த்தசாரதி சபா ஹாலிலும்,'சோ'வின் 'யாருக்கும் வெட்கமில்லை' அம்பத்தூரிலும்(சென்னையிலிருந்து அம்பத்தூர்16km தூரம்)ஏற்பாடு செய்திருந்தேன்.முதல் நாள் நாடகம் முடிந்தது.அடுத்த நாள் 'சோ'நாடகம்.
6 மணி அளவில் அம்பத்தூர் வந்த "சோ' வை வரவேற்றேன்.காரிலிருந்து இறங்கிய அவர் என்னைப் பார்த்ததும்
முகத்தை திருப்பிக் கொண்டார்..சிறிது நேரம் கழித்து என்னைகூப்பிட்டு,கோபமாக"சோ உனக்கு கிள்ளுக்கீரையா?"
என்றார்.எனக்கு ஒன்றும் புரியவில்லை.அவரே தொடர்ந்தார்'மேஜர் நாடகம் சென்னையில்..என் நாடகம் இவ்வளவு
தொலைவில்"என்றார்.அப்போதுதான் அவர் கோபத்துக்கான காரணம் தெரிந்தது.நான் சொன்னேன்'மேஜருக்கு இங்கு
gate collection இருக்காது..ஆனால் உங்களுக்கு இருக்கும்.அந்த collection ஐ வைத்து என் சபாவின் பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்ளலாம்.அதனால்தான்'.அவர் பின் என்னிடம் ஏதும் பேசவில்லை.
நாடகத்திற்கு நல்ல கூட்டம்..நல்ல வசூல்..
நாடகம் முடிந்ததும் என்னை கூப்பிட்டார்.."எவ்வளவு gate collection என்றார்.சொன்னேன்(3000 என்று ஞாபகம்.அது அந்த காலத்தில் பெரிய அமௌண்ட்)'
சென்னையில் போட்டிருந்தால்..இன்னும் அதிகம் இருக்கும்..என்றவர்..தன் நாடகக்குழு நிர்வாகி திரு.ரங்காச்சாரி யை கூப்பிட்டு நம் city rate1000 வாங்கிக்கொள் போதும் என்றார்.(அம்பத்தூருக்கு குழு வந்த செலவே அதிகமிருக்கும்)
சோ விற்கு திடீரென கோபம் வரும்..வந்த வேகத்தில் மறையும் என்று ரங்காச்சாரி என்னிடம் கூறினார்.அவர் சொல்ல மறந்தது சோ பெருந்தன்மையானவர் என்பதை.

No comments: