Tuesday, July 17, 2018

நாடகப்பணியில் நான் - 8

வாணிமகாலில் அரங்கேறிய எங்களது "BON VOYAGE" நாடகம் மௌலியின் வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது எனலாம்

1952ல் தன் நண்பர் பத்மநாபன் என்ற பட்டு வுடன் திரு ஒய் ஜி பார்த்தசாரதி அவர்கள் இணைந்து யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட் என்ற நாடகக் குழுவை நடத்தி வந்தார்.தமிழ் நாடகவுலகின் முதல் அமெச்சூர் குழு இதுதான் எனச் சொல்லலாம்.இன்றும் ஒய் ஜி மகேந்திரன் தொடர்ந்து நாடகம் நடத்தி வரும் இக்குழுவின் சிறப்பு என்னவெனில்..

பல பிரபல நட்சத்திரங்கள் இக்குழுவில் நடித்துள்ளனர்.பல பிரபலங்கள் உருவாகியுள்ளனர்.இன்றும் பல நாடகக் கலைஞர்களின் நதிமூலம் பார்த்தால் அதில் அக்குழுவின் பங்கு இருக்கும்

ஒய்ஜிபி தன் குழுவில் இளைஞர்களை அறிமுகப்படுத்த எண்ணினார்.அப்பொறுப்பை ஏ ஆர் ஸ்ரீனிவாசன் ஏற்றார்.
அவர் எங்களது "BON VOYAGE" நாடகத்தை அன்று பார்த்தார்.
மௌலியின் நகைச்சுவை எழுத்தும், நடிப்பும் பிடித்துப்போக அவரை யூ ஏஏ வில் சேர்த்துக் கொண்டார்.

அப்போது யூ ஏ ஏ வியட்நாம் வீடு சுந்தரம் எழுதிய "கண்ணன் வந்தான்" நாடகத்தை அரங்கேற்ற இருந்தனர்.அந்நாடகத்தின் நகைச்சுவைப் பகுதியை மௌலி ஏற்றார்.(இந்நாடகமே பின்னாளில் சிவாஜி நடிக்க கௌரவம் என்ற திரைப்படமாக வந்தது)

மௌலியின் graph  ஏறத்தொடங்கியது.மௌலியுடன் விசு, கணேஷ் ஆகியோரும் அக்குழுவில் இணைந்தனர்.

பின்னர் ஃப்ளைட் 172, ஹரே ராமா ஹரே கிருஷ்ணா, பத்ம வியூகம், குருக்ஷேத்திரம் போன்ற நாடகங்களை யூ ஏ ஏ விற்காக மௌலி எழுதினார்.

ஆமாம்...அம்பத்தூரில் எங்களது "youngsters cultural association" நிலை என்னவாயிற்று?

அடுத்த பதிவில்.

(தொடரும்)

No comments: