Monday, July 30, 2018

நாடகப்பணியில் நான் - 17

இயக்குநர் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படம் மூலம் அறிமுகமாகி வெள்ளிவிழா படங்களின் நாயகனாகத் திகழ்ந்தவர் ரவிச்சந்திரன் ஆவார்.

அவரும் ஒரு நாடகத்தில் நடித்துள்ளார்.

ஏதேனும் புதுமை என்றால் ,அது எப்படி இருக்கும் என்றும் பாராது முதலிலேயே ஆதரிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நான்..அந்த நாடகம் குறித்து அறிவிப்பு வந்ததுமே, அதற்கான ஒத்திகை நடைபெறும் இடத்திற்குச் சென்றேன்.

எங்கு ஒத்திகை என்கிறீர்களா? அடையாறு காந்திநகரில்தான்.அன்று பிரபல வழக்குரைஞராகத் திகழ்ந்த நீதியரசரான அமரர் கே எஸ் பக்தவத்சலம் இல்லத்திற்குத்தான்.ஏனெனில் அந்நாடகத்திற்கு அவர்தான் தயாரிப்பாளர்.

அவர் நான் போனே அன்றே, அம்பத்தூரில் நடத்த தேதி கொடுத்தார்.

நாடகத்தின் பெயர் "பார்த்த ஞாபகம் இல்லையோ".ரவிச்சந்திரன் முன் பற்கள் வெளியே நீட்டிக் கொண்டிருக்க (கல்யாணராமன் கமல்போல) ஒரு அவலட்சண நாயகனாக நடித்தார்.

நாடகம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றதா என்ற கேள்வியைவிட ரவிச்சந்திரன் நடித்தார் என்பதற்காகவே சபாக்கள் அனைத்திலும் போடப்பட்டது.

அதைத்தவிர்த்து அந்த நாடகத்தை சபாக்கள் ஆதரிக்கக் காரணம்..அந்நாடகத்தின் இயக்குநர் ஒய்ஜிபி அவர்களுடன் நீண்ட நாள் அவர் குழுவில் இருந்த பட்டு என்பதால்தான்,  

No comments: