Friday, July 13, 2018

நாடகப்பணியில் நான் - 5

படிப்பு, வேலை என சில ஆண்டு காலம் கழிந்தன.

இந்நிலையில், தமிழக சுற்றுலாத்துறையில் முக்கிய அதிகாரியாக வேலை செய்து வந்த திரு ராமசாமி ஐயர் என்பவர், திருவல்லிக்கேணியில் இருந்து அம்பத்தூருக்குக் குடியேறினார்.

அவர்.....

திரு ராஜாமணி, விசு, கிஷ்மூ ஆகியவர்களின் தந்தை.விசுவும், ராஜாமணியும் என்னைவிட சற்று சீனியர்கள்.கிஷ்மூ என்னவிட ஜூனியர்.இவர்களுடன் என் பள்ளித் தோழர்களான சந்திர மௌலி, கணேஷ் (பிரியதர்ஷினி),நான் ஆகிய அனைவரும் சேர்ந்து youngsters Cultural Association என்ற சங்கத்தைத் தொடங்கினோம்.மற்ற நண்பர்கள் சிலரும் கூடினர்

அம்பத்தூரில், அச்சமயம் சற்று திருட்டு பயம் இருந்தது.நாங்கள் காவல்துறையுடன் சேர்ந்து இரவில் ரோந்து வருவோம்.இதனால் மக்கள் ஆதரவினைப் பெற்றோம்.

சில காலம் கழித்து, ராமசாமி ஐயர் கொடுத்தத் தெம்பில், டிகேஎஸ் குழுவினர் நடத்திவந்த இயக்குநர் ஸ்ரீதரின் ரத்தபாசம் ஸ்கிரிப்டை முறைப்படி அனுமதி பெற்று மேடை ஏற்றினோம்.நாங்கள் ஒத்திகைப் பார்த்த இடம் எது தெரியுமா.

அம்பத்தூரில் நடந்த வந்த ஒரே டூரிங் டாக்கீஸ் ஆதிலக்ஷ்மி திரையரங்கில்தான்.இதன் மூலம் நீங்கள் ஓரளவு அம்பத்தூரில் எங்களுக்கு இருந்த ஆதரவை அறியலாம்.

நாடகம் நடந்தது வழக்கம் போல குப்தா பள்ளியிலேயே!

விசுவின் தந்தை எங்கள் மீது கொண்ட அன்பும், ஆதரவும் எல்லாவற்றிற்கும் முக்கியக் காரணியாக அமைந்தது.

ரத்தபாசம் நாடகம் மாபெரும் வெற்றி பெற்றது எங்களுக்கு

அடுத்து எங்களின் முயற்சி..

மேன் மேலும் மக்களின் ஆதரவினைப் பெற்று தந்தது.அது என்ன..அடுத்த பதிவில் பார்ப்போம்

(தொடரும்) 

No comments: