Tuesday, July 17, 2018

நாடகப்பணியில் நான் - 9

மௌலி, யூ ஏ ஏ குழுவில் busy ஆகிவிட்டார்.

எங்கள் youngsters cultural association ஆண்டுவிழாவும் நெருங்கிக் கொண்டிருந்தது.

இவ்வாண்டு என்ன நாடகம் போடலாம்? என் தீர்மானிக்க நண்பர்கள் ஒன்று கூடினோம்.

மௌலி ."இந்த ஆண்டு விசு நமக்காக ஒரு நாடகம் எழுதுவார்" என்றார்.விசுவும் சம்மதித்தார்.

விசுவின் பேனா எழுதிய முதல் நாடகம்"யார் குற்றவாளி" ஒரு திரில்லர் .

இதில் விசு முக்கியப்பாத்திரம் ஏற்க, நானும், சீதாராமன் என்ற நண்பரும் நகைச்சுவை வேடம் ஏற்றோம்.மௌலி, தன் வழக்கத்திற்கு மாறாக ஒரு முக்கிய குணச்சித்தர வேடம் (வேலைக்காரன்) ஏற்றார்.

நாடகம் திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி சபா அரங்கில் நடந்தது.

ஒய் ஜி பி, திருமதி ஒய் ஜி பி, லட்சுமி ஆகியோர் நாடகத்திற்கு வருகை புரிந்தனர்.

இந்நிலையில், விசு தனக்கென "விஸ்வசாந்தி" என்ற குழுவினை நிறுவி நாடகங்கள் போட ஆரம்பித்தார்.

நண்பர்கள் அனைவரும் சென்னைக்குக் குடி பெயர்ந்தனர்.

குடும்ப சூழ்நிலை, குடும்ப பொறுப்புகள் ஆகியவற்றினால் என்னால் அவர்களை பின் தொடர இயலவில்லை.

ஒருமுக்கிய சந்திப்பில், நாலுசாலைகள் பிரியும்போது, அவரவருக்கான சாலையைத் தேர்ந்தெடுத்து அவர்கள் செல்ல, நான் செய்வதறியாது நின்றேன் தனிமரமாக.

உண்மையைச் சொல்வதானால், இளமையில் வறுமை என்னைக் கட்டிப்போட்டது.என்னை கட்டாய ஓய்வில் வைத்தது.ஆனால், என் நண்பர்களின் முன்னேற்றம் மன மகிழ்ச்சியைத் தந்தது.

அடுத்து நான் என்ன செய்தேன்,,?

அடுத்த பதிவில்

(தொடரும்)


No comments: