Saturday, August 23, 2008

தமிழ் படித்தவரா (குட்டிக்கதை)

பத்துக்கு எட்டு அளவுள்ள அந்த அறைக்குள் நுழைந்தான் அண்ணாமலை .
நேர் காணலுக்கு வந்திருக்கிறான் .அறங்காவலர்கள் மூவர் அமர்ந்திருந்தனர் .
அவனைப் பார்த்து 'சிட் டோவ்ன் 'என்றனர்.பின் ஒருவர் மாற்றி ஒருவர்
கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர் .
வாட் ஈஸ் உவர் நேம்'
அண்ணாமலை.
யுவர் எசுகேசனால் குவாலிபிகேசன்
எம். ஏ .,தமிழ்
'தமிழ்' என்றபடி மூவரும் அவனை ஏதோ செய்யக்கூடாத தவறை செய்துவிட்டவன் போல பார்த்தனர்.
'டூ யு நோ ..தி நேம் ஆப் அவர் பவுண்டர்,'
'வெள்ளையப்பன்'
வெரிகுட். யு நோ இன் விச் இயர் வி சேலி பி ரே டெட் அவர் கோல்டன் சுபீலி
இன் தி இயற் 2000
ஹொவ் மச் சே ல ரி யு வான்ட்'
10000
ஆல் ரெயிட். வி வில் லேட் யு நோ '
தமிழ் வளர்ச்சி சங்க வேலைக்கு வந்தவன் தமிழ் படித்திருந்ததால்
தேர்ந்து எடுக்கப் பட வில்லை.

2 comments: