Wednesday, November 5, 2014

குறுந்தொகை-146



தோழி கூற்று
(தலைவன் சான்றோரைத் தலைவியின் சுற்றத்தாருடன் மணம் பேசி வர விடுப்ப, தன்தமர் மறுப்பாரோ என்று அஞ்சிய தலைவியை நோக்கி, “தலைவன் வரைவை நம் இனத்தார்/சுற்றம் ஏற்றுக்கொண்டனர்; நீ கவலை ஒழிவாயாக” என்று தோழி கூறியது.)


குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் வெள்ளிவீதியார்

இனி பாடல்-

 
அம்ம வாழி தோழி நம்மூர்ப
   
பிரிந்தோர்ப் புணர்ப்போ ரிருந்தனர் கொல்லோ
   
தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்
   
நன்றுநன் றென்னு மாக்களோ

டின்றுபெரி தென்னு மாங்கண தவையே.

.                          -வெள்ளிவீதியார்.


   

உரை-

தோழி..கேள்...அவ்விடத்திலுள்ள நம்மைச் சார்ந்த குழுவில் உள்ளோர், தண்டைப் பிடித்த கையினரும், நரையையுடைய
தலைக்கண் துகிலையுடைவருமாகிய நன்று..நன்று எனக்கூறும் தலைவன் தமரோடு இந்நாள் நீங்கள் வரப்பெற்றமையால் பெருமையுடையதென்று முகமன் கூறுவர்.ஆதலால், நம் ஊரினிடத்து பிரிந்தவர்களைச் சேர்த்து வைப்போர் இருந்தனர்.


     (கருத்து) தலைவன் வரைவை நமர் ஏற்றுக் கொண்டனர்.


No comments: