Thursday, November 6, 2014

குறுந்தொகை-147



தலைவன் கூற்று
(தலைவன் தலைவியைப் பிரிந்து சென்ற இடத்துத் துயிலும் பொழுது அவளைக் கனவில் கண்டு பிரிவாற்றாமற் சொல்லியது.)

பாலைத் திணை- பாடலாசிரியர் கோப்பெருஞ் சோழன்

இனி பாடல்-


வேனிற் பாதிரிக் கூன்மல ரன்ன
 
மயிரேர் பொழுகிய வங்கலுழ் மாமை
 
நுண்பூண் மடந்தையைத் தந்தோய் போல
 
இன்றுயி லெடுப்புதி கனவே

எள்ளா ரம்ம துணைப்பிரிந் தோரே.

என்பது தலைமகன் பிரிந்தவிடத்துக் கனாக் கண்டு சொல்லியது.

   
                                              -கோப்பெருஞ் சோழன்

   உரை-
வேனிற்காலத்தில் மலரும் பாதிரியினது வளைந்த மலரினத் துய்யைப் போன்ற மயிர் எழுந்து படர்ந்த அழகு ஒழுகும் மாமையையும், நுண்ணிய தொழிலையுடைய ஆபரணத்தையும் உடைய தலைவியை கொணர்ந்து கொடுத்தாயைப்போல
இனிய துயிலினின்றும் எழுப்புகிறாய்.மனைவியைப் பிரிந்தோர் உன்னை இகழார்..கனவே




     (கருத்து) தலைவியைக் கொணர்ந்து காட்டிய கனவிற்கு என்ன கைம்மாறு செய்வேன்!



.

No comments: