Friday, March 20, 2020

ஒரு பக்கக் கட்டுரைகள் - 26

பொதுவாக நமது குணம் 'ராமன் ஆண்டால் என்ன..ராவணன் ஆண்டால் என்ன' என்பதுதான்.(யார் ராமன்..யார் ராவணன் எனக் கேட்கக் கூடாது)

ஆனால் சமீப காலங்களாக நம்மிடையே ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது..நடக்கும் நாட்டு நடப்புகளை சமூக வலைத்தளங்களில் ஆரோக்கியமாக அலசத் தொடங்கியுள்ளது மகிழ்ச்சியையேத்  தருகிறது.
.
ஆனால் அரசியல்வாதிகள் பிரச்னைக்கு உண்மையில் தீர்வு காண வேண்டும் என எண்ணாது...பிரச்னையை மேலும் மேலும் வளர்த்து..குளிர் காய்வது சற்று வருத்தத்தையே ஏற்படுத்தியுள்ளது.

நிதானமாக ஓடும் ஆறு..தான் போகும் பாதை எங்கும் அடுத்தவர்க்கு உயோகமாய் இருக்கும் விதத்தில் பசுமையை அள்ளித் தெளித்து தொடர்ந்து ஓடுவது போல..நாம் செயல்பட வேண்டும்.நம் செயல்பாட்டால்..நம் காரியமும் ஆக வேண்டும்..பிறரும் பயனடைய வேண்டும்..அப்படி பயனடையாய் விட்டாலும்..அவர்கள் அன்றாட வாழ்விற்கு தொந்தரவு இருக்கக் கூடாது.

இதை மனதில் கொண்டு நற் காரியங்களுக்காக போராட்டம் இருக்குமேயாயின்..அனைத்து மக்கள் ஆதரவும் கண்டிப்பாய் இருக்கும்.ஆணவத்தால்,அகங்காரத்தால்,காழ்ப்புணர்ச்சியால் சாதிக்கமுடியா காரியங்களை அன்பு சாதிக்கும்..அஹிம்சை முறை சாதிக்கும்.

பிரச்னைகள் நாம் உருவாக்குவது தான்.பிரச்னைகளின் தீர்வும் நம்மிடம்தான்

No comments: