Saturday, March 28, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 91


பிறிதின் நோய்
----------------------------
நமக்கு ஒருவர் தீங்கிழைத்து விட்டார்.உடனே நமக்குக் கோபம் அதிகரித்து, "நானும் அவனுக்கு தீங்கு செய்துவிட்டு ,நான் யார் என அவனுக்குக் காட்டுகின்றேன்" என்போம் சாதாரண்மாக.

"அப்போதுதான் அவனுக்கு புத்தி வரும்" என்போம்..

ஆனால்..வள்ளுவர் என்ன சொல்கிறார்.நமக்கு தீங்கு செய்பவருக்கு நாம் கொடுக்கும் தண்டனை பதில் தீங்காய் இருக்கக் கூடாது.அவரை மன்னித்து விடுவதுதான்

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல் (314)

நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி,அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.


அத்துடன் நில்லாது மற்றொரு குறளில் சொல்கிறார்..மற்றவர் துன்பத்தை நீக்குவதுதான் நாம் பெற்ற அறிவின் பயன் என்கிறார்.

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போற் போற்றாக் கடை (315)

பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முணையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்த பயனுமில்லை.

பிறிதின் என ஏன் சொல்ல வேண்டும்/

அடடா..வள்ளுவர் எந்த ஒரு சொல்லையும் சாதாரணமாக சொல்லமாட்டார்.அதற்கென தனி அர்த்தம் இருக்கும்.

பிறிதின் என்றால்...பிற மனிதர்களுக்கு மட்டுமல்ல.

பிராணிகள், செடி கொடிகள்,  ஊர்வன, பறப்பன என்று எல்லாமே அந்த "பிறிதின்" என்பதில் அடங்கும். தன்னைத் தவிர மற்ற எல்லாம். நீர் நிலைகள்,  ஆகாயம், ஆறு, குளம், என்று அனைத்தும் அதில் அடங்கும்.

நவில்தொறும் நூனயம் போல்..படிக்க..படிக்க ஒவ்வொரு குறளுக்கும் பல..பல..அர்த்தங்களைச் சொல்லிடலாம்.

கடல் போல விரிந்து கிடக்கும் கருவூலம் திருக்குறள்.


No comments: