Friday, March 13, 2020

ஒரு பக்கக் கட்டுரைகள்

பட்டாம்பூச்சி..

மனதில் நினைக்கும் போதே படபடக்கிறது..

மண்ணில் பறக்கும் வானவில் எனலாம்.

வானவில்லிலோ எழே நிறங்கள்.

ஆனால் கணக்கற்ற நிறங்களில் பட்டாம்பூச்சிகள்.

பட்டாம்பூச்சி என்றாலே..நினைவில் வருபவர் ரஜினி..மீனாவிடம்..அவருக்கு என்ன வேண்டும் எனக் கேட்க..அவர் பட்டாம்பூச்சியை கை காட்ட...அதைப் பிடிக்க அதன் பின்னாலேயே ஓடி..வேஷ்டி நழுவியதும் தெரியாமல்...வேடிக்கைப் பார்ப்பவர்களையும் சட்டை செய்யாது..சகதியில் விழுந்து..வெற்றிகரமாக அதைப் பிடிப்பது.

அடுத்து "ஓ பட்டர்ஃபிளை" பாடல் காதில் ரீங்காரமிடுகீறது

சிறு வயதில்..நானும் பட்டாம்பூச்சியைப் பிடித்து அதை இம்சை படுத்தியதுண்டு.அதன் இரு சிறகுகளையும் சேர்த்துப் பிடித்து வேடிக்கை பார்த்ததுண்டு.பின் ஒரு பக்க சிறகை விட்டுவிட்டு..அது மற்ற ஒன்றால் பட..பட..என அடிப்பதை ரசித்ததுண்டு..

இப்போது நினைக்கிறேன்...நான் எப்படிப்பட்ட sadist என்று.

அந்த பட்டாம்பூச்சியை விட்டதும்..கைகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் அதன் நிறத்தை..முகர்ந்து பார்த்து..மகரந்த மணத்தை அனுபவித்ததுண்டு.

பெண்கள் கல்லூரியில்...கல்லூரி விட்டு...பல வண்ண ஆடைகளில்...ஆடியும்..பாடியும் கவலைகள் ஏதுமின்றி மகிழ்வுடன் வெளியே வரும்...மாணவிகள்..எனக்கு பட்டாம்பூச்சியை நினைவு படுத்துவர்.

உடனே கொந்தளிக்க வேண்டாம்..

Play School பக்கம் போகும் போது..ஆடி..ஓடி..விளையாடும்..மழலைகளும் எனக்கு பட்டாம்பூச்சியை நினைவுபடுத்தியதுண்டு.

மனம் பட்டாம்பூச்சியாய் இருந்திட்டால்..தொல்லை ஏதுமில்லை.

No comments: