Tuesday, March 31, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 93

ஆசையை விட்டொழிப்போம்
-----------------------------------------

உயர்ந்த செல்வம் எது என சாமான்யனைக் கேட்டால், பணம், சொந்த விடு, நகை என சொல்லிக் கொண்டே போவார்கள்.முடிவே இருக்காது.

ஆனால்...சிலர் ஆரோக்கியமாய் இருந்தாலே மற்றதெல்லாம் பெறலாம் என்பர்,.

ஆனால்..வள்ளுவர் சொல்கிறார்..எல்லாவற்றையும் விட பெரும் செல்வம் "வேண்டாமை" என்று.

வேண்டாமை யன்ன விழிச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்ப தில்(363)

என்கிறார்.


தீமை விளைவிக்கும் ஆசைகளை வேண்டாம் என்று புறக்கணிப்பதைப் போன்ற செல்வம் இங்கு எதுவுமில்லை.வேறு எங்கும் கூட அத்தகைய ஒப்பற்ற செல்வம் இல்லையென்றே சொல்லலாம்.

சுருங்கச் சொன்னால்..மேன்மேலும் வேண்டும்..வேண்டும் என்னும் ஆசையை விட்டொழிக்க வேண்டும்.

ஆசை என்பதே..எல்லோரிடமும்,எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதையாகுமாம்..


அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பினும் வித்து (361)

பெரும் ஆசை..அதாவது பேராசை என்பது பெரும் துன்பத்தைத் தரக்கூடியது.ஆகவே பேராசை ஒழிந்தால்தான் வாழ்வில் இன்பம் தொடர்ந்து இருக்கும்.

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந்
துன்பத்த்ள் துன்பங் கெடின் (369)


வேண்டும் என்பது வேண்டாமே! ஆசையை விட்டொழிப்போமாக!




No comments: