Saturday, March 14, 2020

வள்ளவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 79

சிக்கனம் தேவை
-----------------------------------------

படித்தவன் கருத்தெல்லாம் சபை ஏறுமா? பொருள் படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா? என்றொரு திரைப்பாடல் உண்டு.

ஆம்...

பொருள் படைத்தவர்கள் கருத்துகள் தவறானாலும்..அதை கூடியிருக்கும் சபையினர் அக்கருத்தினை ஏற்றுக் கொள்வார்கள்.

பொருள் உள்ளவர்களைப் புகழ்ந்து போற்றுவதும்..இல்லாதவர்களை இகழ்ந்து தூற்றுவதும்தான் இந்த உலகத்து நடப்பாக உள்ளது.

இது வள்ளுவர் காலத்திலும் இருந்திருக்கிறது.அதானால் இக்குறளை அவர் சொல்லியுள்ளார்.

 இல்லாரை எல்லாரும் எள்ளுவர்  செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு (752)

பொருள் உள்ளவர்களைப் புகழ்ந்து போற்றுவதும் இல்லாதவர்களை இகழ்ந்து தூற்றுவதும்தான் இந்த உலக நடப்பாக உள்ளது.

அவர் மேலும் சொல்கிறார்..

மதிக்கத் தகுதியில்லாதவர்களையும் பணம் படைத்தவர் என்றால் உலகு மதிக்குமாம்.


பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள் (751)

மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவிற்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர எதுவும் இல்லை.

அதனால்  செல்வம் ஈட்டும் காலத்தில் தேவைக்கு அளவிற்கு மட்டுமே செலவு செய்து சேமித்து வைக்க வேண்டும்.

வருமானமே குறைவாக உள்ளது என்கிறீர்களா?

அதற்கு வள்ளுவர் என்ன கூறுகிறார்..

வருவாய் எவ்வளவு குறைவானாலும் கவலையில்லை..செலவு அதைவிட அதிகமாக இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்கிறார்.

ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை (478)

பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை

No comments: