Friday, March 20, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 85



மறந்தும் நாவினால் சுடாதீர்கள்
-------------------------------------------------

ஒருவருக்கு ஒருவரின் மீது கோபம் வரும்போது..என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல் வரம்பு மீறி பேசிவிடுகிறோம்.

சற்று நேரம் கழித்து கோபம் தீ ர்ந்ததும், நம்
செயலுக்கு நாமே வெட்கப் படுகிறோம். என்ன இருந்தாலும் நாம் அப்படி பேசி இருக்கக் கூடாது
என மன வருத்தம் அடைகிறோம்.

இதைத்தான் வள்ளுவர் சொல்கிறார்.யாராய் இருந்தாலும் பேசும்போது நாவடக்கம் வேண்டுமென..

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (127)

ஒருவர் எதைக் காத்திட முடியாவிடினும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும்.இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவரது துன்பத்திற்குக் காரணமாகிவிடும்.

வள்ளுவனின் ஒவ்வொரு குறளிலும்ஆழ்ந்த அரத்தம் இருக்கும்.

நாம் அப்படி கோபத்தில் நாவடக்கம் இன்றி பேசியபின், தவறை உணர்ந்து..அந்த நபரிடம் மன்னிப்புக் கேட்டாலும்..நாம் சொன்ன வார்த்தைகளின் வடு அந்த நபரின் மனதிலிருந்து அகலவே அகலாது.


"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு"(129)

ஒருவருக்குத் தீக்காயம் ஏற்படுமேயாயின்..அது ஆறக்கூடியதாயினும், ஆறியபின் அதன் வடு உடலில் இருக்கும்.

ஆனால்..ஒருவரை, மற்றவர் காயப்படும்படி பேசினால், அப்படிப் பேசப்பட்ட பேச்சு காலப்போக்கில் இருவரும் மற
ந்துவிடுவார்.ஆனாலும், .தீயினால் சுட்ட வெளி வடு போல அல்லாது..மனத்திற்குள் அவ்வடு காயப்பட்டவர் மனதில் ரணமாய் ஆறாமல் என்றுமிருக்குமாம்.

தீக்காயம் ஆறும் ஆனால் வடு மறையாது
மனக்காயம் வடு இன்றி மறைந்தாலும், அதனால் ஏற்பட்ட ரணம் உள்ளே ஆறவே ஆறாது.

ஆகவே..மறந்தும்எந்த சந்தர்ப்பத்திலும் ஒருவர் மனது புண்படும் வார்த்தைகளை பேசிவிடக் கூடாது.

No comments: