Saturday, March 21, 2020

வள்ளுவத்திலிருந்து தின்ம ஒரு தகவல் - 86

கல்வியும்..அறிவும்

-------------------------------------------

கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும்.அதற்கிணையான செல்வம் வேறு எதுவுமில்லை.

என்று சொன்னவர் சொல்கிறார்.

கல்வி வேறு..அறிவு வேறு என..

வள்ளுவர் எங்கே அப்படிச் சொல்கிறார்..தெரியுமா?

கீழே சொல்லியுள்ள குறளில்தான்.

கொஞ்சம் ஆழ்ந்து இக்குறளை சிந்திப்போம்..

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு (396)

மணற்கேணியில் எப்படி தோண்ட தோண்ட நீர் ஊறுகிறதோ அது போல மக்களுக்கு படிக்கப் படிக்க அறிவு வளரும்.

அதுசரி..மணற்கேணி என்கிறாரே! அதுஏன்?

மணலில் தோண்டும் கேணியை மணற்கேணி என் கிறார்.

மணற்கேணியைத் தோண்டும்போது மண் சரியும்..உள்ளே விழுந்த மண்ணை மீண்டும் தோண்டி எடுத்தால்தான், அதில் உள்ள நீர் கலங்கல் இன்றி தெளிவாக இருக்கும். 

அதுபோல..ஒருவர் படித்து முடித்துவிட்டார்..என்று சொல்லமுடியாது."கற்றது கைம்மண் அளவு" அல்லவா?அதனால் படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.படிப்புக்கு வயது இல்லை அல்லவா? 

அதுபோலத்தான்..மணற்கேணியில் தோண்டி எடுக்க..எடுக்க நீர் வந்து கொண்டு இருக்கும்..வற்றிவிடாது.இல்லையேல் நாளடைவில் கேணி பயனற்றுப் போகும்.

அதுபோல நாம் படித்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்....

தொட்டனைத்து...அதாவது தோண்டத் தோண்ட ..கற்கக் கற்க..ஊறும் நீரினைப் போல அறிவு வளரும்.

கல்வி வளரும் என வள்ளுவர் சொல்லவில்லை..அதை கவனித்தீர்களா?

படிப்பதை மனதிற்கும் இருத்திக் கொள்வது கல்வி.அக்கல்வி உள்ளே போய்..உள்ளே இருக்கும் அறிவினை வெளியே கொண்டு வந்து..மணற்கேணி நீரினைப் போல மக்களுக்கு பயன்படுத்த வேண்டும்.

இப்போது புரிகிறதா..அறிவு வேறு..கல்வி வேறு என.

வள்ளுவத்தைத் தோண்டத் தோண்ட பல செய்திகள் புரிய வரும்.





.
.


No comments: