Sunday, March 29, 2020

குறுந்தொகை - அணில் ஆடும் முன்றில்
-----------------------------------------------------------------

அது ஒரு சின்ன கிராமம். ஒரு காலத்தில் இங்கு நிறைய மக்கள் இருந்தார்கள். ஊரில் திருவிழாக்கள், கூத்து என்று அந்த ஊர் எப்போதும் கல கல என்று மகிழ்ச்சியாக இருக்கும்.
ஆனா, இப்ப அப்படி இல்ல. மழை தண்ணி இல்லாததால, வெவசாயம் இல்ல. ஊரு சனம் எல்லாம் ஒவ்வொன்னா ஊரைக் காலி பண்ணிட்டு போயிருச்சு.
ஊரே வெறிச்சோடி கிடக்கிறது. எல்லா வீடும் காலியா கிடக்கு. வீடு முற்றத்தில் அணில்கள் இறங்கி வந்து விளையாடி கொண்டு இருக்கின்றன.
அப்படி ஒரு தனிமை போல் இருக்கிறது அவன் இல்லாத தனிமை.
அணில்லாடும் முன்றில் என்ற குறுந்தொகை பாடல்.....

காதல ருழைய ராகப் பெரிதுவந்து
சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற
அத்த நண்ணிய வங்குடிச் சீறூர்
மக்கள் போகிய வணிலாடு முன்றிற்
புலப்பில் போலப் புல்லென்
றலப்பென் றோழியவ ரகன்ற ஞான்றே.

பொருள் -

என் காதலன் அருகில் இருக்கும் போது பெரிதும் மகிழ்ந்து இருந்தேன்.மகிழ்ச்சியுடன் இருக்கும் ஊர் மக்களைப் போல.வாழ்க்கை ரொம்ப கடினமாகி விட்டது அந்த ஊரில்.கஷ்டம் வந்து சூழ்ந்து கொண்டது.அந்த ஊரில் மக்கள் எல்லாம் போன பின், அணில் ஆடும் முற்றத்தில் தனிமையான வீட்டைப் போல அழகு இழந்து வருந்துவேன் தோழி..அவர் பிரிந்து சென்ற பொழுது.

அணிலாடும் முன்றலாய்

No comments: