Sunday, March 29, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 92

ஒருவர் தான் எண்ணியதை செயல்படுத்துவதில் உறுதி உடையவராய் இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள் என்கிறார் இக்குறளில்

எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் (667)

ஆதேநேரம்..என்னால் அந்தக் காரியத்தை செய்ய முடியுமா? எவ்வளவு பெரிய செயல்? நானோ வலிமையில்லாதவன் என்றெல்லாம் எண்ணினால் அக்காரியத்தைச் செய்ய இயலாதாம்.

உதாரணத்திற்கு சொல்கிறார்..

கோயிலில் தேர்த்திருவிழா.எவ்வளவு பெரிய தேர்.ஊர் கூடி இழுததால்தான் தேர் நகரும்.அவ்வளவு கைகள் இணைய வேண்டும்.பெரிய பெரிய சக்கரங்கள்.

அச்சக்கரங்கள் கழண்டுவிடாமல் கட்டுப்படுத்தி தேரை சிறியவனான என்னால் ஓடச்செய்துவிட முடியுமா?

என்றெல்லாம் நினைத்திருந்தால்..அச்சக்கரத்தில் உள்ள அச்சாணி முறிந்துவிடும் .ஆனால்..அந்த அச்சாணி தான் உருவத்தில் அத்தேரைவிட பல்லாயிரம் மடங்கு சிறிதானாலும்..அத்தேர் ஓட என்னால் முக்கியக் காரணமாய் இருக்க முடியும் என்று எண்ணுகிறது.தேர்..வெற்றிகரமாக நான்கு வீதிகளிலும் வலம் வருகிறது.

உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னார் உடைத்து (667)

உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்யக்கூடாது.பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும் .

மனதில் உறுதி வேண்டும்.இருந்தால் எதுவும் சாத்தியமே!

No comments: