Thursday, September 4, 2014

குறுந்தொகை -96




தலைவி கூற்று
(தலைமகன் ம்ணக்காமல் வந்து பழுகிய காலத்தில் அவனைத் தோழி தலைவனின் இயல்பை பழித்தாளாக, அது கேட்ட தலைவி தோழியைச் சினந்து கூறியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் அள்ளூர் நன்முல்லை

இனி பாடல்-
 
அருவி வேங்கைப் பெருமலை நாடற்
   
கியானெவன் செய்கோ வென்றி யானது
   
நகையென வுணரே னாயின்
   
என்னா குவைகொ னன்னுத னீயே.

                     -அள்ளூர் நன்முல்லை



 உரை-
நல்ல நெற்றியையுடையாய்...அருவியினதருகில் வளர்ந்த வேங்கை மரங்களையுடைய பெரிய மலையையுடைய நாட்டிற்குரிய தலைவனை நான் என் செய்வேன் என்று கூறி அவன் இயல்பை பழித்தாய்.அப்படி நீ கூறியதை நான் விளையாட்டாய் எடுத்துக் கொண்டேன்..இல்லாவிடில் நீ (என்னிடம்) என்ன பாடு படுவாய். (மிகவும் துன்பப்படுவாய்)



     (கருத்து) நீ தலைவனை இயற்பழித்தல் தகாது.

 

No comments: