Saturday, September 1, 2018

நாடகப்பணியில் நான் - 45

அடுத்த எனது நாடகம் பொதிகைக்காக..

ஒரு அரசியல்வாதி...
அவன் குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்பு குறித்து பேச அழைக்கிறார்கள்.
பிரம்மாண்ட கூட்டம்..
அவனது சொற்பொழிவினைக் கேட்டு, சரமாரி கைத்தட்டல்கள்.
பாராட்டு மழையில் அவன்..
மிகவும் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்து இறங்குகிறான்.
வீட்டு தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சவில்லை..
வீட்டினுள் ஒரே குப்பை, தூசி
பெருக்கித் துடைக்கவில்லை.
மனைவியை அழைக்கின்றான்.."வேலைக்காரன் வரவில்லையா?" என் கிறான்.
அவளும் தயங்கியபடியே, நேற்று மாலை அவன் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என சற்று முன்னதாகவே சென்றவன் இன்னமும் வரவில்லை என் கிறாள்.
அந்த சமயம் உள்ளே நுழைகின்றான் தயங்கயவாறே அவன்.
"ஏன்டா லேட்டு..சம்பளம் வாங்கற இல்ல.செய்ய வேண்டிய வேலையை ஒழுங்காச் செய்யலாம் இல்ல?" என்ற படியே கன்னத்தில் "பளார்..பளார்" என அறைகிறார் அரசியல்வாதி.
அந்த வேலைக்காரனின் வயது 10.


No comments: