Thursday, September 13, 2018

நாடகப்பணியில் நான் - 57

சிற்சில சமயங்களில் சிற்சில நிகழ்ச்சிகள் நம்மை அறியாமல் நடந்து விடுவதுண்டு.

நிகழ்வுக்குப் பின்...ஆராய்ந்தால் அதற்கான காரணம் தெரிவதுண்டு.

அதுபோல, நட்பு காரணமாக நமக்கு சில இழப்புகள் உண்டாவதுண்டு.

இழப்பை உண்டாக்கிய நட்புகளெ பின் நம்மை பிரிவதுண்டு..

என்ன ஏதும் புரியவில்லையா? விளக்கமாகவே சொல்கிறேன்.

அடுத்து நான் எழுதிய நாடகம் "மனசேதான் கடவுளடா"

கடவுள் இல்லை என்று சொல்பவன் எதிர்பாராது ஒரு ஏடிஎம் திருட்டு வழக்கில் மாட்டிக் கொள்கிறான்.தனக்குத் துயரம் வரும்போது அந்த இறைவனை அழைக்கின்றான்.இறைவன் கைவிடவில்லை.நகைச்சுவை சற்று அதிகம் கலந்த ஸ்கிரிப்ட்.

இதுவே அந்த நாடகத்தின் ஒன் லைன்.

எனது முந்தைய நாடகங்கள் போலவே எனக்குத் திருப்தியை தந்த ஸ்கிரிப்ட்.

நடிகர்களின் சரியான ஒத்துழைப்பு இல்லாததால் மேடையில் எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை.

ஆகவே..3 காட்சிகளுக்குப் பிறகு..கிடைத்த சபாக்களின் தேதிகளை நிராகரித்தேன்.

.
எந்த நாடகமும் முதலில் நமக்குத் திருப்தியை அளிக்க வேண்டும்.அப்போதுதான் அதே ரியாக்க்ஷனை மக்களிடமும் ஏற்படுத்தும்.

எனக்கு திருப்தியினை அளிக்கா அந்நாடகத்தைப் போடுவதை நிறுத்தியது சரிதானே!

    

No comments: