Tuesday, September 18, 2018

நாடகப்பணியில் நான் - 62



"காத்தாடி " நாடகத்திலிருந்து சில வசனங்கள்..

1) அமெரிக்காவிலே இருக்கறவங்களுக்கு அந்த ஆண்டவன் அருள் இருக்குடா.அது சிவனோ..ஏசுவோ அதைப்பற்றி கவலையில்லை,அவங்க டாலர் நோட்டிலே ஒரு வரி இருக்கும்
"In God We Trust" னு .அதுபோல நம்ப நாட்டிலே நோட்டில அச்சிட முடியுமா?

2)நமக்குள்ளே இப்ப என்ன உறவு.நான் யாரோ! நீ யாரோ! இந்த சமயத்திலே நாம இரண்டு பேரும் Just Living Together அவ்வளவுதான்.நாம இப்படியே இருந்துட்டு..அப்புறமும் நமக்கு பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கலாம் என்பதுதான் நமக்குள்ளே கண்டிஷன்.அதனால என் பணத்தை செலவழிக்க நான் யோசிக்கணும்.உன் பணத்தை செலவழிக்க நீ யோசிக்கணும்

3) எந்த தோல்வியும் நம்மை வீழ்த்துவதாக இருக்கக் கூடாது.தோல்வியை வீழ்த்துபவர்களாக நாம இருக்கணும்.தோல்வி ஏற்படுவது நம்ம அடுத்த செயலை கவனமாகச் செய்வதற்கான எச்சரிக்கை ஆகும்

4)வாழ்வில் வெற்றி குறைவு.தோல்வி அதிகம்னு வருந்தாதே! செடியில் இலைகள் அதிகம் என்றாலும் அதில் பூக்கும் மலருக்கே மதிப்பு அதிகம்

5)பெண்கள் ஆண்கள் சொல்றதை எல்லாம் நம்பற முட்டாள்கள் அல்ல.அவங்க..நம்மளை காயப்படுத்தக் கூடாதுன்னு நம்பற மாதிரி நடிக்கறாங்க

6) நடந்ததை எல்லாம் திருப்பிப் பார்க்கக் கூடாதுன்னுதான் அந்த ஆண்டவன் நம்ப தலையைபின் பக்கம் திரும்ப முடியாமல் படைச்சு இருக்கான்

7) மனுஷன் வாழ்க்கையிலே கஷ்டப்பட்டு படிச்சு, வேலையை தேடிண்டு, கல்யாணம் பண்ணின்டு, குழந்தைகளைப் பெத்து...அவங்களை முன்னுக்கு கொண்டு வந்துட்டு..அப்பாடா! வேலையில் இருந்து ரிடையர் ஆனதும் இனி எஞ்சிய காலத்தை நிம்மதியாய் கழிக்கலாம்னு நினைக்கிறது...இந்த வியாதிகளுக்கு எப்படி தெரியறதுன்னு தெரியலை.வேக வேகமா ஓடி வந்து உடம்புல புகுந்துண்டு எதையுமே சாப்பிட விடாம ஆக்கிவிடுது.பேசாம ..செத்துத் தொலைக்கலாம் போல இருக்கு

மரணத்தைப் பத்தி கவலைப்படாதே! நீ இருக்கும் வரை அது வரப் போறதில்ல. அது வரும் போது நீ இருக்கப் போறதில்லைன்னு விவேகானந்தர் சொல்லியிருக்கார்.

(காத்தாடி நாடக வசனங்கள் அடுத்தப் பதிவிலும் தொடரும்)

No comments: