Sunday, September 16, 2018

நாடகப்பணியில் நான் - 60

எனது மழையுதிர் காலம் நாடகத்திலிருந்து சில வசனங்கள்

1)உங்க எழுத்துலக சேவைக்கு உங்களுக்கு என்னிக்கோ இந்த விருது கொடுத்து இருக்கணும்.Better Late than Never

ஆமாம்.அந்த நெவர் பலருக்கு நடந்து இருக்கு.அதைத்தவிர இப்ப எல்லாம் விருதுகள் காலன் நம்மை அழைக்கிற நேரத்தில் தான் கிடைக்கிறது.அப்படியே அந்த விருதினை வாங்கி அவன் கிட்ட கொடுத்துட வேண்டியிருக்கு

2)இப்ப எழுத்துத் துறையில சிறந்த எழுத்தாளரைக் கூட சரியாக வெளிச்சம் போட்டுக் காட்ட ஆளில்லாததால் அவர்களால் சோபிக்க முடியாமல் போகிறது

3)எழுத்தாளர்களிலே மூன்றுவகை உண்டு.சிலர் எரி நட்சத்திரங்கள்..ஒளிர்ந்து..விழுந்து உடனே மறைந்து விடுவார்கள்.சிலர் கிரகங்கள் போல சில காலம் இருப்பார்கள்.சிலர் மட்டுமே நிலாக்கள். மறுபடி..மறுபடி..நினைவுகள்ல இருப்பாங்க

4)எழுத்தாளனுக்கு ஒவ்வொரு கதையும், பிரசவம் போலத்தான்.வலிகளுக்கு நடுவேத்தான் அவனுக்குக் கதை பிறக்கிறது

5) THe suffering of the past and fears of the future should not be allowed to disturb the pleasure of the present

No comments: