Saturday, September 22, 2018

நாடகப்பணியில் நான் - 66

"கோவை பத்மநாபனின்" குட்வில் ஸ்டேஜிற்காக நான் எழுதித் தந்த நாடகம் "சாலையோரப் பூக்கள்"

இது ஒரு வாடகைத்தாயின் கதை என்று கூறலாம்.

ஒரு பிரபல தொழிலதிபர் தன் மனைவி, மருத்துவரான மகனுடன் ஆனந்த வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

அப்போது, அவர் மகன் நடத்தும் மருத்துமனைக்கு ஒரு இளம் பெண்..கோமா நிலையில் உள்ள தன் தாயுடன் வருகிறார்.அந்த இளம்பெண் மருத்துவரிடம், அந்நகரில் தனக்குத் தெரிந்த ஒரே நபர், அந்தத் தொழிலதிபர் என் கிறாள்.

மருத்துவருக்கோ அதிர்ச்சி.ஏனெனில் அவள் சொன்னது அவரின் தந்தையின் பெயரை.

இளம் பெண்ணினால் அக்குடும்பத்தில் குழப்பம் வருகிறது.இந்நிலையில், அப்பெண் தொழிலதிபரின் மகள் என்றும் தெரிய வருகிறது.

இதனிடையே, அப்பெண்ணின் தாய் மரணம் அடைய, தொழில் அதிபர் அவளின் இறுதிச் சடங்குகளைத் தன் மகன் செய்ய வேண்டும் என் கிறார்.

அதற்கான காரணம்...தெரிய வரும் போது..அவரின் மனைவியைத் தவிர மற்றவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.

இதுவே கதை.

வெள்ளித்திரைக்கு ஏற்ற கதை.இன்னமும் அவ்வப்போது..இக்கதை எனக்குத் தெரிந்த திரையுலக நண்பர்களிடம் சொல்லி, இதற்கான தயாரிப்பாளர்கள் கிடைக்குமா எனக் கேட்டு வருகின்றேன்.

இந்நாடகத்தின் முக்கிய வசனங்கள் அடுத்த பதிவில் 

No comments: