Wednesday, September 26, 2018

நாடகப்பணியில் நான் - 70

(நாடகத்தில் பங்குப் பெற்ற அனைத்துக் கலைஞர்கள்)

"நூல்வேலி" நாடகத்திலிருந்து சில வசனங்கள்

1).தலைவா...முதன் முதலா உன்னை மறுத்துப் பேச மன்னிக்கணும். இந்த ஊர் வளர்ச்சியில..இந்த ஊர் மக்கள் முன்னேற்றத்திலே எனக்கு அக்கறை இருக்கு.ஆனா...அந்த வளர்ச்சி...எனக்கு...என் குடும்பத்துக்கு..ஏன்..ஓரளவு மக்களுக்கும் சாப்பாடு போட்டுட்டு வர விவசாய நிலங்களை அழிக்கறதாலத்தான் வரும்னா அப்படிப்பட்ட வளர்ச்சி தேவையில்லை.
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்னு சொன்னவங்கக்கூட முதல் இடத்தை உழவுத் தொழிலுக்குத்தான் கொடுத்திருக்காங்க.
உயிர்கள் வாழ உணவுப் போடறது இந்த மண்ணு,இந்த மண்ணுல விளையற உணவை அழிச்சுத்தான் ஒரு தொழில் உண்டாகணும்னா..அந்த அழிவிலத்தான் மக்கள் வளர்ச்சியடையணும்னா..அந்த வளர்ச்சி மக்களோட அழிவின் ஆரம்பம்.

2)பொன்னு விளையற பூமியா இருந்த இடம்.மூணு போக விளைச்சல்..ஆனா இப்ப லேஅவுட் போட்டு plotடுகளா மாறிடுச்சு.இருக்கிற கொஞ்ச நஞ்ச நிலத்திலேயும் ரசாயன உரத்தைப் போட்டு காட்டாமணக்கும், கத்திரியும்தான் விளையுது.அந்த மண்ணுக்கு மட்டும் வாயிருந்தா அழும்..அழும்..தலைவா.எந்தக் காரணம் கொண்டும் சாப்பாடு போடற நிலத்துக்கு நான் துரோகம் பண்ண மாட்டேன்

மற்றவை அடுத்த பதிவில்

No comments: