Sunday, September 23, 2018

நாடகப்பணியில் நான் - 68

அடுத்து, அமிர்தம் கோபாலின் "கீதாஞ்சலி" குழுவினருக்காக நான் எழுதிய நாடகம் "பெண்ணே நீ வாழ்க"

ஒரு வக்கீலுக்குப் படித்த பெண்.அவளுக்கு கணவன் சரியாக வாய்க்கவில்லை.

விவாகரத்து வரை போகிறது.அவர்கள் இருவரையும் சில காலம் பிரிந்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது

இந்நிலையில், கணவன், அலுவலகத்தில் கையாடல் செய்ததாக  கைதாகிறான்.அவனை, அவனது வக்கீல் மனைவி காப்பாற்றுகிறாள்.

நகைச்சுவையுடன் சொல்லப் பட்டது இந்நாடகம்.

பி டி ரமேஷ், நாஞ்சில் ரேவதி ஆகியோர் நடித்திருந்தனர்.

நாடக வசனங்கள் சில-

இந்தப் பொண்ணுங்கக் கிட்ட "என்னை லவ் பண்றியா?ன்னு கேட்கறதும், பஸ்ல கண்டக்டர் கிட்ட சில்லறை இருக்கான்னு கேட்கறதும் ஒன்னுதான்.இருந்தாலும் இல்லைன்னுதான் சொல்லுவாங்க

2)உமாங்கற பயிர் இருபத்தைந்து வருடமா ஒரே இடத்திலே விதைக்கப்பட்டு, வளர்ந்து இப்போ பூத்திருக்கு,அதை ,ஒரே நாள்ல பெயர்த்து வந்து, இன்னொரு புது இடத்திலே நட்டா..அது அந்த மண்ணைப் பற்றிண்டு வளர கொஞ்ச காலம் தேவைப்படும்.ஏன்..சில சமயங்களில் அந்தச் செடியே வாடிடும். அந்தச் செடிக்கு நம்ம அன்பான பராமரிப்பு இருந்தா கொஞ்ச கொஞ்சமா புதுசா துளிர் விட்டு வளர ஆரம்பிக்கும்

3) இல்லறம்ங்கிற ஐந்தெழுத்து நல்லறம்ங்கிற ஐந்தெழுத்தாக ஆகணும்னா புரிதங்கற நாலெழுத்து கண்டிப்பா வேணும்

4) ஓடம் ஓட நீர் அவசியம்.நீரின்றி ஓடம் ஓடாது.ஆனா ஓடம் ஓட நீர் வெளியே இருக்கணும்.உள்ளே இருந்தா அது மூழ்கிடும்.நாம வாழற சமுதாயத்திலெ பணமும் அப்படித்தான்.பணம் வாழ்க்கைங்கற ஓடத்துக்குள்ள பூந்துட்டா அவவ்ளவுதான். வாழ்க்கையே அழிஞ்சுடும். வாழ்க்கைங்கற ஓடத்துக்கும் பணம் வெளியே ஆதரவா இருக்கணும்

5) வாழ்க்கை பல அற்ப விஷயங்களையும், பல அற்புத விஷயங்களையும் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கு.நாம் அற்பர்களாக இருந்தா அற்ப விஷயங்களே முக்கியத்துவம் அடையுது

அடுத்த பதிவில் சந்திப்போம்
  

No comments: