Wednesday, September 26, 2018

நாடகப்பணியில் நான் - 71

"நூல்வேலி" நாடகத்திலிருந்து மேலும் சில வசனங்கள்

1) சுதந்திரத்திற்கு முன்னால் வெள்ளைக்காரன் நம்ம நாட்டை சுரண்டினான்.இன்னிக்கு, தலைக்குத் தலை தலைவன்னு சொல்லிக்கிட்டு..ஜாதிக்கு ஒரு கட்சியை வைச்சுக்கிட்டு..கையில ஒரு அறிவாளோட தாதா வேலை செஞ்சுக்கிட்டு..நாட்டை..நாட்டு மக்களை சுரண்டறாங்க

2)வளர்ந்த நாடுதான் நம்ம நாடு..ஆனா கட்டுமஸ்தான உடல் இல்லாதவனை வளர்த்திப் போதாதுன்னு சொல்லுவாங்க இல்லை..அது போலத்தான் வளரும் நாடுன்னு சொல்றதும்.

3)நம்ம நாட்டோட விசேஷம் ஒன்னு சொல்றேன் கேட்டுக்க-

அபுதாபில பேரிச்சம் பழம் விளையும்..மிளகு விளையாது
ருமேனியாவில ஆப்பிள் விளையும் தேங்காய் விளையாது
கனடாவிலே உருளை பயிறாகும், பூண்டு விளையாது
இங்கிலாந்துல கோதுமை விளையும் ,கொய்யா விளையாது
ஆனா, இவை எல்லாமே விளையுற அற்புத மண் நம்ம இந்தியா தான்டா.

4)தண்ணீ கீழே இருக்கறப்போ கனமா இருக்கு.அதுவே ஆவியாகி மேலே போறச்சே லேசாகிறது
அதுபோல கீழ் மட்டத்திலே ஒருத்தர் தப்பு பண்ணினா..அது பெரிய தப்பாத் தெரியுது.அதுவே மேல் மட்டத்திலே பண்ணினா லேசாகிடறது

5)When the God Pushes you to the edge of difficulty, Trust him fully because two things can happen.Either he will catch you when you fall or he will teach you how to fly

No comments: