Tuesday, September 4, 2018

நாடகப்பணியில் நான் - 48

இந்த நாள் அன்று இந்தப் பதிவிற்குத் தனிச் சிறப்பு.
எப்படி அமைந்தது இப்படி? என வியக்கின்றேன்!
அப்படி என்ன விஷேசம் என்கிறீர்களா? சொல்கிறேன்.

ராஜகோபால் சொன்னதும் ஒரு ஸ்கிரிப்ட் தயார் செய்து அவரிடம் கொடுத்தேன் என்றேன் அல்லவா?

அந்த நாடகம் "பாரத ரத்னா".2005ஆம் ஆண்டு கோடை நாடக விழாவில் நடத்திடும் சந்தர்ப்பத்தை அளித்தார்.

கரூர் ரங்கராஜன் சிறந்த நடிகர், நான் சிறந்த குணசித்திர நடிகன், சிறந்த வசனம், இயக்கம் என நான்கு விருதுகள்.  நீதிபதியாய் இருந்தவர்களில் ஒருவர் கீழாம்பூர் ஆவார்

இந்த நாடகம் தன்னலமற்ற ஒரு ஆசிரியரின் கதை.

நாடகத்தின் இறுதிக் காட்சியில் ஒரு பாத்திரம் கேட்கும் -  ஒரு நடிகன் தன் நடிப்புத் தொழிலைச் செய்ய கோடி கணக்கில் சம்பளம் வாங்குகிறார்.அதில் ஒரு பகுதி சட்ட விரோதமா கறுப்புப் பணம்.ஆனாலும் அவர்களுக்கு பத்மஸ்ரீ, பதமபூஷன் போன்ற விருதுகள்.ஒரு விளையாட்டு வீரர் தன் விளையாட்டு மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்,அவர்களுக்கு அர்ஜுனா அவார்டைத் தவிர பத்ம ஸ்ரீ, பத்மபூஷன் போன்ற விருதுகள்.இவையெல்லாம் அவங்க ஈடுபட்டிருக்கிற தொழில்ல அவங்க திறமையைக் காண்பித்ததற்காக.அவங்களுக்கெல்லாம் கொடுங்க வேண்டாம்னு சொல்லல... ஆனா,ஆசிரியர் தொழில்ல ஈடுபட்டு இருப்பவங்களுக்கு மட்டும் ஏன் இது போன்ற விருதுகள் கொடுப்பதில்லை? ஆசிரியர்கள் எல்லாம் திறமைசாலிகள் இல்லையா?

அதற்கு கலெக்டர் பாத்திரம் பதில் சொல்லுவார் -

உங்களுக்கு மட்டுமல்ல.உங்களைப் போல நிறைய பேருக்கு அதுபோல சந்தேகம் இருக்கு. பாரதரத்னாங்கறது நம்ம நாட்டோட உயரிய விருது. அதை இதுவரைக்கும் எத்தனைப் பேருக்குக் கொடுத்து இருக்காங்கன்னு.விரல் விட்டு எண்ணிடலாம்.
கர்நாடக இசையில் தனிப்புகழ்ப் பெற்று உலகையே வியக்க வைத்த ஒரு எம் எஸ்
ஏழைகளுக்கு இலவசக் கல்வி..மதிய உணவுன்னு உழைத்த அப்பழுக்கற்ற ஒரு காமராஜ்
பசுமைப் புரட்சி ஏற்படுத்திய சி எஸ்
ஜனாதிபதியாய் இருந்த ராதாகிருஷ்ணன்
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை திறம்பட உருவாக்கிய அம்பேத்கர்
எம் ஜி ஆர்., சாதாரண குடும்பத்தில் பிறந்து சிறந்த விஞ்ஞானியாய் திகழ்ந்த அப்துல் கலாம்
இப்படி சிலரே! இப்படி அவுட் ஸ்டாண்டிங் பெர்சனாலிட்டுக்குத்தான் பாரதரத்னா கிடைச்சிருக்கு.
ஆனா..ஆசிரியர்களில் இப்படி அவுட் ஸ்டாண்டிங் பெர்சனாலிட்டின்னு எப்படி பாகுபாடு படுத்த முடியும்? நான் மேலே சொன்ன பாரதரத்னாக்கள் உருவாகக் காரணமானவர்கள் யார்?
ஆசிரியர்கள்தான்...
இதைத்தவிர இந்த ஆசிரியர்கள் உருவாக்கிய/உருவாக்கும் விஞ்ஞானிகள். எத்தனை..மென் பொருள் தொழில்நுட்ப வல்லுநர்கள் எத்தனை.ஐ பி எஸ், ஐ ஏ எஸ் அதிகாரிகள் எத்தனை..இப்படி எத்தனை..எத்தனைன்னு சொல்லிக் கிட்டேப் போகலாம்.
இப்படி அனைவரையும் உருவாக்கும் ஆணிவேர்களான ஆசிரியர்களில் யாரை பாரதரத்னான்னு சொல்ல முடியும்? ஆசிரியர்கள் அனைவருமே பாரதரத்னாக்கள் தான்.அதனால்தான் அவர்களைப் பிரித்துத் தனிப்பட்ட முறையில் யாருக்கும் அந்த விருதுகளை வழங்கறதில்லைன்னு நினைக்கிறேன்

இந்த நாளில்..இப்படிப் பட்ட பதிவு எப்படி சரியாக வந்தது.?
ஆச்சரியம்தான்..
ஆசான் கள் அனைவருக்கும் ஆசிரியர்தின வாழ்த்துகள்

இந்நாடகம் மேலும் என் நீண்ட நாளைய ஆசை ஒன்றை நிறைவேற்றியது? அது என்ன?

அடுத்த பதிவில் 

No comments: