Friday, September 21, 2018

நாடகப்பணியில் நான் - 65

எனது "சௌம்யா" குழு நாடகங்களுக்கு இடையே, ஜெயகீர்த்தனா குழுவினருக்காக நான் எழுதிக் கொடுத்த நாடகம் "உறவுகள் மலரட்டும்".

இந்நாட்களில்.ஒவ்வொருவர் இல்லத்திலும் ஓரிரு குழந்தைகளே இருப்பதால்,பல உறவுகள்..குறிப்பாக..பெரியப்பா, சித்தப்பா, அத்தை,பெரியம்மா , சித்தி போன்ற உறவுகள் அழிந்து வருகின்றன.

நான் எழுதிக் கொடுத்த இந்நாடகத்தின் நாயகி, "இப்பேர்பட்ட நிலையில்...நாம் ஏன் புது நடைமுறையை நம் வாழ்வில் கொண்டு வரக்கூடாது? " என வினவுகிறாள்.

படடாபி - இந்திரா சொன்ன கூட்டுக் குடும்பம் பற்றி எங்கப்பா, அம்மா கிட்ட பேசினேன்.கொஞ்ச நேரம் யோசனை பண்ணினாங்க.பிறகு, இந்திரா நம்ம வீட்டு மரு(று) மகள்.அதாவது எங்களுக்கு இன்னொரு மகள்.அதுபோல நீ அவங்க வீட்டுக்கு மரு (று) மகன்.அதாவது அவங்களுக்கு இன்னொரு மகன்.அதனால..மகன் வீட்டுல அப்பா, அம்மா இருப்பதைப் போல , மகள் வீட்டிலநாங்க இருக்கப் போறோம்.அவ்வளவு தானேன்னு எல்லோரும் ஒன்னா இருக்க சம்மதிச்சுட்டாங்க.

இந்திரா- இரு தரப்பு பெற்றோரோட நாங்க வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம்.இன்றைய இளைய சமுதாயமும் இதை ஆரம்பித்தால், மீண்டும் உறவுகள் தழைக்க ஆரம்பிக்கும்.உதிர்ந்த சிறகுகளை வளர்த்தாக வேண்டிய பறவைகளைப் போல..புதிய உறவுகளை துளிர்க்க வைக்க வேண்டியது இன்றைய இளைஞர்கள் கடமை..ஆகவே சேகர், மனோ, ஆனந்தன் நீங்களும் எங்கக் கூட உறவினைத் தொடர்ந்தால்..எங்க குழந்தைகளுக்கு சித்தப்பா. சித்தி ஆகிய உறவுகளும் மீண்டும் பூக்கும்

2)இந்த உலகமே மூன்று விஷயங்களை வைச்சுதான், ஒரு மனிதனை எடை போடுது
அவனது தோற்றம், அவனது தகுதி, அவனது வார்த்தைகள்

3)குழந்தை பிறக்கலைன்னு ஒரு ஆபரேஷன்.குழந்தை பிறப்பதில் சிரமம் என்றால் ஒரு ஆபரேஷன்.குழந்தை வேண்டாம்னா ஒரு ஆபரேஷன்..இப்படி வயிறு முழுக்க அறுவை சிகிச்சைகளால் போடப்பட்ட தையல்களுடன் இன்றைய தையல்கள் உலா வருவது உங்களுக்குத் தெரியுமா?

4)நம்ம முதுகுக்கு பின்னால் பேசறவங்களைப் பத்தி கவலைப் படாதீங்க! அவங்களுக்கு இரண்டடி முன்னால நாம் இருக்கோம்னு சந்தோஷப்படுங்க

அடுத்த நாடகம் பற்றி அடுத்த பதிவில்..

No comments: