Monday, September 3, 2018

நாடகப்பணியில் நான் - 46

ஆண்டு 1993..க்கு பிறகு.

வடசென்னையில் மாதம் 30நாட்களும் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நாடகங்கள்.
வடசென்னையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட சபாக்கள்.
மன்றம் கிடைக்காமல், கலைவாணர் அரங்கம், ராணி சீதை ஹால் என நாடகக் குழுக்களுக்கு சந்தர்ப்பம் கொடுத்து வந்த சபாக்கள் கொஞ்சமாய் மூடுவிழாவினைக் கண்டு வந்தன

கந்தன் ஆர்ட்ஸ், பாரத் ஃபைன் ஆர்ட்ஸ், கலாரஞ்சனி, இளங்கோ கலை மன்றம்,டென் ஸ்டார்ஸ், பிரபாத் கல்சுரல், மதி ஒளி, மெட்ராஸ் சோசியல்,கிட்டப்பா கலை அரங்கம், ஃபிரண்ட்ஸ் கல்சுரல், நேஷனல் ஆர்ட்ஸ்,மணிமேகலை ,கச்சாலீஸ்வரர் கான சபா இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்...ஆகியவை மூடுவிழா கண்டன

தென் சென்னையிலும், நவரசா,கீதாலயா, அருணோதயா ,ஆனந்த் ஆர்ட்ஸ்,சக்தி ஆர்ட்ஸ்,பாலாஜி ஃபைன் ஆர்ட்ஸ் என பட்டியல் நீண்டுக் கொண்டே போனது.

டிவி நிகழ்வுவள், தனியார் சேனல்கள் வருகை என இதற்கான காரணங்களைச் சொல்லிக் கொண்டே போனாலும்..நாடகங்கள் காண வரும் ரசிகனுக்கு செலவுகள் அதிகமாகிப் போனதும் ஒரு காரணம் எனலாம்.

இந்நிலையில், நாடகம் மேடையேற்றினால் 100 காட்சிகளை சர்வ சாதாரணமாகக் கடந்த குழுக்கள், 25 காட்சிகள் நடத்தவே சிரமப்பட்டன.

அந்த காலகட்டத்தில்...இக்காரணங்களால் நாடகங்களை நடத்தி வந்த குழுக்கள் சிலவும் நாடகம் மேடையேறுவதை நிறுத்திக் கொண்டன

நான் மட்டும் விதிவிலக்கா என்ன? நானும் எனது சௌம்யா குழு மேடையேற்றும் நாடகங்களை நிறுத்துக் கொண்டேன்.

சில வருடங்கள் கழிந்தன.

அப்போதும், விடாமல் நாடகங்களை நடத்தி வந்தன சில குழுக்கள்.அதில் பாம்பே கண்ணனின் சுபா கிரியேஷன்ஸும் ஒன்று.

ஒருநாள் வழக்கம் போல என் நண்பன் பாம்பே கண்ணனின் நாடகம் ஒன்றிற்குச் சென்றேன்.

ஆனால், அன்று நாடகம் பார்க்கச் சென்றது தவறா/சரியா என இதுநாள் வரை எனக்குத் தெரியவில்லை.

ஏன் இப்படிச் சொல்கிறேன் என் கிறீர்களா? விவரம் அடுத்த பதிவில்  

No comments: