Thursday, October 25, 2018

அடுத்த வீட்டு ஜன்னல் பார்வை - 2 (பகுதி 1)



எஸ் வி சேகர்

நகைச்சுவை நாடகங்கள் என்றாலே மக்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம்.
குறிப்பாக கிரேசி மோகன், எஸ் வி சேகர் நாடகங்கள் இதனாலேயே வெற்றியடைகின்றன

நரசிம்ம ராவ்களையும், மன் மோகன் சிங் போன்றவர்களையும் கூட சிரிக்க வைக்கும் இவர்கள் நாடகங்கள்

சேகரின் நாடகங்களில் நகைச்சுவையுடன்..அவ்வப்போது நடைபெறும் அரசியல் நிகழ்வுகளும் நையாண்டியாய் சொல்லப்படும்

சேகரின் குறிக்கோளே..நாடகம் நடக்கும் 100 நிமிட நேரத்தில்  ரசிகர்களை 200 முறை சிரிக்க வைக்க வேண்டும் என்பதே

சேகர், தன் மனதில் நினைப்பதை சொல்வதில் யாருக்கும் பயப்பட மாட்டார்.அதுவே அவர் பலமும், பலஹீனமும் எனலாம்.

அந்த பலம்தான் அவருக்கும் மைலாப்பூர் எம் எல் ஏ பதவியை வாங்கித் தந்தது.அந்த பலஹீனம்தான் கட்சி மேலிடத்தில் அவர்மீது அதிருப்தியை ஏற்படுத்தியது எனலாம்

1960 ஆம் ஆண்டு அவரின் நாடகப்பணி ஆரம்பித்தது எனலாம்.70களில் அவரது தந்தை எஸ் வி வெங்கட்ராமனின் கற்பகம் கலா மந்திர் நாடகக்குழுவில் அவரை மேடை நிர்வாகியாகவும், ஸ்பெஷல் ஒலி பரப்பாளராகவும் ஆக்கியது எனலாம்

பின் வி கோபாலகிருஷ்ணனால் இவர் நடிகராக ஆக்கப்பட்டார்.

1973ல் தன் சொந்த நாடககுழுவான நாடகப்பிரியாவை ஆரம்பித்தார்

1985ஆம் ஆண்டு இவரின் எட்டு நாடகங்கள் காலை 7 47க்குத் தொடங்கி இரவு 1 49 வரை தொடர்ந்து நடந்து லிம்கா புக் ஆஃப் ரிகார்டில் இடம் பெற்று சாதனை புரிந்தது

மைலாப்பூர் அகடெமியில் நகைச்சுவை நடிகருக்கான விருதினை தொடர்ந்து 3 ஆண்டுகள் பெற்றார்

தமிழக அரசின் கலைமாமணி, கலைவாணர் விருதுகளும் இவருக்குக் கிடைத்துள்ளது.

தவிர்த்து பல சபாக்கள் இவருக்கு சிறப்புப் பட்டங்கள் அளித்து கௌரவித்துள்ளனர்

கிட்டத்தட்ட இதுவரை இக்குழு 25 நாடகங்களை அரஙேற்றியுள்ளது. அவை 7000 காட்சிகளுக்கும் மேல் நடைபெற்றுள்ளன

யூ எஸ் ஏ., யூரோப்,சவுத் கொரியா,சிங்கப்பூர், மலேசியா மற்றும் அரேப் நாடுகள் என பல நாடுகளிலும் இவரது  நாடகங்கள் நடந்துள்ளன

அடுத்த பதிவில் இவரது நாடகங்கள் பற்றிப் பார்ப்போம்

(அடுத்தவீட்டு ஜன்னல் 2 பார்வை அடுத்த பதிவிலும் தொடரும்)

No comments: