Saturday, October 20, 2018

நாடகப்பணியில் நான் - 92

1979ல் ஆரம்பித்த என் சௌம்யா குழு அடுத்த ஆகஸ்டில் தனது 40 ஆவது ஆண்டை பூர்த்தி செய்கிறது

என்னுடன் பணியாற்றியவர்கள் கூறித்து இதுவரை எழுதிவிட்டேன்

 இந்நாள் வரை எனது நாடகங்களில் நடித்த  மேலும் சிலநடிகர்கள்..

சக்தி, வாசுதேவன்,மகேஸ்வரி, கற்பகம், ராஜஸ்ரீ, ஸ்ரீராம், ரமணி, கிரீஷ் வெங்கட், அம்பி நாகராஜன், பிரகாஷ், நரேன் பாலாஜி,விஜயஸ்ரீ,நியூக்ளியர் ஸ்ரீனிவாசன், ரவிகுமார்,ராம்பிரசாத்..இப்படி பட்டியல் நீள்கிறது..

ஆபத்பாந்தவனாக உதவிய மற்ற குழுவினைச் சேர்ந்த எம் பி மூர்த்தி, தில்லை ராஜன், ஷங்கர்..(இப்பட்டியலும் நீண்டது)

சௌம்யா குழுவில் நடித்தவர்கள் 40 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கானோர்.

எனது ஸ்கிரிப்டை மேடையேற்றிய மற்ற கீதாஞ்சலி, குட்வில் ஸ்டேஜ், ஜெய கீர்த்தனா கிரியேஷன்ஸ், பிரசித்தி கிரியேஷன்ஸ்

ஆகிய அனைவருக்கும் நன்றிகள்

தொழில் நுட்பக் கலைஞர்கள் வரிசையில்..

நாற்பது ஆண்டுகளாக சீன் செட்டிங்க்ஸ் எக்செல்லன்ட் மணியும் அவருக்குப் பின் அவர் பணியைத் தொடர்ந்த சைதி குமார் மற்றும் ஷண்முகம் ஆகியோர்

ஆரம்ப காலங்களில் ஒலி/ஒளி அமைப்பு  கோம்ஸ் அதன் பின்னர் கலைவாணன் (கலைவாணர் எலக்ட்ரிகல்ஸ்)பின் கிச்சா (கிருஷ்ணன்)

ஒப்பனை நேரு,ராதா முதல் சில நாடகங்களுக்கு பின்னர் வேணுவும் அவர் உதவியாளராய் இருந்த பெரம்பூர் குமாரும்.

வேணுவிற்குப் பின் இன்றுவரை தொடர்ந்து பெரம்பூர் குமார் எங்களது குழுவின் ஆஸ்தான ஒப்பனைக் கலைஞராகத் திகழ்கிறார்

இவர்கள் அனைவருக்கும் எனது நன்றி

கடந்த 40 ஆண்டுகளாக எங்கள் குழு நாடகம் நடத்த சந்தர்ப்பம் அளித்து வரும் அனைத்து சபாக்களுக்கும் என் நன்றி

ஊடகங்களில்..எங்களது நாடகங்களை விமர்சனம் செய்த கார்த்திக், சேரா , சாருகேசி(தினமணி), வீயெஸ்வி (விகடன், அமுத சுரபி, தமிழ் இந்து), கீழாம்பூர் (தினமணி, கலைமகள்) பாலகோபால் (தினமலர்)., மக்கள் குரல் (ராம்ஜி), ராமமூர்த்தி (இந்தியன் எக்ஸ்பிரஸ்) , பாலசுப்ரமணியம், கௌசல்யா சந்தானம், கீதா வெங்கட்ரமணன் (தி ஹிந்து) மற்றும் அனைத்து விமர்சகர்களுக்கும் நன்றி

(அடுத்த பதிவுடன் முற்றும்)


No comments: