Wednesday, October 24, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் பார்வை - 1 (பகுதி 3)



காத்தாடியின் குழுவில் அவருடன் நடித்து வந்த, T D சுந்தரராஜன், டெல்லி கணேஷ், ராமபத்ரன், மணக்கால் மணி, சுந்தரராஜன்(ரெயில்வேஸ்), பம்மல் பாச்சா, மேகலா, ஸ்ரீ லலிதா, எஸ் என் பார்வதி என அனைவரும் மிகவும் திறமைசாலிகளாய் திகழ்ந்தனர்

பின்னர்

எஸ்.லட்சுமி நாராயணன் . சென்னை டெலிஃபோன்சில் அதிகாரியாய் பணிபுரிந்து வருபவர்.

அவர், காத்தாடிக்கு  நாடகங்கள் எழுத ஆரம்பித்தார் எஸ் எல் நாணு என்ற பெயரில்..

அவரின் சில நாடகங்கள்..

"நீங்க யார் பக்கம்" 'அப்பா..அப்பப்பா', சூப்பர் குடும்பம், ஐக்கிய முன்னணி, பிள்ளையார் பிடிக்க, வாட்ஸ் அப் வாசு, நினச்சது ஒன்னு,  நீயா நானா,வீடு வரை உறவு ,நன்றி மீண்டும் வாங்க,ஏ டி எம்.,ஜுகல் பந்தி ஆகியவை அவற்றில் சில

நாணுவும் உடன் நடித்தார்.அவரைத் தவிர்த்து எஸ்பி ஐ முரளி, ஸ்ரீனிவாசன், லாவண்யா வேணுகோபால் ஆகியோர் இன்று காத்தடியுடன் நடித்து வருபவர்கள்

இவரது நாடகக்குழு 53 ஆண்டுகளில் 47க்கும் மேற்பட்ட நாடகங்களை அரங்கேற்றியுள்ளனர்.கிட்டத்தட்ட 7500 முறை இவரது நாடகங்கள் நடந்துள்ளன.

கலைமாமணி, நாடகக் கலா சிரோன்மணி,நாடக சூடாமணி, நாடக ரத்னம் ஆகியவை இவர் வாங்கியுள்ள கணக்கில்லா விருதுகளில் சிலவாகும்

சங்கீத நாடக அகடெமி இவருக்கு சமீபத்தில் அம்ரித் விருது வழ்னகியுள்ளது 

மேடை நாடகங்களைத் தவிர்த்து இதுவரை காத்தாடி 70படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

நட்புக்கு முதலிடம் கொடுப்பவர் காத்தாடி.அதற்கான ஒரே ஒரு உதாரணம்..

இவருடன் இணைந்து ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் குழுவினை ஆரம்பித்த இவர் நண்பர் Bobby  மறைந்தாலும், இன்னமும் அறிவிப்புகளில் நாடகத் தயாரிப்பாளர்கள் பெயர் சொல்லும் போது அவரையும் சேர்த்தே சொல்லுவார்

தன் குழுவினைத் தவிர பிறக் குழுவினருக்கும் அவ்வப்போது ஆபத்பாந்தவனாய் நடித்து உதவுவார் காத்தாடி.

ஸ்ரத்தா குழுவினருடன் இவர் இணைந்துள்ளார்.அந்த நாடகங்களிலும் சிலவற்றில் நடித்துள்ளார்.

ராதுவின், கல்யாணத்தில் கலாட்டா நாடகத்திலும் நடித்துக் கொடுத்துள்ளார்

சமீபத்தில் கோமல் சுவாமிநாதனின் மகள் தாரிணி கோமல் , தன் தந்தை பெயரில் கோமல் தியேட்டர்ஸ் என்ற குழுவினைத் தொடங்கி, பிரபல் எழுத்தாளர்களின் சிறுகதைகளை மேடையேற்றினார்

அவற்றில் ஒன்று தி ஜானகிராமனின் "விளையாட்டு பொம்மைகள்" சிறுகதை.அதில் காத்தாடி நடித்துக் கொடுத்தார்.

இமாலய நடிகரான அவரின் நடிப்பு இந்நாடகத்தில் சிகரத்தைத் தொட்டது எனலாம்.

நகைச்சுவை நடிகன் ஒருவனால் எந்த பாத்திரத்திலும் சிறப்பாக நடிக்க முடியும் என நான் அடிக்கடி என் குழுவினருக்குக் கூறுவேன்.

அது, எந்த அளவிற்கு உண்மை என்பது இந்நாடகத்தில் காத்தாடியின் நடிப்பைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்

காத்தாடி மேன் மேலும் பறந்திட நம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோமாக

(அடுத்த பகுதி..அடுத்தவீட்டு இரண்டாம் ஜன்னல் பார்வை) 

No comments: