Saturday, October 13, 2018

நாடகப்பணியில் நான் - 85


எனது புயல் கடந்த பூமி நாடகத்தில் நடித்தவர்கள்..

மணிபாரதி, பி டி ரமேஷ் ஆகியோருடன் சுவாதி என்ற நடிகையும் பிரதான பாத்திரமேற்று நடித்தார்.

நாடகம்  ஒரு சிறிய சஸ்பென்ஸைக் கொண்டது.சௌம்யா குழுவிற்காக எழுதி வந்த பரத், தனக்கென தனிக் குழுவினை ஆரம்பித்ததால், சௌம்யாவிற்காக எழுத நேரம் அவருக்குக் கிடைக்கவில்லை. அதனால்  நான் எழுதுகோலை கையில் ஏந்தினேன்.

முன்னதாக சபா நடத்திய போது, ஆண்டுவிழாவிற்காக நான் "தேவை ஒரு மாப்பிள்ளை" என்ற நாடகத்தை எழுதியிருந்தாலும், எனது முதல் அதிகாரப்பூர்வமான நாடகம் "புயல் கடந்த பூமி" எனலாம்.

நாடகத்தில் மணிபாரதி எதற்காக அப்படி நடந்து கொள்கிறார்?அவரின் செயல்கள் ஏன் மர்மமாக உள்ளன? என்பது ஆவலைத் தூண்டுகிறது என இந்தியன் எக்ஸ்பிரஸ் தன் விமரிசனத்தில் எழுதியிருந்தது

மேலும் இந்நாடகத்தில் நகைச்சுவைப் பாத்திரத்தை ஓமகுச்சி நரசிம்மன் ஏற்றார்.அவரால் நடிக்க இயலாமல் போன நாட்களில் பொன்மலை சுந்தர் நடித்துக் கொடுத்தார்.

நாட்கம் மாபெரும் வெற்றி நாடகமாக சபாக்களில் வலம் வந்து, என்னை நாடக ஆசிரியராக அங்கீகரித்தது.அதன் பின் இந்நாள் வரை 25க்கும் மேற்பட்ட நாடகங்களை நான் எழுதிவிட்டேன்.

ஆனாலும், முதல் குழந்தைக்கு சற்று செல்லம் அதிகம்தானே.எனது "புயல் கடந்த பூமி"யும் எனக்கும் அப்படியே 

No comments: