Monday, October 22, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 1

(நம் வீட்டில் ஆயிரம் குற்றம் ,குறைகளை வைத்துக் கொண்டு..அடுத்தவீட்டு ஜன்னல் வழியே..அந்த வீட்டு வம்புகளை அறியும் ஆவல், சாதாரணமாக அனைவருக்கும் உண்டு.ஆனால்..இத்தொடர்..மற்ற நாடகக் குழுக்களின் சாத்னையாள நண்பர்களைக் குறித்த விவரங்களை அளிப்பது.பல இளைஞர்களுக்கு இது பலனளிக்கும் என்று எண்ணுகின்றேன்)




காத்தாடி ராமமூர்த்தி....

1953ஆம் ஆண்டு கும்பகோணத்தில் பாணாத்துறை உயர்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பை முடித்த சுந்தரேச ராமமூர்த்தி, மேலே படிக்க சென்னை வந்தார்.

விவேகானந்தா கல்லூரியில் சேர்ந்தார்..

கல்லூரியில், முதலாம் ஆண்டு முடிவில் ஆண்டு விழாவில், அமரர் தேவனின் "கோமதியின் காதலன்" நாடகம் நடந்தது.அதில் வரும் வில்லன் பக்கிரிக்கு அடியாள் வேடத்தில் நடித்தார் ராமமூர்த்தி.

அவருடன், கல்லூரித் தோழர்களான ஜெயஷங்கர், அம்பி (சோ அவர்களின் சகோதரர்) ஆகியோரும் அந்நாடகத்தில் நடித்தனர்


பின் ஒருநாள் ராமமூர்த்தி ஆர் ஆர் சபாவின் செயலாளராய் இருந்த நடேச ஐயரை சந்தித்தார்.அப்போது, பிரபல எழுத்தாளர் பகீரதன் தனது "தேன்மொழியாள்" நாவலைப்பற்றி அவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.பகீரதன்.

உடனே, நடேச ஐயர், ராமமூர்த்தியிடம் "தேன்மொழியாள்' நாவலை நாடகம் ஆக்க முடியுமா? என்று பார்" என்றார்.

ராமமூர்த்தியும், அப்போது ஆல் இந்தியா ரேடியோவில் . குழந்தைகள் நிகழ்ச்சிகள் தயாரித்து, அனைவராலும் "ரேடியோ அண்ணா" என்று அழைக்கப்பட்ட கூத்தபிரானிடம் (இயற்பெயர் நடராஜன்) இதைச் சொல்ல..அவர் இயக்கத்தில் தேன்மொழியாள் மேடை நாடகமாக்கப்பட்டது.

"சோ" இந்நாடகம் மூலமே மேடைக்கு அறிமுகமானார்.தவிர்த்து இந்நாடகத்தில் அவரின் பாத்திரத்திற்குப் பெயர்"சோ'. அதுவே பின்னாளில் அவரின் பெயராகவும் ஆனது

ராமமூர்த்தி, இந்நாடகத்தில் பண்ணையாருக்கு உதவியாளராக நடித்தார்

1959ல் சோவின் "If I Get it"( என்னிடம் கிடைத்தால்) என்ற நாடகம் மேடையேறியது

அதில் வந்த மூன்று பாத்திரங்கள்

இடும்பன் என்ற பத்திரிகை ஆசிரியர்
ஆட்டாம்பாம் என்ற உதவி ஆசிரியர்
கார்ட்டூனிஸ்ட் காத்தாடி

இதில் கார்ட்டூனிஸ்ட் காத்தாடி பாத்திரத்தில் ராமமூர்த்தி நடித்தார்.

இந்நாடகத்திற்குப் பின்னர் அவர் "காத்தாடி"ராமமூர்த்தி என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

பின் சம்பவாமியுகே யுகே நாடகத்தில் காசி என்ற பாத்திரத்தில் நடித்தார்

(ஜன்னலின் முதல் பார்வை தொடரும்)

No comments: