Monday, October 8, 2018

நாடகப்பணியில் நான் - 80



பள்ளி நாட்களிலிருந்து நான் நடித்து வந்தாலும், 1979ல் சௌம்யா நாடகக்குழுவினை ஆரம்பித்து 40 ஆண்டுகளாக .வங்கிப் பணியிடையே நாடகப்பணியும் ஆற்றி வருகின்றேன் நான்.

 26 நாடகங்களை மேடையேற்றியுள்ளேன் நான்.
என் நாடகத்தில் நடித்த பலரைப் பற்றி சிறு  குறிப்புகளை எழுத இருக்கின்றேன்.

இந்நிலையில்..இளைஞர்களை அதிகம் தமிழ் நாடகங்களில் புகுத்த வேண்டிய நேரம் இது என்பதை உணர்ந்து...என் நாடகங்கள் உட்பட சில நாடகங்களில் நடித்து வரும் கிரீஷ் வெங்கட்,அம்பி நாகராஜன் இருவருக்கும் நாடகக்குழு ஒன்றினை ஆரம்பிக்கும் ஆரவம் இருப்பதை அறிந்து அவர்களை ஊக்குவித்தேன்.

பிரசித்தி கிரியேஷன்ஸ் என்ற நாடகக் குழுவினை அவர்கள் ஆரம்பித்தனர்.

முதல் நாடகமாக நான் எழுதிய "பௌர்ணமி நிலவில்" நாடகத்தை அவர்களே இயக்கி மேடையேற்றினர்.

நாடகம் பார்த்த அனைவரின் பாராட்டுதல்களுடன் நாடகம் தமிழ் மேடைகளில் நடைபெற்று வருகிறது.

நாடகத்தில் நடித்த அனைவரும் இளைஞர்கள்.அவர்கள் அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலம் அமைய வாழ்த்துகள்

No comments: