Friday, October 5, 2018

நாடகப்பணியில் நான் - 77

"என்றும் அன்புடன்" நாடகத்திலிருந்து மேலும் சில வசனங்கள்.

1) அப்பா - இவன் சின்னப்பையனா இருந்தப்போ..ஆஃபீஸ் போயிட்டு வரும் எனக்கு உடம்பு ரொம்ப வலிக்கும்.அப்ப இவன் மிதி மிதின்னு மிதிச்சு என் வலியைப் போக்குவான்.தலையிலிருந்து கால் வரை உருளுவான்.அப்போ அது அவனுக்கு விளையாட்டு.எனக்கோ சுகம்.ஆனா, இன்னிக்கு..இப்ப என் உடம்புல வலியில்லை.மனசுல வலி.அன்னிக்கு என்னை மிதிச்சு வலியைப் போக்கியவன், இன்னிக்கு மதிச்சு வலையைப் போக்க முன் வரல்லே

2)மனுஷனுக்கு உடம்பு ஆரோக்கியமா இருக்கறப்போ தன்னம்பிக்கை இருக்கு.உடம்பு பலவீனமானதும்..மனசும் பலவீனமாயிடுது

3)Father is the person who lost everything to make the son win

4)மகன் - என் வாழ்நாள் பூரா என்னோட இருக்கப்போற உறவை என் விருப்பத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுக்கற உரிமைக் கூட எனக்கு இல்லையா

மாமா- உன் வாழ்க்கையா.உன்னோட அந்தஸ்து, செல்வாக்கு, பணம் ,கௌரவம் அத்தனைக்கும் அஸ்திவாரமான அசுர உழைப்பு உங்கப்பாவோடது

5)கோழி மிதிச்சு, குஞ்சுகள் முடமாகாது..உண்மைதான்...ஆனா இன்னிக்கு குஞ்சுகள் மிதித்து கோழிகள் முடமாகின்றன

6)இனிமே யாரையாவது நல்லவன்னு சொல்லணும்னா அவன் பேரு நல்லவனாயிருக்கணும்

7) ஆடி அடங்கும் வாழ்க்கை..ஆறடி நிலம்தான் சொந்தம்னு சொல்லுவாங்க.ஆனா..இன்னிக்கு..அடங்கி முடிஞ்சதும் ஒரு கையளவு சாம்பல்தான் மிச்சம்.அதையும் கடல்ல கரைச்சுடறோம்

8) கோபம் எப்பவுமே தன் பக்க நியாயங்களையே யோசிக்கும்.எதிராளியோட நியாயத்தைப் புரிஞ்சுக்காது

9) தன்மானத்துக்காக எதையும் இழக்கலாம்.ஆனா..எதுக்காகவும் தன் மானத்தை இழக்கக் கூடாது

10) உங்கள் பெற்றோரை அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குகள்.இறந்தபின் அவர்கள் கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை

11) கொண்டு செல்ல ஒன்றும் இல்லை இந்த உலகில்...கொடுத்துச் செல்வோம் உண்மையான அன்பையும், நட்பையும்   

No comments: