Monday, October 29, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 4 (பகுதி-1)



---------------------------------------------------
சாம்பு நடராஜன்/ கே எஸ் நாகராஜன்
-----------------------------------------------------------


சாம்பு நடராஜ ஐயர், கே எஸ் நாகராஜன் மற்றும் ஒய் ஜி பார்த்தசாரதி ஆகிய மூவரும் சென்ற நூற்றாண்டில் 1950க்கு பிறகு நாடக வளர்ச்சிக்கு ஆற்றிய தொண்டு சிறப்பானது.

அதில், சாம்பு நடராஜ்ன மற்றும் கே எஸ் நாகராரான் ஆகியோர்..
திருவல்லிக்கேணி இளைஞர்கள் சிலருடன் சேர்ந்து 1946ல் Triplicane Fine Arts  என்ற குழுவைத் தொடங்கினர்.

இருவரும் சேர்ந்து பல நாடகங்களைத் தயாரித்தனர்.முன்னதாக கே எஸ் நாகராஜன் பம்மல் சம்பந்த முதலியாரின் "வேதாள உலகம்""மனோகரா" ஆகிய நாடகங்களில் நடித்தவர்.அரசுப்பணியில் இருந்தபடியே நாடகப்பணியும் ஆற்றினார்,

தேவன், சாண்டில்யன், சாவி, வித்துவான் லட்சுமணன்.மெரினா, கல்கிதாசன், அனுராதா ரமணன்,சுஜாதா ஆகியோர் எழுதிய நாடகங்களை இருவரும் மேடையேற்றினர்.மெரினாவின் தனிக்குடித்தனம், ஊர் வம்பு,கால்கட்டு, வடபழனியி வால்மீகி, ஆகிய நாடகங்களும், சாவியின் வாஷிங்டனில் திருமணம் நாடகம் இன்றளவும் பேசப்படும் நாடகங்களாக உள்ளன.

வீரராகவன், (மேஜர்) சுந்தரராஜன், பூர்ணம் விஸ்வநாதன்.ஜெமினி மகாலிங்கம், மணக்கால் மணி, கூத்தபிரான், சந்திரசேகரன்(சந்துரு) ஆகியோர் இவர்களால் உருவாக்கப்பட்ட சில பிரபல நடிகர்களாவர்கள் .(கூத்தபிரான் பற்றி தனியாக பதிவு வருவதால்..இதில் அதிகம் குறிப்பிடவில்லை)

(அடுத்த வீட்டு ஜன்னல் 4 (பகுதி 2) தொடரும்.  

No comments: