Sunday, October 21, 2018

நாடகபப்ணியில் நான் - 93

எங்கள் நாடகத்திற்கு..நடிகர்களுக்கு கிடைத்த விருதுகள் சில...

சிறந்த நாடகத்திற்கான மயிலாப்பூர் அகடெமி விருது

1)புதியதோர் உலகம் செய்வோம்
2) உயிருள்ள இறந்த காலங்கள் (சான்றிதழ்)
3) குடும்பம் ஒரு சிலம்பம்
4)இறைவன் கொடுத்த வரம் (கருத்துள்ள நாடகம்)

புதியதோர் நாடகத்தில் நடித்த ஏ எஸ் ராதாகிருஷ்ணனுக்கு சிறந்த நடிகருக்கான சான்றிதழ்

உயிருள்ள இறந்த காலங்கள் நாடகத்தில் நடித்த பி டி ரமேஷிற்கு சிறந்த நடிகருக்கான சான்றிதழ்

குடும்பம் ஒரு சிலம்பம் நாடகத்தில் நடித்த காவேரிக்கு சிறந்த நடிகைக்கான விருது

இறைவன் கொடுத்த வரம் நாடகத்தில் நடித்த பி டி ரமேஷிற்கு சிறந்த நடிகருக்கான விருது.ஃபாத்திமா பாபுவிற்கு சிறந்த நடிகைக்கான விருது.(இவ்விருவருக்கும் இதே நாடகத்திற்குகோடை நாடக விழாவில் சிறந்த நடிகர்/
நடிகைக்கான விருது)

ரமேஷிற்கு நூல்வேலியில் நடித்ததற்கான கோடை நாடகவிழாவில் சிறந்த நடிகருக்கான பரிசு

சொல்லக் கொதிக்குது நெஞ்சம், என்று தணியும், கறுப்பு ஆடுகள்,காத்தாடி ஆகிய நாடகங்களில் நடித்த ஜெயசூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான விருது நான்கு நாடகங்களுக்கும்

கரூர் ரங்கராஜனுக்கு பாரதரத்னா வில் நடித்தமைக்கான சிறந்த நடிகருக்கான விருது மற்றும் சொல்லக் கொதிக்குது நெஞ்சம் நாடகத்தில் நடித்தமைக்கு சிறந்த நடிகருக்கான விருது

எனக்கு..நடிப்பிற்கு..பாரத ரத்னா, மாண்புமிகு நந்திவர்மன்,என்றும் அன்புடன் நாடகங்களுக்கானகோடை நாடக விழா விருதுகள்

பாரதரத்னா,சொல்லக் கொதிக்குது நெஞ்சம், கறுப்பு ஆடுகள், மழையுதிர்காலம் ஆகிய நாடகங்களுக்கு சிறந்த எழுத்தாளர் விருது..கோடை நாடக விழாவில்

சொல்லக்கொதிக்குது நெஞ்சம் சிறந்த நாடகம், இயக்கத்திற்கான விருது

காயத்ரி மந்திரம் நாடகம் சிறந்த நாடகத்திற்கான பாலாஜி ஃபைன் ஆர்ட்ஸ் விருது

சிவகாசி ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் குடும்பம் ஒரு சிலம்பம் நாடகத்திற்கு சிறந்த நாடகத்திற்கான விருது

எனக்கு மைலாப்பூர் அகடெமியினரின் சிறந்த ஆல்ரவுண்டர் விருது கறுப்பு ஆடுகள் நாடகத்திற்கு

வெடெரன் விருது மைலாப்பூர் அகடெமியினரால்

எக்செல்லன்ஸ் விருது ராதுவின் நாடக அகடெமி சார்பில்

டி கே எஸ் கலைவாணன், டி கே ஷ்ண்முகம் அவர்களின் நூற்றாண்டு விழாவில் அளித்த "நாடகச் செல்வம்" விருது

பாரத ரத்னா நாடகத்திற்கு இலக்கியச் சிந்தனை விருது

கடைசியாக...

சாதாரணமாக ஒர் மேடை நடிகன் மேடையில் நடித்துக் கொண்டிருக்கும் போதே உயிர் போக வேண்டும் என்பான்..

அதில் எனக்கு உடன்பாடில்லை..

அவன் நேசிக்கும் மேடை ஏன் அப்பழியை ஏற்க வேண்டும்?

ஆகவே..

நான் விரும்புவது..

உடலில் நாடகப்பணியாற்றிடும் தெம்பு இருக்கும் நேரத்திலேயே..முடிவும் வந்துவிட வேண்டும் என்பதே!

இத்தொடரை விரும்பிப் படித்து தொடர்ந்து ஆதரவு அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

(முற்றும்)



No comments: