Monday, October 15, 2018

நாடகப்பணியில் நான் - 87



எனது அடுத்த காயத்ரி மந்திரம் நாடகத்தில் நடித்தவர்கள்

மணிபாரதி, ரமேஷ், நான், மற்றும் பிரேமா என்ற நடிகை.

பிரேமா...டி எஸ் சேஷாத்ரி நாடகத்தில் நடித்து வந்தவர்.தவிர்த்து அவ்வப்போது யூஏஏ நாடகங்களிலும் நடித்துள்ளார்.

எனது , "காயத்ரி மந்திரம்" நாடகத்தில் காயத்திரியாக நடித்தார்.நாடகத்தில் முக்கியப் பாத்திரம் .மிகச் சிறந்த நடிப்பு.

அவரைத் தவிர்த்து, ரிசர்வ் பேங்கில் வேலை செய்து வந்த ஸ்ரீனிவாச ராவ் என்பவரும் குணசித்திர வேடம் ஒன்றை ஏற்றார்.நாடகவெற்றிக்கு இவரும் ஒரு காரணம் எனலாம்.

பிரேமாவின் மகள் தேவிலலிதா என்பவர் நாயகியாக இந்நாடகம் மூலம் அறிமுகமானார்.

பின்னர், இவர் சில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பினையும் பெற்றார்

பாலாஜி ஃபைன் ஆர்ட்ஸ் அந்த ஆண்டு மேடையேறிய நாடகங்களில் இந்நாடகத்தை சிறந்த நாடகமாக தெர்ந்தெடுத்தது.

சிறந்த நாடகங்களுக்கான சுழல் கோப்பையினை பெற்றோம்.இதில் என்ன விஷேசம் எனில்..அக்கோப்பையை 'சௌம்யா" குழு வினர் தான் ஆண்டு தோறும் சிறந்த நாடகங்களுக்கு அளிக்க ஸ்பான்சர் செய்தது.

இந்நாடகமும் ஒரு வெற்றி நாடகமாக சௌம்யாவிற்கு அமைந்தது .

No comments: