Thursday, October 18, 2018

நாடகப்பணியில் நான் - 90

வார்த்தை தவறிவிட்டாய் என்ற நாடகத்தில் பல புது நடிகர்கள் நடித்தனர்.

அவர்களுடன் நான், மணிபாரதி நடித்தோம்.உடன் ஷீலா கோபி என்றநடிகை , அம்மா, மகள் என இரு வேடத்தில் நடித்தார்.

அடுத்து எங்களது நாடகம் "பாரத ரத்னா" .இந்நாடகத்தில் கரூர் ரங்கராஜன் முக்கிய வேடம் ஏற்றார்.நானும் ஒரு நகைச்சுவை வேடத்தில் நடித்தேன்

தவிர்த்து,"ரசா" சுந்தர், சுவாமிநாதன் ஆகியோர் நடித்தனர்.

மாபெரும் வெற்றி நாடகமாக இது அமைந்ததுடன், பல விருதுகளையும் பெற்றுத் தந்தது.

அடுத்து அரங்கேறியது "சொல்லக் கொதிக்குது நெஞ்சம்".கரூர் ரங்கராஜன், முத்து சுப்பிரமணியம், நான் ஆகியோர் முக்கியப் பாத்திரத்தில் நடித்தோம்.

தலித் பிரச்னை, விவசாயிகள்  பிரச்னை, நதி நீர் பிரச்னை ஆகியவற்றை மையமாகக் கொண்ட கிராமத்து கதை இந்நாடகம்.

இந்நாடகமும் பல பரிசுகளை வென்றது 

No comments: