Saturday, April 7, 2018

ஒய்ஜிபியும் யூஏஏ வும் - 5



தந்தை ஒய்ஜிபி தாய் ராஜம்மா மகன் மகேந்திரன் ஆகியவர்களின் நாடகப் பற்றிற்கு சற்றும் குறைந்ததில்லை மகேந்திரனின் மனைவியின் நாடகப் பற்று.
மகே ந்திரனின் குடும்பமும், சுதாவின் குடும்பமும் நீண்ட நாட்களாக குடும்ப நண்பர்கள்.
சுதாவும், சுதாவின் சகோதரி லதாவும் பத்ம க்ஷேசாத்ரி பள்ளியில் படித்து வரும் காலத்திலேயே, மகேந்திரன் நடத்திவந்த இசைக்குழுவின் பாடகர்கள்
பின் , திருமணம் முடிந்ததும், சுதாவிற்கு ஏர் இந்தியாவில் வேலை கிடைக்க, வசதியான அக்குடும்பத்திற்கு வேலை க்குப் போக வேண்டிய அவசியமில்லை.ஆனாலும், பெண்கள் சுதந்திரத்தில் தலையிட விரும்பாத ஒய்ஜிஎம், உனக்கு விருப்பமானால் வேலைக்குச் செல் என்றாராம்.

ஒய்ஜிபி , ராஜம்மாவிடம், திருமணமானதும், சமையலறை வேலையே வேண்டாம், வேறு சமுதாய நலப்பணி செய் என்று சொன்னது ஞாபகம் வருகிறதா?

மகேந்திரனும், பெண் சுதந்திரத்தில் அபப்டியே நடந்துக் கொண்டது..
"விதை ஒன்று விதைத்தால் சுரை ஒன்று முளைக்காது" என்ற சொலவடைக்கு ஏற்றார் போல் இருக்கிறது அல்லவா.

அதனால்தான் சுதாவினால் பின்னர் B.Ed., M.Ed., பட்டங்களை பின்னர் வாங்கி, பள்ளி நிர்வாகத்தில் திறம்பட பணியாற்ற முடிந்தது

பின், மலேசியாவில் ஒருசமயம் மகேந்திரனின் "ரகசியம் பரம ரகசியம்" நாடகம் நடைபெற்ற போது சுதாவும் அதில் நடித்தார்.குழ்ந்தை மதுவந்திக்கு ஒரு வயது
நாடகத்தன்று food poison ஆல் குழந்தைக்கு  உடல்நலம் சரியில்லாமல் போயிற்று.மருந்து, மாத்திரைகள்  கொடுத்து, குழ்ந்தையைப் பார்த்துக் கொண்டே , மேடைக்கு ஓடிப் போய் காட்சியில் நடித்து முடித்து, திரும்ப ஓடி வந்து குழந்தையைப்  பார்த்துக் கொண்டார் சுதா.
அவருக்கு நாடகங்களின் பால் உள்ள ஈர்ப்புக்கு இந்த ஒரு உதாரணம் போதும் அல்லவா?

நேர்மை, வேலையில் ஈடுபாடு, கடின உழைப்பு,முழுமையான சுதந்திரம் என பள்ளி நாட்கள் முதல் இன்றுவரை நடந்துவரும் மகேந்திரனையே , குடும்பமும் பின்பற்றிவருவதால்தான், மதுவந்தியும், பள்ளிநிவாகத்தையும், நாடக நடிப்பையும் இன்று வெற்றிகரமாக செய்து வருகிறார் 

No comments: