Monday, April 30, 2018

ஒய்ஜிபியும் யூஏஏவும் - 35

அத்தியாயம் - 35
(இரண்டாம் ரகசியம் நாடக டிவிடியை ரஜினி வெளியிட்டபோது)
2013ல் மகேந்திரன் இயக்க வெங்கட் எழுதிய "இரண்டாம் ரகசியம்" நாடகம் அரங்கேறியது.65 முறை நடந்தது
ஒரு ரயில் நிலையத்தில் ,புயல் காரணமாக ரயில் வர தாமத கிறது.அதனால் வையிட்டிங் அறையில் மூவர் தங்க நேரிடுகிறது
இந்த மூவர்தான் நாடகத்தில்  முக்கிய கதாபாத்திரங்கள்.அவர்கள்-
அரசியல்வாதி (ஒய்ஜிஎம்)
குடும்பத்தலைவி ஒருத்தி
இதய மருத்துவர்
தவிர்த்து அதே அறையில் தற்கொலை செய்து கொண்ட ஆவி ஒன்று இரவு வரும் ..பயமுறுத்தும்
இதயமருத்துவருக்கும்ம்,குடும்பத்தலைவிக்கும் மட்டுமே ஆவி தெரியும்.அது அவர்களின் அந்தரங்கத்தையும் சொல்கிறது.பின்னர் அது அரசியல்வாதிக்குத் தெரியும்போது மற்றவருக்குத் தெரியவில்லை.
மர்மங்கள் நிறைந்த நாடகமாக அமைந்தது எனலாம்.
இந்நாடகத்தில் ஆவியாக நடித்தவர் ஐஸ்வர்யா ஆகும்.
ருக்மணி , லட்சுமி(கண்ணன் வந்தான்) ஐஸ்வர்யா என மூன்று தலைமுறையினரும் யூஏஏவில் நடித்துள்ளனர்.
ரயில்வே நிலையம், தூரத்துத் தெரியும் பகவதி கோயில் என அரங்க அமைப்பும் சிறப்பு

No comments: