Monday, April 16, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ்

இதர உதர உவமை

ஒரே பாடலில் உவமேயத்தை உவமானமாகவும், உவமானத்தை உவமேயமாகவும் தொடர்ச்சியாகக் கூறுவது இதர உதர உவமை ஆகும்.
அதாவது, முதலில் உவமானமும்,உவமேயமுமாகச் சொல்லுதல்.இவ்வாறு சொல்வதன் நோக்கம், இப்பொருளுக்கு ஒப்புமையாகக் கூடிய மூன்றாவது பொருள் எதுவும் இல்லையென குறிப்பது ஆகும்
இதர விதுரம் என்ற தொடருக்கு ஒன்றிற்கொன்று எனப் பொருள்

களிக்கும் கயல்போலும் நும்கண்: நும்கண்போல்
களிக்கும் கயலும்: கனிவாய்த் தளிர்க்கொடியீர்:
தாமரைப்போல் மலரும் நும்முகம்:நும்முகம்போல்
தாமரையும் செவ்வி தரும்

தளிரோடு கூடிய கொடி போன்ற நங்கையீர்"கயல் மீன்களைப் போல நும் கண்கள் களிக்கின்றன.நும் கண்களைப் போலக் கயல் மீன்களும் களிக்கின்றன.தாமரைப்போல நும் முகம் மலர்ந்துள்ளது.நும் முகம் போல தாமரையும் மலர்ந்து அழகு தருகின்றது

No comments: