Thursday, July 17, 2014

குறுந்தொகை - 44




செவிலித்தாய் கூற்று
(தலைவி தலைவனுடன் போனபின்பு அவர்களைப் பாலை நிலத்தில் தேடிச் சென்ற செவிலி அவர்களைக் காணாமல் வருந்திக் கூறியது.)

பாலைத் திணை - பாடலாசிரியர் வெள்ளி வீதியார்

இனி பாடல்-


 
காலே பரிதப் பினவே கண்ணே
   
நோக்கி நோக்கி வாளிழந் தனவே
   
அகலிரு விசும்பின் மீனினும்
   
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.

                                வெள்ளி வீதியார்

உரை-

என் கால்கள் நடந்து நடந்துநடை ஓய்ந்தன.இணைந்து எதிர் வருவாரைப் பார்த்து என் கண்கள் ஒளியை இழந்தன.நிச்சயமாக இந்த உலகத்தில் என் மகளும், அவள் தலைவனும் அல்லாத பிறர், அகன்ற பெரிய வானத்திலுள்ள மீன்களைக் காட்டிலும் அதிகம் உள்ளனர்.


 (தலவியையும், தலைவனையும் நான் காணவில்லை)

தலைவனையும், தலைவியையும் தேடிச் சென்ற செவிலித் தாய்க்கு இணையாக வரும் பலர் தெரிகின்றனர்..ஆனால் தன் மகளையும், தலைவனையும் தெரிவதில்லை.



No comments: