Thursday, July 31, 2014

குறுந்தொகை - 62


தலைவன் தனக்கே சொல்லிக்கொண்டது
(இயற்கைப்புணர்ச்சிக்குப் பின் தலைவியோடு அளவளாவிய தலைவன் பிற்றைநாளில் முதல்நாள் கண்ட இடத்தில் அவளைத் தலைப்பட்டு இன்புற எண்ணித் தன் நெஞ்சை நோக்கி, "அவள் வாசமும், மென்மையும் நன்னிறமும் உடையள்; இன்றும் அவளைப் பெறுவேம்" என்று கூறியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் சிறைக்குடி யாந்தையார்

இனி பாடல்-

 
கோட லெதிர்முகைப் பசுவீ முல்லை
   
நாறிதழ்க் குவளையொ டிடைப்பட விரைஇ
   
ஐதுதொடை மாண்ட கோதை போல
   
நறிய நல்லோண் மேனி

முறியினும் வாய்வது முயங்கற்கு மினிதே.

                              -   சிறைக்குடி யாந்தையார்

   உரை -

காந்தள் மலரையும், அரும்பிலிருந்து உண்டாகிய செவ்விய மலர்களாகிய முல்லைப் பூக்களையும், மணக்கும் இதழ்களையுடைய குவளை மலர்களோடு இடையிடையே பொருந்தும்படி அழகிதாகத் தொடுத்த மாட்சிமைப்பட்ட மலையைப் போல நல்ல வாசத்தையுடைய தலைவியின் மேனியானது, தளிரைக் காட்டிலும் மென்மையும் நிறமும் பொருந்தியது, தழுவுதற்கும் இனியது.


(கருத்து) தலைவியை முன்பு தழுவி இன்புற்றதுபோல இப்பொழுதும் இன்புறுவேன்.

No comments: